Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 1 February 2016

இன்றைய புனிதர் 2016-02-02 வூர்ட்ஸ்பூர்க் ஆயர் பூர்க்ஹார்டு Burkhard von Würzburg

                                         

பிறப்பு 700 (?),இங்கிலாந்து

இறப்பு 2 பிப்ரவரி, 753 (அ) 754, பவேரியா, Germany

பாதுகாவல் : எலும்பு நோய், மூட்டு வலி

இவர் 741 ஆம் ஆண்டு வூர்ட்ஸ்பூர்கின் முதல் ஆயராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் 750 ஆம் ஆண்டு வூர்ட்ஸ்பூர்கில் அந்திரேயா Andreas என்ற பெயரில் துறவற இல்லம் ஒன்றை நிறுவினார். அதன்பிறகு சால்வாடோர் Salvatordom என்ற பேரால யம் ஒன்றை எழுப்பினார். 855 ஆம் ஆண்டு இப்பேராலயமானது எரிக்கப்பட்டது. இவர் ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆயராக இருந்தார் என்று இவரின் வரலாறு கூறுகின்றது. இவர் ஆயராக இருந்தபோது விசுவாசத்தைப் பரப்ப பெரிதும் உழைத்தார் என்று சொல்லப்படுகின்றது. நற்செய்திப் பணிக்காக பயணம் செய்யும்போது இறந்தார் என்று கூறப்பட்டுள்ளது. வூர்ட்ஸ்பூர்கில் அக்டோபர் 14ஆம் நாள் இவருக்கு விழா எடுக்கப்பட்டு வருகின்றது. இவர் எழுப்பிய அந்திரேயா துறவற இல்லம் இன்று புனித பூர்க்கார்டு St. Burkhard துறவற இல்லம் என்றழைக்கப்படுகின்றது

செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான மூவொரு இறைவா! இன்று வூர்ட்ஸ்பூர்க் மறைமாவட்டத்தை வழிநடத்தும் ஆயர்களை நீர் ஆசீர்வதியும். கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்து காப்பதுபோல, அம்மறைமாவட்ட மக்களை உமது அரவணைப்பில் வைத்துக் காத்து, வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment