Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 14 July 2016

இன்றைய புனிதர் 2016-07-15 புனித பொனவந்தூர் (St. Bonaventure) ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)

     
  இன்றைய புனிதர் 2016-07-15
                  புனித பொனவந்தூர் (St. Bonaventure)
         ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)

பிறப்பு1218 தஸ்கனி ( Tuscany), இத்தாலி

இறப்பு 1274லயனஸ்(Lyons), பிரான்ஸ்

இவரின் திருமுழுக்கு பெயர் ஜான். இவர் 4 வயது இரு க்கும்போது கொடிய நோயால் தாக்கப்பட்டார். புனித அசிசியாரிடம் வேண்டிய பிறகு அவரின் நோய் அவ ரைவிட்டு விலகியது. இதனால் இவர் தன் இளம் வயதி லிருந்தே அசிசியாரிடம் அளவு கடந்த பக்திக்கொண்டி ருந்தார். தன் படிப்பை முடித்த பின், தன்னை புனித அசிசி சபையில் அர்ப்பணிக்க விரும்பினார். துறவற சபையில் தன்னை அர்ப்பணித்தபின், இவரின் 36 ஆம் வயதில், சபைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சபையை நன்கு வளர்த்தெடுத்தார். இவர் அச்சபைக்கு ஆற்றியத்தொண்டால், இவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார்.

இவர்தான் மூவேளை செபத்தை முதன்முதலில் தன் சபையில் அறிமுகப்படுத்தினார். இன்று இச்செபம் திரு ச்சபையிலும் வேரூன்றியுள்ளது. இவர் பலரின் கட்டா யத்தினால் அல்பேனிய நாட்டின் ஆயராகவும், கர்தி னாலாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 2 ஆம் லியோன் பொதுச் சங்கத்தில், சில கருத்துக்களை நுணுக்கமாய் ஆராய தயாரித்துக்கொடுத்தார். அப்போதுதான் கிழ க்கு, மேற்கத்திய திருச்சபைகளையும் ஒன்று சே ர்த்தார். லியோன் பொதுசங்கம் நடக்கும்போது, இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். திருத்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் இறையன்பு, செபம், காட்சி தியானம் இவைகளில் தன் நேரங்களை செலவிட்டார்.

இவர் ஒருநாள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிரு ந்தார். அப்போதுதான் திருத்தந்தை 10 ஆம் கிரகோரி யார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதை அறி விக்க, கர்தினாலின் தொப்பியையும் எடுத்து சென்று, செய்தியை அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் தன் வேலையை முடித்து வரும்வரை அத்தொப்பியை அருகிலிருக்கும் மரக்கிளையில் தொங்கவிட சொ ன்னார். இதிலிருந்து அவரின் தாழ்ச்சி எத்தமையது என்பது வெளிப்பட்டது.


செபம்:
என்றும் வாழும் கடவுளே! அசிசியாரை போலவே தன் வாழ்வை வாழ்ந்த புனித பொனவெந்தூரை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஏழை மக்க ளின்மேல், அளவில்லா அன்பு கொண்டு நோயால் தா க்கப்பட்டவர்களுக்காக தன்னையே அர்ப்பணம் செய்து நோய்களை அன்பின் வழியாக குணமாக்கிய இப்புனிதரை போல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் அன்புகாட்டி வழிநடத்த தேவையான வரம் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 13 July 2016

இன்றைய புனிதர்2016-07-14 புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis) குரு

           
    இன்றைய புனிதர்
2016-07-14

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis)

                                           குரு

பிறப்பு1550ஷீட்டி(Chieti), அப்ருட்சி(Abruzzi)

இறப்பு 1614 உரோம்

பாதுகாவல்: மருத்துவர்களின் பாதுகாவலர்

இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் தாயை இழ ந்தார். தந்தை இவரைவிட்டு அகன்று போனார். இத னால் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். 17 வயதில் துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு , ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவம னையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அப்போது கப்புச்சின் சபை குரு ஆ ற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது.

அதன்பின் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று விரு ப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்த உடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்ப த்தை தெரிவித்தார். அங்கு அவரின் விருப்பம் நிறைவே ற்றப்பட்டாலும் புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவ பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, தனது 34 ஆம் வயதில் குருவானார். அதன்பிறகு ஒரு சபையை நிறு வினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயா ளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைக ளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இ ச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நோயுற்றோர் மீது தனியன்பு கொண்டு கமில்லஸ் பணிபுரிந்தார். அவருடைய பரிந்துரையால் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மை அன்பு செய்து, எங்கள் இறப்பு வேளையில் நம்பிக்கையோடு உம் திருமுன் வந்து சேர அருள்புரியும்.

இன்றைய புனிதர் 2016-07-13 புனித இரண்டாம் ஹென்றி(St.Henry) அரசர்


         
இன்றைய புனிதர்2016-07-13

புனித இரண்டாம் ஹென்றி(St.Henry)

                                                  அரசர்

பிறப்பு973பவேரியா (Bavaria), ஜெர்மனி

இறப்பு1024பாம்பர்க்(Bamberg), ஜெர்மனி

புனிதர்பட்டம்: 1146, திருத்தந்தை 3 ஆம் யூஜின்

இவர் பவேரியா நாட்டு அரசராக 995 ல் உரோம் பேரர சின் மன்னராக 1002 ல் உயர்வுப்பெற்றார். திருச்சபை யின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் போர்களில் ஈடுபடத் தயங்காதவர். இவர் துறவற மடத் தலைவ ர்களையும், ஆயர்களையும் நியமனம் செய்யும் அதிகா ரத்தை பெற்றிருந்தார். இவரின் துணைவியாரும் புனித வாழ்க்கை வாழ்ந்து புனிதர் பட்டம் பெற்றார். உரோம் நகரில் ஏற்பட்ட கலகத்தை நசுக்க திருத்தந்தை 8ஆம் ஆசீர்வதிப்பருக்கு மன்னர் உறுதுணையாயி ருந்தார். இவர் மற்ற நாடுகளில் அமைதி நிலவ அரு ம்பாடுபட்டார்.

இவர் தன் நாட்டு மக்களுக்கு பின்வரும் இறைவசன த்தை அடிக்கடி கூறிவந்தார். "அழிந்து போகும் செல்வ த்தை துறந்துவிட்டு என்றும் அழியா, நிலையான செல்வத்தை வான்வீட்டில் சேர்த்து இடத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்" என்பதை மறக்கக்கூ டாது என்பார். இவ்வுலகில் நாம் பெறும் புகழ் புகை யாக மறைந்துவிடும். எனவே நிலையான பேரின்ப த்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தன் நாட்டில் கடவுளின் இரக்கத்தைப் பெற, பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார். அவற்றின் பராமரிப்பிற்காக செல்வங்களை வாரி வழங்கினார். பாக்பெர்கில்லிருந்து பணத்தை செலவிட்டார். இறுதி வரை இறைப்பணியாற்றி அவ்வாலய பணியி ன்போதே உயிர் துறந்தார்.


செபம்:
எல்லாம் வல்லவரே! அரசரான போதும் கூட, இவ்வுலக காரியங்களின் மேல் அக்கறை கொள்ளாமல், உம் மேல் அக்கறைகொண்டு வாழ்ந்தார் அரசன் ஹென்றி. தன் நாட்டு மக்களையும், விண்ணகத்தில் செல்வம் சேர்க்க தூண்டினார். இவரால் பவேரியா முழுவதும் இறைப க்தி பரவிற்று. இப்பக்தியானது அம்மக்களிடையே எப்போதும் நிலைக்க, அவர்களை வழிநடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 11 July 2016

இன்றைய புனிதர் 2016-07-12 புனித யோவான் குவால்பெர்டூஸ்(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்


                 
     இன்றைய புனிதர் 2016-07-12

புனித யோவான் குவால்பெர்டூஸ்

(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்

பிறப்பு995புளோரன்ஸ், Florence

இறப்பு1073, 12 ஜூன்டோஸ்கானா, Toscana

புனிதர் பட்டம்: 1193, திருத்தந்தை 3 ஆம் செலஸ்டின், Pope Cholestin III
இவர் ஓர் உயர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலி ருந்தே ஆன்மீக காரியங்களில் அக்கறை காட்டி வள ர்க்கப்பட்டார். தான் ஓர் துறவியாக வேண்டுமென்று இளம் வயதிலிருந்தே ஆசைப்பட்டார். தன் உறவினர் ஒருவரின் துணைகொண்டு, ஆன்மீக வாழ்வில் முன்னேறினார். அவரின் உதவியினால் துறவற சபை க்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் உதவி செய்தவரை குடும்பத்தில் உள்ளவர்கள் கொன்று போட்டார்கள். அவரோடு சேர்த்து யோவானின் உடன்பிறந்த சகோதர ரையும் கொன்றார்கள். ஆனால் யோவான் கொலை க்காரர் யார் என்று கண்டுபிடித்தார். கொலை செய்த வர் யோவானிற்கு பயந்தார். ஆனால் அவரோ கொலை காரரை மன்னித்து, பாவமன்னிப்பு பெறச்செய்து, தின மும் திருப்பலியில் பங்குபெறுமாறு மனமாற்றினார். அதன்பிறகுதான் துறவியாகும் முடிவை கைவிடாமல் புனித பெனடிக்ட் துறவற இல்லம் சென்று 1013 ஆம் ஆண்டில் துறவியானார்.

யோவான் பல ஆண்டுகள் துறவறமடத்தில் வாழ்ந்த பிறகு 1080 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி, புதி தாக ஒரு துறவற சபையை ஆரம்பித்தார். புனித பெனடிக்ட் துறவற சபை ஒழுங்குகளையே, புதிய சபை யிலும் கைபிடித்தார். இப்புதிய சபைக்கு “Vallombrosanerorden” என்று பெயர் சூட்டினார். பெனடிக்ட் துறவற சபையிலிருந்து பிரிந்தாலும் கூட அந்த கடின மான வாழ்வை தானும் வாழ்ந்து, தன் சபையில் இருந்த வர்களையும் வாழவைத்தார். துறவற இல்லத்தைவிட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என்ற சட்டத்தையும், இவ்வுலக வாழ்வை துறவற வாழ்வில் துறவிகள் ஒரு போதும் வாழக்கூடாது என்ற ஒழுங்கையும் கடினமாக கடைபிடிக்கக்கூறினார். பல துறவற இல்லங்களை தொடங்கிய யோவான் அவ்வப்போது இல்லங்களை தவறாமல் சந்தித்து, உற்சாகத்துடன் இறைவனின் பணியில் பங்குபெற துறவிகளை ஊக்கமூட்டினார். அவ்வாறு பார்வையிட டோஸ்கானாவில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக இறந்தார். இவ ரின் உடல் டோஸ்கானாவிலுள்ள இவரால் தொடங்க ப்பட்ட துறவற இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! ஏழுமுறை அல்ல மாறாக ஏழு எழுபதுமுறை மன்னிக்க வேண்டுபவரே! கொலை க்காரனை மன்னித்து, அன்பு செய்து உம்பால் ஈர்த்த புனித யோவானைப்போல, நாங்களும் பிறரை மன தார மன்னித்து, அன்பு செய்து உம் மகிழ்ச்சியில் நிலை யான பங்கு வகிக்க, உம் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Saturday, 9 July 2016

இன்றைய புனிதர் 2016-07-10 டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden

                      

இன்றைய புனிதர் 2016-07-10

டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden

இறப்பு 29 ஜூலை 1030

இவர் 1015 ஆம் ஆண்டில் தனது 20 ஆம் வயதில் நார்வே நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1014 ஆம் ஆண்டில் தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ ரானார். இவர் அரசரான 15 ஆண்டுகள் கழித்து, மிகவும் செல்வம் இருந்ததால் ஏழைகளிடம் பகிர்ந்து கொடு த்தார். ஏராளமான ஏழை மக்களுக்கு வழிகாட்டினார். தன் முழு வாழ்வையும் ஏழை மக்களுக்காகவே அர்ப்ப ணித்தார். மிஷினரி வேலை செய்து, கிறிஸ்துவை பர ப்ப, பல நாடுகளிலிருந்து கிறிஸ்துவர்களையும், துற வற குழுமத்தினரையும் தன் நாட்டிற்கு அழைத்தார். பல ஆலயங்களை கட்டினார். பலரை மனந்திருப்பி ஞானஸ்நானம் பெற சொன்னார். இதனால் எதிர் திரு ச்சபை மக்களால் 1028 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இவரின் உரிமைகள் அனை த்தும் பறிக்கப்பட்டது. பின்னர் அணுவணுவாக துன்பு றுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரின் கல்ல றை நார்வே நாட்டில் உள்ளது. இவரின் பெயரால் அந்நா ட்டில் பெரிய பெரிய பேராலயங்கள் கட்டப்பட்டுள்ளது.

எரிக் (Erich), ஸ்வீடன்

இறப்பு: 18 மே 1160, உப்சலா(Uppsala), ஸ்வீடன்
பாதுகாவல்: ஸ்வீடன் நாட்டின் பாதுகாவலர்
இவரும் மறைசாட்சியாளர் குன்ட் போலவே, ஆலய த்தில் திருப்பலி நேரத்தில் கொலை செய்யப்பட்டார். இவரும் தன் நாட்டில் மறைபரப்பு பணியை செய்து, மக்களை ஆன்மீகத்தில் வளர்த்தெடுத்தார். 1150 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டின் அரசராக இருந்தார். மறை ப்பணி செய்ததின் காரணமாக இவரும் கொலை செ ய்யப்பட்டார். ஸ்வீடன் நாட்டில் உப்சலா என்ற ஊரில் உள்ள பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது.

குன்ட் (Kund), டென்மார்க்

இறப்பு: 10 ஜூலை 1086
புனிதர்பட்டம்: 1100, திருத்தந்தை 2ஆம் பாஸ்கலீஸ் (Pope Paschalis II) 1080 ஆம் ஆண்டு இவர் டென்மார்க் நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகுந்த விசு வாசம் கொண்டவர். கிறிஸ்துவை தன் நாடு முழுவதும் பரப்ப பெரும்பாடுபட்டவர். பல ஆலயங்களையும், துறவு மடங்களையும், பள்ளிகளையும் நாடு முழுவதும் கட்டினார். இவர் கிறிஸ்துவை பரப்பிய காரணத்தி ற்காகவே, இவரின் எதிரிகளால் திருப்பலியில் இருக்கும்போதே குத்திக் கொலை செய்யப்பட்டார்.



செபம்:
நிலை வாழ்வளிப்பவரே எம் இறைவா! உம்மீது கொண்ட தணியாத தாகத்தால் தங்கள் நாடுகளில் மறைபரப்பு பணியை செய்து கொலை செய்யப்பட்டா ர்கள். இன்றைய புனிதர்கள். இருப்பினும் இவர்களின் இறப்பினால் அந்நாடுகளில் கிறிஸ்தவம் பரவியது. உம் பெயரை அந்நாட்டு மக்களிடையே நிலைநாட்டி னார்கள். இன்று அந்நாடுகளில் மறைபரப்பு பணியை செய்யும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, பணியில் நிறைவு பெற உடனிருந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2016-07-09 புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong) மறைசாட்சி


         இன்றைய புனிதர்2016-07-09
            


புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

                         மறைசாட்சி

முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்

சீன நாட்டில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்நா ட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டி ருக்கிறது.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 618-907 வரை டாங் வம்சத்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செ ய்தி பரப்ப சென்ற ஜியோனித மோன்றோ கோர் வீனோ ( Gionitha Mondro Gor vino) போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக புரிந்து வைத்திரு ந்தார்கள். இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர் தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர் தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

பின்னர் 16 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வுசெய்யப்பட்டு சீனா சென்றடைந்த னர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சேசு சபைக் குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்த னர். அதோடு கணிதம், விஞ்ஞானம் போன்ற கலை களிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்க ளின் மனதில் இடம்பிடித்து அவர்களுக்கேற்ப நற்செ ய்தி பணியை பரப்பினர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திரு முழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவ ர்கள் மெய்மறை கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.

அப்போது சீன நாட்டு மன்னன் 1692 ல் நாடு தழுவிய மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூ லம் விரும்புபவர்கள் மெய்மறையில் சேரலாம். கிறி ஸ்துவை பின்பற்றலாம் என்றும் கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நா னம் பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவ ரின் பிரதிநிதி டூர்னோனின்(Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி" என்பதை அறிமுகப்படு த்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து கிறிஸ்து வர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தா ர்கள். 19 ஆம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.

1648 ல் "மஞ்ச் டார்டர்"(Manj Dardar) இனத்தை சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை கூறி செபமாலை செபிக்கும்போb து, அவரின் உடனிருந்த தோழர்களையும் கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.

மீண்டும் 1715-1747 வரை நற்செய்தி பரப்பிய ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும் கொன்றனர். 1796-1821 முடிய ஆட்சி செய்த மன்னன் கியா கின்(Kiya Kin)கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 1862 ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் முத்திபேறுபட்டம் பெற்றவர்கள்


செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மை இவ்வுலகில் பரப்புவதற்காக பாடுபட்ட பலர், உம் பெயரால் உயிரழந்தனர். இன்றும் எம் நாட்டில் மறைபணியாளர்களுக்கு பல கொடுமைகள் நேருகின்றது. உம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை நீர் கருணை கூர்ந்து காத்தருளும். அவர்கள் மனந்திரும்பி உம்மை ஏற்று, வாழ்வில் இன்பம் கண்டு, மற்றவர்களையும் வாழ வைக்க உம் அருள் தாரும்

Friday, 8 July 2016

இன்றைய புனிதர் 2016-07-09 புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

            

இன்றைய புனிதர்

2016-07-09

புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

      

                      
முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்
சீன நாட்டில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்நா ட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டிருக்கி றது.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கிறி ஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 618-907 வரை டாங் வம்ச த்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செய்தி பரப்ப சென்ற ஜியோனித மோன்றோ கோர் வீனோ ( Gionitha Mondro Gor vino) போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக புரிந்து வைத்திருந்தார்கள். இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர் தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர் தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

பின்னர் 16 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வுசெய்யப்பட்டு சீனா சென்றடைந்தனர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சேசு சபைக் குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அதோடு கணிதம், விஞ்ஞானம் போன்ற கலைகளிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்களின் மனதில் இடம்பிடித்து அவர்களுக்கேற்ப நற்செய்தி பணியை பரப்பினர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவர்கள் மெய்மறை கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.

அப்போது சீன நாட்டு மன்னன் 1692 ல் நாடு தழுவிய மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூலம் விரும்புபவர்கள் மெய்மறையில் சேரலாம். கிறிஸ்துவை பின்பற்றலாம் என்றும் கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நானம் பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவரின் பிரதிநிதி டூர்னோனின்(Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி" என்பதை அறிமுகப்படுத்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து கிறிஸ்துவர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.

1648 ல் "மஞ்ச் டார்டர்"(Manj Dardar) இனத்தை சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை கூறி செபமாலை செபிக்கும்போது, அவரின் உடனிருந்த தோழர்களையும் கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.

மீண்டும் 1715-1747 வரை நற்செய்தி பரப்பிய ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும் கொன்றனர். 1796-1821 முடிய ஆட்சி செய்த மன்னன் கியா கின்(Kiya Kin)கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 1862 ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் முத்திபேறுபட்டம் பெற்றவர்கள்


செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மை இவ்வுலகில் பரப்புவதற்காக பாடுபட்ட பலர், உம் பெயரால் உயிரழந்தனர். இன்றும் எம் நாட்டில் மறைபணியாளர்களுக்கு பல கொடுமைகள் நேருகின்றது. உம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை நீர் கருணை கூர்ந்து காத்தருளும். அவர்கள் மனந்திரும்பி உம்மை ஏற்று, வாழ்வில் இன்பம் கண்டு, மற்றவர்களையும் வாழ வைக்க உம் அருள் தாரும்

இன்றைய புனிதர் 2016-07-08 புனித. கிளியன் (St.Kilian) ஆயர், மறைசாட்சி

                     
                    இன்றைய புனிதர் 2016-07-08
                       புனித. கிளியன் (St.Kilian)
                           ஆயர், மறைசாட்சி

பிறப்பு640வூர்ட்ஸ்பூர்க் ( Wurzburg )

இறப்புஜூலை 8, 689வூர்ட்ஸ்பூர்க் (Würzburg)

முத்திபேறுபட்டம்: 788

இவர் பெயரில் வூர்ட்ஸ்பூர்க்கில் ஓர் ஆலயம் உள்ளது. பல வருடங்களாக இவ்வாலயம் புனித தலமாக இரு ந்தது. அங்குள்ள கிரிப்தா (Krypta)என்ற சிற்றாலய த்தில் உள்ள கல்லறையில் இப்புனிதரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஆயராக இருந்தபோது பய ன்படுத்திய, தலையில் வைக்கும் தொப்பியும்,கையில் பிடிக்கும் நீண்ட பெரிய சிலுவையும் பாதுகாக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டது. மற்றும் சில பொருட்க ளும், திருவிவிலியம் மைன்ஸ்(Mainz) என்ற மறைமாவ ட்டத்திற்கு சொந்தமான நூலகத்தில் வைத்து பாது காக்கப்படுகின்றது. இவரின் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட  அளவில் இருப்பதால் வரலாறாக வடிவமைக்கப்பட்டது.

இவர் 687 ஆம் ஆண்டில் மிக சிறந்த ஆயர் என்ற பெருமையை பெற்றார். வூர்ட்ஸ்பூர்க் மக்களிடையே இவரின் பெயரில் தனிப்பட்ட நம்பிக்கை வளர்ந்தது. 689 ஆம் ஆண்டு கெய்லானா (Gailana) என்ற நாட்டை சார்ந்த ஓர் அரசன், இனத்தின் பெயரால், ஆயர் கிளியன் கொலைசெய்ய திட்டமிட்டான். அவருடன் இணைந்து பணிபுரிந்த குருக்கள் கோலோண்ட்(Kolont) மற்றும் டோப்னான்(Tofnan) இருவரும் முதலில் கொல்லப்பட்டார்கள். நற்செய்திக்கு சான்று பகரும் விதமாக இருவரும் மறைசாட்சியானார்கள். பிறகு கிளியன் அவர்களின் செப வாழ்வினால் அரசர் குடும்பத்தினர் தூண்டப்பட்டு, வூர்ட்ஸ்பூர்க் வந்து ஆயரிடம் ஞானஸ்நானம் பெற்று மனந்திரும்பினர். பாவமன்னிப்பு பெற்று இறைவனை நம்பினர். ஆனால் அரசனின் படையை சேர்ந்தவர்கள், அரசருக்கு தெரியாமலேயே ஆயரை கொன்றார்கள். இவர்கள் மூவருக்குமே (கிளியன், கோலோண்ட், டோப்னான்) வூர்ட்ஸ்பூர்க் பேராலயத்தில் கல்லறைகள் உள்ளது. உலகப் போரில் இப்பேராலயமானது அழிவுக்குள்ளாக்கப்பட்டதால், 1910 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நொய்முன்ஸ்ரர் பேராலயம்(Neumünsterkirche) என்று இன்றும் அழைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பலியில் பங்கெடுக்கப்படுகின்றது.


செபம்:
புதுமைகள் செய்பவரே இறைவா! மறைசாட்சிகளாக மரித்த ஆயர்களையும், குருக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்களின் வழியாக உம் இறையாட்சியை இம்மண்ணில் பரப்பினர். இன்றும் திருச்சபைக்கு எதிராக, பல அநீதிகள் நடக்கின்றது. நீரே இவைகளை கண்ணோக்கி நல்லதோர் தீர்ப்பை வழங்கி உம் திருச்சபையை வழிநடத்தியருளும்.

Wednesday, 6 July 2016


இன்றைய புனிதர் 2016-07-07
             

புனித.வில்லிபால்டு (St.Willibald)

ஆயர்

பிறப்பு22 அக்டோபர் 700தென் இங்கிலாந்து

இறப்பு7 ஜூலை 787ஐஷ்டாட்(Eichstatt) , ஜெர்மனி

பாதுகாவல்: ஐஷ்டாட் நகரின் பாதுகாவலர்

வில்லிபால்டு தென் இங்கிலாந்து நாட்டில் ரிச்சர்டு எ ன்பவரின் மகனாக பிறந்தார். 720 ஆம் ஆண்டு தந்தை ரிச்சர்டு, உடன் பிறந்த சகோதரர் உன்னிபால்டும் (Wunibald) உரோம் நகரை நோக்கி திருப்பயணம் மே ற்கொண்டனர். அப்போதுதான் இவரின் தந்தை லக்கா(Lucca) என்னுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது வில்லிபால்டு உரோம் நகரிலேயே தங்கினார். இர ண்டரை ஆண்டுகள் கழித்து இவர் பாலஸ்தீன மற்றும் கொன்ஸ்டாண்டீனோபிள் நோக்கி பயணம் மேற்கொ ண்டார். 729 ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் இத்தாலி நாட்டிற்கு வந்தடைந்தார். அப்போதுதான் இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார்.

739 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் கிரகோரி அவர்க ளால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் தன்னுடன் குருப்பட்டம் பெற்ற போனிபாஸ் என்பவ ருடன் சேர்ந்து ஜெர்மனி நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அப்போஸ்தலர் பணியை சிறப்பாக செய்தபின் 741 ல் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயரான பிறகும் கூட தனது மிஷனரி பணியை பவேரியா மறைமாநிலம் முழுவதிலும் சிறப்பாக செய்தார். 741- 787 ஆம் ஆண்டு வரை ஐஷ்டாட் என்ற மறைமாநிலத்தில் ஆயராக பணியாற்றினார். இவர் ஐஷ்டாட் மறைமாநி லத்தின் முதல் ஆயர் என்ற பெருமையை பெற்றார். இவர் 8 ஆம் நூற்றாண்டில் இவரின் பெயரால் ஐஷ்டாட்டில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். இவ்வா லயத்தில்தான் வில்லிபால்டு அவர்களின் கால்கள் வைக்கப்பட்டுள்ளது. உரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1745 ஆம் ஆண்டு இவரின் 1000 ஆம் வருட ஜூபிலியை முன்னிட்டு, இவரது கல்லறையை பேதுரு பேராலயத்தி லிருந்து ஐஷ்டாட்டிற்கு மாற்றப்பட்டது. இவர் வாழு ம்போதே ஆலயத்தில் பாடப்படும் பாடற்குழுவிற்கென ஓர் அழகிய மேடையை அமைத்தார். அவர் திருப்பலி ஆற்றும் போதெல்லாம், ஐஷ்டாட்டில் வாழும் ஒவ்வொ ருவரும் புனிதர்களே" என்று தவறாமல் கூறிவருவார்.


செபம்:
திருச்சபையை வழிநடத்துபவரே எம் இறைவா! திரு ச்சபையின் மீது கொண்ட ஆர்வத்தால், நாடு விட்டு நாடு வந்து உம் பணியை ஆற்றினார் புனித வில்லிபால்டு. இன்றும் அவரை போல உம் பணியை ஆற்றிவரும். ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசீர்வதி யும். திறம்பட பணிபுரிய நல்ல உடல் உள்ள நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.

Tuesday, 5 July 2016

இன்றைய புனிதர் 2016-07-06 புனித மரிய கொரற்றி (St.Maria Goretti) மறைசாட்சி


இன்றைய புனிதர்  2016-07-06


புனித மரிய கொரற்றி (St.Maria Goretti) மறைசாட்சி

பிறப்பு1890அங்கோனா (Ankona), இத்தாலி

    இறப்பு 1902

புனிதர்பட்டம்: திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்

இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான்.

"இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். "மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். "மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். இவர் இறந்த 50ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார்.


.


செபம்:
இந்நாட்களில் கற்பு என்றால் என்ன என்று அக்கறையின்றி கேட்கும் போதும், திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும் ஆபாசக் காட்சிகளை தெய்வாக்கும் சூழலில், நாங்கள் தூய ஆவியின் ஆலயமாக திகழ்ந்து, எம்மையும் பிறரையும் மதிக்கும் வரம் தாரும் இறைவா.

Monday, 4 July 2016

இன்றைய புனிதர் 2016-07-05 புனித அந்தோனி மரிய சக்கரியா குரு

                      

                இன்றைய புனிதர்           2016-07-05

                     புனித அந்தோனி மரிய சக்கரியா      குரு

பிறப்பு 1503                இறப்பு 1539

மார்ட்டின் லூத்தர் ஓர் கத்தோலிக்க, துறவற சபை குருவாக இருக்கும்போது திருச்சபையில் நிலவிய பலவித தீமைகளை சுட்டிக்காட்டி திருச்சபையை விட்டு வெளியேறினார். புனித அந்தோனி மரிய சக்கரியா, திருச்சபைக்குள் இருந்துகொண்டே தம் ஈகை இரக்க செயல்களாலும், தமது புனித வாழ்க்கையாலும் பலரை மனந்திருப்பினார். அத்தோடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் துறவற சபைகளை நிறுவினார். அப்போது அச்சபையின் அவலங்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியும் கண்டார்.

இவரின் தாய் இவருக்கு 18 வயது நடக்கும்போது விதவையானார். அதிலிருந்து அவர், மகனின் ஆன்மீக வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். நோயினால் தாக்கப்பட்ட ஏழை எளியோரை குணப்படுத்தும் நோக்குடன் சக்கரியா, பதுவை பல்கலைகழகத்தில் மருத்துவக்கலை பயின்று பட்டம்பெற்றார். மக்களின் உடல்நிலையை மட்டுமல்லாது, உள்ளத்து நோய்களையும் குணமாக்க வேண்டுமென எண்ணி, வேத கலையையும் கற்றார். இவர் 1530 ஆம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். பிறகு "பர்ணபைட்ஸ்" (Barnabites)என்ற பெயர் கொண்ட ஒரு துறவற சபையை நிறுவினார். மிலான் நகரில் புனித பர்னபாஸ் ஆலயத்தில் இவர் தமது அலுவலகத்தை அமைத்துக் கொண்டதால் அப்பெயரை தமது சபைக்கு கொடுத்தார். இவரது தூண்டுதலின் பேரில், லூயிசா டொரெல்லா என்ற ஒரு செல்வந்தர் "ஏஞ்சலிக்கல்ஸ்"(Engelicals) என்ற பெயர் கொண்ட பெண்களுக்கான துறவற சபையை நிறுவினார். இச்சபையின் சிறப்பு நோக்கம், தவறிச் சென்று, பள்ளத்தில் விழுந்து கிடக்கும் பெண்களை மீட்பதும், அவர்களுக்கு புதிய சிந்தனைகளையும் உயரிய கண்ணோட்டங்களை கொடுப்பதுமாக இருந்தது. இத்தகைய அரும்பணி மக்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றபின், சக்கரியா தமது36 ஆம் வயதில் விண்ணக வாழ்வை அடைந்தார். அடிக்கடி திவ்விய நன்மை வாங்குவது, 40 மணி நேரம் திவ்விய நற்கருணை திருமணி ஆராதனை போன்ற ஆன்மீக முயற்சிகளையும் முதலில் இவரே தோற்றுவித்தார்.

"நமக்கு கிடைத்த தேவ அழைத்தலின் வழியாக இறைவன் எவ்வளவு நம்மிடம் எதிர்பார்க்கின்றார் பாருங்கள்; திருத்தூதர்களையும், மறைசாட்சிகளையும் பின்பற்ற நாம் முன்வந்துள்ளோம்; ஆனால் அவர்களுக்கும், நமக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள்; அவர்களடைந்த வேதனைகளை நாம் ஒதுக்கிவிட கூடாது" என்பதை இப்புனிதர் தம் சபையினருக்கு அறிவுரையாக தந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! இன்று மருத்துவ துறையில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். உடல் அளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் பங்குபெற்று, நோயாளிக்கு பணிபுரிய உம் ஆசீர் தாரும். நோய்களை குணமாக்கக்கூடிய வல்லமையை நீர் தந்து, எம் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றிட வரம் தாரும்.

Sunday, 3 July 2016

இன்றைய புனிதர் 2016-07-04 புனித எலிசபெத் (St. Elisabeth) குடும்பத் தலைவி

                                               

இறப்பு                                                                                             பிறப்பு

இவர் ஸ்பெயின் நாட்டு மன்னன் 3 ஆம் பீட்டரின் மகள். ஸ்பெயின் மொழியில் எலிசபெத்தின் பெயர் இசபெ ல்லா. ஹங்கேரி நாட்டு அரசி புனித எலிசபெத்தின் பேத்தி. இவர் இளமை முதல் ஆழமான பக்தியிலும் தவமுயற்சிகளிலும் வளர்ந்தார். 12 வயதில் போர்த்து க்கல் மன்னன் டென்னிசுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். மன்னன் தன் வாழ்வை கீழ்த்தரமாக வாழ்ந்ததால், இவனுக்குத் தவறாக பிறந்த ஒரு மகனும் இருந்தான். எலிசபெத் இத்தகைய சூழ்நிலையிலும் தன் ஆன்மீக வாழ்வில் மிகுந்த உறுதியும் ஆர்வமும் காட்டி னார். அதிகாலையில் தினந்தோறும் கட்டளை செப த்தில் உள்ள செபத்தை செபித்து வந்தார். உண்ணா நோன்பையும், ஒறுத்தல் முயற்சிகளையும் பெருக்கிக் கொண்டே போனார். தம்முடைய கணவர் முன்கோபியா கவும், முரடராகவும் நடந்துக்கொண்டாலும், தன்னுடைய விசுவாசம் நிறைந்த செபத்தின் மூலம் தன்னுடைய 40 ஆண்டு காலத் திருமண வாழ்வில் இவர் வெற்றிக்கண்டார். கணவனை முற்றிலும் இறைவன் பக்கம் மனம் மாறிட வழிவகுத்தார். மனமாறிய கணவர் 12 ஆண்டுகள் இறை விசுவாசத்தில் வாழ்ந்து இறந்தார்.

எலிசபெத் தன் கணவரின் இறப்பிற்குப்பின் கிளாரம்மாள் துறவு மடம் சென்று அசிசியாரின் 3 ஆம் சபை உறுப்பினராக வாழ்ந்தார். ஏழைகளை பேணுவதில் தன் நேரத்தையும், மிகுந்த பணத்தையும் செலவழித்தார். நோயுற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றினார். இவரின் கணவர் உயிருடன் வாழ்ந்தபோது, முரடாக இருந்தபோது ஒரு முறை வயிற்று பசியுடன் இருந்த ஏழை ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவருக்கு ரொட்டி கொடுக்க கூடை நிறைய எடுத்து சென்றார். இதைக் கண்ட முரட்டுக் கணவர், அவரை வழிமறித்து, கூடையை பார்த்தார். அப்போது கூடையிலிருந்த 2 ரொட்டித்துண்டுகள் ரோஜா மலர்களாக மாறி காட்சியளித்தது.

அனைத்திற்கும் மேலாக இவர் ஓர் "அமைதி விரும்பி" என்றே அழைக்கப்பட்டார். 5 முறை மிகக் கடுமையான சூழலில் அமைதியை நாட்டில் நிலைநாட்டினார். அமைதியை நிலைநாட்ட கருதி முறையாக எடுத்த நீண்ட அரிய பயணம், அவரது உயிரை வாங்கியது. 1323 ல் தன் மகன் அல்போன்சோ தன் தந்தையின் வப்பாட்டியின் மகனுடன் போர் தொடுத்தபோது, எலிசபெத்தின் குறுக்கீட்டால் அமைதி ஏற்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பின்னர், தாம் தங்கியிருந்த மடத்திலிருந்து வெளியேறி, ஸ்பெயினுக்கு பயணமாகி, அல்போன்சோவுக்கு அவரின் மைத்துனர் காஸ்டில் நாட்டு மன்னருக்கும் இடையே அமைதியை நிலைநாட்டினர். தம் உடன்பிறந்தவரும், ஆரம்கான் நாட்டு மன்னனுமான 2 ஆம் ஜேம்சுக்கும் தம் இன்னோரு உறவினரும் காஸ்டில் மன்னனுமான 4ஆம் பெர்னாண்டுக்கும் இடையிலும் அமைதியை உண்டு பண்ணினார்.

தன் கணவரை இறைவன் பக்கம் திருப்பியதும் இறைவனுடன் ஒப்புரவு செய்து வைத்ததும், எலிசபெத்தின் மிகப் பெரிய சாதனை. கணவர் சாவு படுக்கையிலிருக்கும் போதுதான். அவரை மனந்திருப்பினார். கடைசிவரை கணவரை அருமை பெருமையாக கவனித்துக் கொண்டார். "அமைதியை ஆண்டவனின் கட்டளையாக கருதி நிலைநாட்ட வேண்டும். நான் அமைதியை விட்டு செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றார் நம் ஆண்டவர். அதாவது நான் உங்களைவிட்டு பிரியும்போது அமைதியில்தான் உங்களைக் காணவேண்டும் என்பது பொருள். ஆண்டவர் வரும்போது விரும்பி எதிர்பார்ப்பேன் என்று சொல்லி சென்றதும் அமைதியே, அமைதி விரும்பியாக இரு; அப்போது எங்கும் அமைதி மயமாக திகழும், கடவுளின் திருச்சபை அமைதியில்தான் நிறுவப்பட்டது" என்ற புனித கிளிசொலொகு அருளப்பரின்(Chrisologu John) வார்த்தையை தன் வாழ்வாக வாழ்ந்தார்.


செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! ஏழைகளின் மேல் பாசம் வைத்து, தன் வாழ்வையே அவர்களுக்காக கொடுத்து, உம்மில் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு வாழ்ந்து, பலரின் வாழ்வில் ஒளியேற்றிய புனித எலிசபெத்தைபோல, நாங்களும் ஏழைகளின் நண்பர்களாக வாழ வரம் தாரும்

Saturday, 2 July 2016

இன்றைய புனிதர் 2016-07-03 புனித தோமையார் (Apostle Thomas) இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி

          
                இன்றைய புனிதர் 2016-07-03

புனித தோமையார் (Apostle Thomas)

இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி


பாவம் தோமா! உயிர்த்த ஆண்டவரைக் காண்பதற்கு அவர் போட்ட நிபந்தனை அவருக்கு ஒரு பட்டப் பெயர் சூட்டப்படக் காரணமாயிற்று. "ஐயப் பேர்வழி" என்றே இன்றுவரை உலகம் அழைக்கின்றது. ஆனால், " அவர் நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" என்று விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கையிடவில்லை. இவர் நமக்கு ஓர் உருக்கமான, விசுவாசம் நிறைந்த செபத்தை அமைத்து கொடுத்து, இச்செபத்தை நாம் பொருள் உணர்ந்து சொல்லும் போதெல்லாம் நமது பற்றுறுதி மெருகேற்ற ப்படுகிறது. "காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்" என்று கூறிய உயிர்த்த ஆண்டவர், உலகமுடியும் வரை தம்மில் விசுவாசம் கொள்வோர் பேறு பெற்றோர் என்று தெளிவுபடுத்துகிறார். நாம் இந்த விசுவாசக் குடும்ப  த்தை சேர்ந்தவர்கள் என்பது ஆறுதல் அளிக்க வேண்டும்.

தோமா ஆண்டவரிடம் ஒரு தனிப்பற்றுதல் கொண்டி ருந்தார். நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தயாராய் இருப்போம் என்று கூறியவர். தோமா ஆண்டவரின் விண்ணேற்பிற்கு பிறகு சென்று போதியுங்கள் என்ற அவரின் கட்ட ளையை நிறைவேற்ற புறப்படுகிறார். யுசிபியுஸ் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். "அப்போஸ்தலர் யூதா ததேயுவை எடெஸ்ஸாவிலிருந்த அப்கர் என்ற அரசனுக்கு திருமுழுக்கு கொடுக்க அனுப்பியபின் தமக்கென பார்த்தியா மீட்ஸ், பெர்ஷியா இன்னும் பல அண்டை நாடுகளை தெரிந்துகொண்டு மறைபரப்பு பணியாற்றினார். தோமா. அப்போதுதான் இந்தியா வந்தார். "தோமாவின் பணிகள்" என்ற ஒரு நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியிலேயே மக்களிடம் இருந்ததாக ஆதாரம் இருக்கிறது.

கொண்டோபெர்னஸ்(Condoberns) அல்லது குடுப்பாரா(Cudupara) என்ற மன்னரது ஆட்சி 46 ல் பெஷாவர் வரை பரவிக்கிடந்தது. பஞ்சாபிலிருந்து கொச்சின், திருவிதாங்கூர் சிற்றரசு வரைக்கும் பரவியிருந்தது. அதிலிருந்து " புனித தோமாவின் கிறிஸ்தவர்கள்" என்றே இப்பகுதியினர் அழைக்கப்பட்டு வந்தனர். தங்களுடைய திருவழிபாட்டுக்கு "சீரியக்" என்ற மொழியையே அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தியதோடல்லாமல் இன்று வரை "சீரியன் கிறிஸ்தவர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். சீரியக் மொழி உறுதியாக பெர்ஷியா, மெசப்பொத்தேமியா பகுதிகளிலுருந்து இறக்குமதியானது. தோமா முதன் முதலில் கிராங்கனூர் கடற்கரையை வந்தடைந்தார் எனவும், மலபாரில் மட்டும் 7 ஆலயங்கள் எழுப்பினார் எனவும், பின்னர் குமரி கடற்கரை வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய பின் "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது. அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும் உள்ளது.

1522 ஆம் ஆண்டு போர்த்துகீசியர் சென்னை வந்தபோது, அவரது கல்லறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த பொருட்கள் மைலாப்பூரில் சாந்தோம் பேராலயத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இவரின் திருப்பண்டங்கள் பலவும் 4 ஆம் நூற்றாண்டில் எடெஸ்ஸாவுக்கு(Edesta) கொண்டு செல்லப்பட்டதாக "தோமாவின் பணிகள்" என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மெசப்பொட்டேமியாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் எடெஸ்ஸாவிலிருந்து பின்னர் அப்ரூஸ்ஸியில் உள்ள ஓர்டோனாவிற்கு(Ordon) எடுத்து செல்லப்பட்டு இன்றுவரை புனிதமாக காப்பாற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! புனித தோமா நீரே என் ஆண்டவர் என்று ஏற்றுக்கொண்டதுபோல, நாங்களும் உம்மை எம் வாழ்வில் ஏற்று, பாதுகாவலாக கொண்டு, உம்மில் எம் வாழ்வை பயணமாக்க வரம் தாரும்.

Friday, 1 July 2016

இன்றைய புனிதர் 2016-07-02 புனித பெர்னார்டின் ரியலினோ (St.Bernardin Riyalyno) இயேசு சபை குரு

                         
               இன்றைய புனிதர் 2016-07-02

புனித பெர்னார்டின் ரியலினோ (St.Bernardin Riyalyno)

                        இயேசு சபை குரு

பிறப்பு 1530 கார்ப்பி, இத்தாலி

இறப்பு 2 ஜூலை 1616

இவர் லெச்சே (Letche) என்ற ஊரில் படித்தார். இதே நக ரில் 42 ஆண்டுகள் இயேசு சபைக் குருவாக பணிபுரி ந்தார். இரு நகரத்தாரும் "எங்கள் புனிதர்" என்றே இவரை அழைக்கின்றார். பொலோஞ்ஞா பல்கலை க்கழகத்தில் படிப்புகளை முடித்தார். வெளியுலகில் பெரிய காத்திருந்தன. இவர்தன் இளம் வயதில் துலிண்ட்ரா என்ற அழகி ஒருத்தியை விரும்பினார். ஆனால் அவள் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டாள். இவர் ஓர் முன்கோபியாக இருந்தார்.

ஒருநாள் நேம்பினஸ் (Nepinas) வீதி வழியாக இரு துறவி கள் நடந்து செல்வதை இவர் பார்த்தார். புதிதாக தோ ன்றிய இயேசு சபையை சேர்ந்தவர்கள் இவர்கள் எ ன்பதை அறிந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் பலிபூசையிலும், சிறப்பாக மறையுரையிலும் பங்குபெற்றார். இவை களே இவரது தேவ அழைத்தலுக்கு நல்லவித்தாக திக ழ்ந்தன. அந்நாட்களில் இவரின் மனதில் பெரிய குழ ப்பம் ஏற்பட்டது. தம் அறையில் தனிமையில் செபமா லை ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது மரிய ன்னை குழந்தை இயேசுவுடன் வந்து காட்சி தந்தார். அவரின் குழப்பம் நீங்கியது. அவருக்குள் பேரமைதி நிலவியது. பின்னர் இயேசு சபையில் சேர உறுதி பூண்டார். 1541 ஆம் ஆண்டு அச்சபையில் சேர்ந்தார். 52 ஆண்டுகள் அச்சபையில் வாழ்ந்தார். உயர்ந்த படிப்புகள் படித்து பெரிய பட்டங்கள் பெற்றிருந்தும், தாழ்ச்சியின் பொருட்டு துணை சகோதரராகவே இருக்க விரும்பினார். ஆனால் இவரை குருத்துவத்தி ற்கு சபை தெரிந்து கொண்டது. குருவாக ஆனபின் லெச்சே என்ற இடத்திற்கு வந்தார். இங்கு "எல்லாரு க்கும் எல்லாமாக" நடந்து அனைவரின் மதிப்பையும் அடைந்தார். இவர் ஏழைகளை பேணுவதில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் மரணப்படுக்கையில் இருந்ததை கேட்ட மக்கள் கல்லூரிக்கு படையெடுத்து சென்றனர். கல்லூரியின் நுழைவாயிலையே அடைக்க வேண்டியதாயிற்று. நகரின் தலைவரே தந்தையின் இறுதி ஆசி பெற வந்துவிட்டார். இவர் "ஓ மிகுந்த வணக்கத்துக்குரிய ஆண்டவளே" என்று மரியின் பெயரை உச்சரித்தவாறு தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.


செபம்:
தாழ்ச்சியின் மறு உருவே எம் இறைவா! உம் சாவிலும் கூட நீர் உம்மையே தாழ்த்தினீர். உமக்கு சான்று பகரும்விதமாக புனித பெர்னார்டினும், தம்மையே தாழ்த்தி, உமக்குரியவராக வாழ்ந்தார். பல திறமைகள் இருந்தபோதும், ஒன்றுமில்லாமைபோல், உம்மோடு ஒன்றித்திருந்தார். அவரை முன்மாதிரியாக கொண்டு நாங்களும் வாழ்ந்திட உம் அருள் தந்து, எம்மை ஆசீர்வதித்து வழிநடத்தும்.