Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 11 February 2016
இன்றைய புனிதர் 2016-02-11 அனியானே நகர் துறவி பெனடிக்ட் Benedikt von Aninae
புனித பெனடிக்ட் விட்டிசா Witiza என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிப்பின் Pippin என்பவரிடமிருந்து வளர்ந்தார். இவர் தன் இளம் வயதிலேயே போர் புரிவதற்கென போர் படையில் சேர்ந்தார். பின்னர் 773 ஆம் ஆண்டு டிஜோன் Dijon என்ற ஊரின் அருகிலிருந்த புனித பெனடிக்ட் துறவறச் சபையில் சேர்ந்தார். இவர் 779 ஆம் ஆண்டு மிகக் கடுமையான விதிகளைக் கொண்டு துறவற இல்லம் ஒன்றைக் கட்டினார். பின்னர் நூர்சிய நகர் Nursia பெனடிக்ட்டின் சபையிலிருந்த ஒழுங்களை தான் நிறுவிய சபையிலும் கடைப்பிடிக்கச் செய்தார். பிரான்சு நாட்டிலிருந்த துறவற சபைகளிலேயே கடைப்பிடிக்கப்பட்ட அனைத்து ஒழுக்குகளைவிட இவர் நிறுவிய சபைதான் மிகக் கடுமையான சபை என்று கூறப்பட்டது. 814 ஆம் ஆண்டு அரசர் லூட்விக் Ludwig, பெனடிக்டின் செப வாழ்வைக் கண்டு, எல்சாஸ் Elsaß என்ற ஊரிலும் சபை நிறுவ அனுமதியளித்தார். பின்னர் ஜெர்மனி நாட்டில் ஆஹன் Aachenஎன்ற இடத்திலும் சபையை நிறுவினார். அங்குதான் அவர் தனது இறுதிநாட்களைக் கழித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment