Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 9 February 2016
இன்றைய புனிதர் 2016-02-09 திருக்காட்சியாளர் அன்னா கத்தரீனா எம்மேரிக் Anna Katharina Emmerick
பிறப்பு 8 செப் 1774, கோயஸ்பீல்டு Coesfeld, ஜெர்மனி
இறப்பு 9 பிப்ரவரி 1824,டூல்மென் Dülmen, ஜெர்மனி
முத்திபேறுபட்டம்: 1892
இவர் சிறுவயதிலிருந்தே மிகுந்த பக்தியுள்ளவராக திகழ்ந்தார். தேவையிலிருப்போரை குறிப்பறிந்து தானாகவே முன்வந்து உதவி செய்து எதையும் எதிர்பாராமல் அன்பு செய்தார். இவர் துறவியாக வேண்டுமென்று அளவில்லா ஆசை கொண்டார். ஆனால் அவரின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சில ஆண்டுகள் கழித்து தன் கணவர் இறக்கவே, 1802 ஆம் ஆண்டு மீண்டும் தன் மனத்திற்குள் நீண்ட நாட்களாக இருந்த துறவற ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஒரு துறவற மடத்திற்குச் சென்றார். புனித அகஸ்டின் துறவற மடத்தில் சேர்ந்த இவர் இரவும் பகலும் இடைவிடாமல் செபத்தில் ஈடுபட்டார். 1813 ஆம் ஆண்டு இவர் இயேசுவின் காயங்களை பெற்றார். இதனால் மக்கள் இவரை தீர்க்கதரிசியாகக் கண்டு வணக்கம் செலுத்தினர். அதன்பிறகு இவர் 1818 லிருந்து 1824 ஆம் ஆண்டு வரை பலமுறை ஆண்டவரிடமிருந்து திருக்காட்சிகளைப் பெற்றார். இவர் இறந்த பிறகு மக்களுக்கென்றிருந்த பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 1975 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் இவரின் கல்லறை மேல் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.
செபம்: நல்ல ஆயனாம் இறைவா! உம்மீது கொண்ட அளவில்லா அன்பினால் உமது திருக்காயங்களைக் கொடையாக பெற்றார். உமது இரக்கத்தினால் நாங்கள் உம்மை இறுகப்பற்றிக்கொண்டு உமது பாதையில் எம்மை பயணிக்க செய்தருளும்
No comments:
Post a Comment