Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 13 February 2016

இன்றைய புனிதர் 2016-02-13 சபைத்தலைவர் சாக்சன் நகர் ஜோர்டன் Jordan von Sachsen

                           
                     இன்றைய புனிதர் 2016-02-13
சபைத்தலைவர் சாக்சன் நகர் ஜோர்டன் Jordan von Sachsen

                        

பிறப்பு 1200, போர்க்பெர்கே Borgberge, ஜெர்மனி

இறப்பு 13 பிப்ரவரி 1237, சிரியா

இவர் தான் பிறந்த ஊரின் அருகிலிருந்த பாடர்போன் (Paderborn) என்ற நகரில் கல்வி பயின்றார். இவர் தன் கல்வி படிப்பை முடித்தப்பின், புனித தொமினிக்கன் துறவற சபையில் சேர்ந்து குருவானார். 1221 ஆம் ஆண்டு அச்சபைத்தலைவர் இறந்துவிடவே, அச்சபையின் இரண்டாவது சபைத்தலைவர் பொறுப்பை புனித ஜோர்டன் ஏற்றார். இவர் தன் சபையை உலகெங்கும் பரவ அயராது உழைத்து நற்செய்தியை போதித்தார். தன் சபை குருக்கள் பலரை பாரிஸ் நகரில் இருந்த கல்லூரிகளில் படிக்கவைத்தார். இவர் பல வித்தியாசமான முறைகளில் தன் சபையை வளர்த்தெடுத்தார்.

இவர் தன் உள்மனதிலிருந்து மற்றவர்களை அன்புச் செய்தார். அனைவரும் இவரை எளிதில் நெருக்கக்கூடிய அளவிற்கு சாதாரண மனிதராகத் திகழ்ந்தார். இவர் தனது அழகிய மறையுரையினால் பல இளைஞர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரின் வாழ்வால் பலர் ஈர்க்கப்பட்டு இவரின் சபைக்கு வந்து சேர்ந்தனர். இவர் அச்சபையில் மிகச் சிறந்த பேராசிரியராக திகழ்ந்தார். இவர் ஏராளமான பயணங்களை மேற்கொண்டு தன் சபையைப் பரப்பினார். அவர் சிரியாவிற்கு பயணம் செய்யும்போதுதான் இறந்தார். இறந்தபிறகு இவரின் உடல் இஸ்ரயேல் நாட்டில் தொமினிக்கன் ஆலயம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது நற்செய்தியை இம்மண்ணில் பரப்பிட தன்னை முழுவதுமாக காணிக்கையாக்கி, அயராது உழைத்து தன் சபையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட புனித ஜோர்டன் எங்களுக்காக உம்மிடம் பரிந்து மன்றாட செபிக்கின்றோம். அவரின் ஆசீரால் அச்சபை குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் சிறப்பாக செயல்பட அருள்தாரும். அமைதியின்றி இருக்கும் சிரியா நாட்டில், புனித ஜோர்டனின் அருளால் அமைதி நிலவ வழிகாட்டியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment