Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 8 February 2016

இன்றைய புனிதர் 2016-02-08 புனித ஏரோணிமு எமிலியானி Hieronymus Ämiliani

                                          

பிறப்பு1486,வெனிஸ், இத்தாலி
இறப்பு 8 பிப்ரவரி 1537,சோமாஸ்கா Somasca, இத்தாலி

புனிதர்பட்டம்: 1767 திருத்தந்தை 13 ஆம் கிளமென்ஸ்
பாதுகாவல் : வெனிஸ், கைவிடப்பட்டவர்கள், பள்ளிகள்.

இவர் ஓர் பக்தியான குடும்பத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த முறையில் கல்வி கற்றார். இவர் தனது 15 ஆம் வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். நாளடைவில் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் 1508 ஆம் ஆண்டு தன் படைப்போர் வீரர்களுடன் போரிட சென்றப்போது சிறைப்பிடித்து செல்லப்பட்டார். அப்போதுதான் இவர் தனது வாழ்வில் சில மாற்றங்களைக் கண்டார். அச்சமயத்திலிருந்து தன் வாழ்வை மாற்றிக்கொண்டார்.

இவர் 1518 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் இவர் கணவரை இழந்து தனிமையில் வாடும் பெண்களை ஒன்று திரட்டி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார். ஏழை எளிய மக்களின் வாழ்வுக்கென்று தம்மை அர்ப்பணித்தார். தம் உடைமைகளை எல்லாம் அவர்களுக்கு பகிர்ந்தளித்தார். இவர் கைவிடப்பட்ட குழந்தைகளின் மறு வாழ்வுக்கென்று 1537 ஆம் ஆண்டு சொமாஸ்கா என்னுமிடத்தில் துறவற குருக்களுக்கான ஒரு சபையை நிறுவினார்.


செபம்:
இரக்கம் நிறைந்த இறைவா! கைவிடப்பட்டவர்களின் தேவைகளில் ஒரு தந்தையாக விளங்க புனித ஏரோணிமு எமிலியானியை நீர் தேர்ந்து கொண்டீர். நாங்கள் உமது ஆவியாரால் உம்முடைய மக்களென அழைக்கப்படுகிறோம். எப்போதும் உமது மக்களாக வாழ்ந்து உமது போதனையை பின்பற்றி எம் வாழ்வை என்றும் உமக்காக வாழ வழி காட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment