Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 29 February 2016
இன்றைய புனிதர் 2016-03-01 திருக்காட்சியாளர் யோஹான்னா மரியா போனோமோ Johanna Maria Bonomo OSB
இவர் கிளரிசியன் சபைச் சகோதரிகளால் வளர்க்கப்பட்டார். 1622 ஆம் ஆண்டு, புனித பெனடிக்டின் சபையில் சேர்ந்து தனது வார்த்தைப்பாடுகளைப் பெற்று துறவியானார். ஏறக்குறைய 50 வருடங்கள் மிகச் சாதாரணத் துறவியாக வாழ்ந்தார். அதன்பிறகு நவத்துறவகத்திற்கு பொறுப்பேற்று, நவத்துறவிகளை கவனித்து பராமரித்து வந்தார். 3 முறை இல்லத்தின் பொறுப்பாளர் துறவியாகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாளின் இறுதிவரை கடினமான நோயால் தாக்கப்பட்டு, உடல் அளவிலும், உள்ள அளவிலும் வேதனைகளை அனுபவித்தார். பொறுமையுடன் தன் உடல் வலிகளைத் தாங்கி இடைவிடாது செபித்தார். இவர் நோயுற்றிருந்தபோது நோய்களைத் தாங்கும் வல்லமையையும், சக்தியையும் திருக்காட்சியின் வழியாகப் பெற்றார். இவர் தான் கண்ட திருக்காட்சிகளை கைப்பட எழுதினார். இவைகள் அனைத்தும் அச்சிடப்பட்டு, இதன் வழியாக ஆண்டவரின் நற்செய்தி பரவியது என்று கூறப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment