Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 26 July 2015
இன்றைய புனிதர் 2015-07-26 புனித சுவக்கின், அன்னம்மாள் (St. Joachim and St. Anna) அன்னை மரியாவின் பெற்றோர்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் மரபு வழி செய்தியின்படி அன்னாவும், சுவக்கின் என்ப வர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் என்று கூறப்ப டுகின்றது. 6 ஆம் நூற்றாண் டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. 10 ஆம் நூற்றாண்டில் இப்பக்தி மிகுதியாக பரவியது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தி யைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான். 12 ஆம் நூற்றாண்டிலிருந்து அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்க ளின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 1568 ஆம் ஆண்டு புனித 5 ஆம் பயஸ் இவ்விழாவை, திருச்சபை பட்டியலிலிரு ந்து நீக்கினார். ஆனால் 1584 ஆம் ஆண்டு மீண்டும் உரோமை திருச்சபை புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந் தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். செப, தவ, ஒறுத்தல் கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந் தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment