Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 16 February 2016

இன்றைய புனிதர் 2016-02-16 மறைசாட்சி நிக்கேமேடியன் நகர் ஜூலியானா Juliana von Nikomedien,Turkey

                                      

                             இன்றைய புனிதர் 2016-02-16

மறைசாட்சி நிக்கேமேடியன் நகர் ஜூலியானா Juliana von Nikomedien,Turkey

பிறப்பு 285, நிக்கோமேடியன், துருக்கி

இறப்பு 304, நிக்கோமேடியன், துருக்கி

இவர் ஓர் மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை மிகுந்த பக்தி கொண்டவர். ஆனால் இவரின் தாய் கடவுள் பக்தியே கடுகளவும் இல்லாதவர். ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் பொய் கூறிவிட்டு தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார். இவர் தனது 9 ஆம் வயதிலேயே தான் எலாய்சியுஸ் Eleusius என்றழைக்கப்படும் இளைஞனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கண்ட திருக்காட்சியை தன் தந்தையிடம் எடுத்துரைத்தார்.

ஜூலியானா தனது 18 ஆம் வயதை அடைந்தார். திருமணம் செய்யப்போகும் நாள் வந்தபோது எலாய்சியஸ் என்ற பெயர்கொண்ட ஓர் இளைஞன். இவர் திருமணம் செய்து கொள்ள பெண்கேட்டு வந்தான். ஆனால் அவன் வேறு மதத்தை சார்ந்தவனாக இருந்ததால் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக வாழ்ந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்ற ஜூலியானா அவனை மதம்மாற்றினார். இதனால் மற்ற மதத்தினரால் ஜூலியானா வதைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். எரியும் இரும்பு ஆலையில் இறக்கப்பட்டார். பிறகு கொதிக்கும் தாரினால் உடல் முழுவதும் ஊற்றப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். மரித்த பல நூற்றாண்டுகள் கழித்து 1207 ல் இவரின் உடல் நேயாப்பல் Neapelஎன்ற நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.


செபம்:
மரித்தோர்க்கெல்லாம் மீண்டும் உயிர்ப்பளிக்கும் எல்லாம் வல்லவரே, உம்மீது கொண்ட அளவில்லா அன்பினால் தன் தாயையும் எதிர்த்து உம்மைப் பின் தொடர்ந்த புனித ஜூலியானாவின் செப வாழ்வின் கண்டு வியப்படைந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். உமக்கெதிராக செயல்படும் மக்களை நீர் கண்ணோக்கியருளும். அவர்களும் உம்மை அறிந்துக் கொண்டு உமது சாட்சியாகத் திகழ்ந்திட உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment