Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 29 July 2015
இன்றைய புனிதர் 2015-07-30 புனித பீட்டர் கிறிசோலோகு (St.Peter Chrysologus)
இவர் 430 ஆம் ஆண்டு இராவென்னா என்ற நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நகரில் புகழ்மிக்க பணக்காரர்கள் வசி த்து வந்தனர். இதனால் உரோமை பேரரச ரால் அந்நகர் சுற்றி வளைக்கப்பட்ட கைப் பற்றப்பட்டது. அரசர் ஹோனோரியுஸ் (Honorius) என்பவரால் இராவென்னா மக்கள் துன்பப்படுத்த ப்பட்டார்கள். 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 50ஆண் டுகள் கொன்ஸ்டானிநோபிளில் வாழ்ந்த அரசன் ஒருவன், திருச்சபையைப்பற்றி தவறாக போதித்தான். இதனால் ஆயர் பீட்டர் இதனை சுட்டிக்காட்டி, தவற்றை திருத்திக்கொள்ள வேண்டுமென்று எச்சரித்தார். ஆயர் தன் மறைமாநிலம் முழுவ தும் மிக எளிமையான முறையில் திருப்பலி நிறைவேற்றி, பொருள் தரும் வகையில் சொற்பொழிவாற்றி மக்களின் மனங் களில் இடம்பிடித்தார். பின்னர் மிலான் மறைமாநிலத்திற்கு சென்று அங்கிருந்த சில பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். மீண்டும் இராவென்னா வந்த பிறகு, உரோமை அரசரின் கீழிரு ந்த தன்னுடைய மறைமாநிலத்தை, திருத்தந்தையின் அதிகார த்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அந்தியோக்கியா நகரிலிரு ந்த இறையியல் பள்ளிக்கு தேவையான சில புத்தகங்களை எழுதினார். இவரின் நூல்கள் அனைத்திலும் மரியன்னைக்கெ ன்று சிறப்பிடத்தை தந்துள்ளார். இதன் வழியாக இவர் அன்னை யின் மேல் எவ்வளவு பக்தி கொண்டவர் என்பதை அறியலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment