Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 1 February 2016
இன்றைய புனிதர் 2016-02-02 வூர்ட்ஸ்பூர்க் ஆயர் பூர்க்ஹார்டு Burkhard von Würzburg
இவர் 741 ஆம் ஆண்டு வூர்ட்ஸ்பூர்கின் முதல் ஆயராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் 750 ஆம் ஆண்டு வூர்ட்ஸ்பூர்கில் அந்திரேயா Andreas என்ற பெயரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். அதன்பிறகு சால்வாடோர் Salvatordom என்ற பேரால யம் ஒன்றை எழுப்பினார். 855 ஆம் ஆண்டு இப்பேராலயமானது எரிக்கப்பட்டது. இவர் ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆயராக இருந்தார் என்று இவரின் வரலாறு கூறுகின்றது. இவர் ஆயராக இருந்தபோது விசுவாசத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தார் என்று சொல்லப்படுகின்றது. நற்செய்திப் பணிக்காக பயணம் செய்யும்போது இறந்தார் என்று கூறப்பட்டுள்ளது. வூர்ட்ஸ்பூர்கில் அக்டோபர் 14ஆம் நாள் இவருக்கு விழா எடுக்கப்பட்டு வருகின்றது. இவர் எழுப்பிய அந்திரேயா துறவற இல்லம் இன்று புனித பூர்க்கார்டு St. Burkhard துறவற இல்லம் என்றழைக்கப்படுகின்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment