Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 5 February 2016
இன்றைய புனிதர் 2016-02-06 மறைசாட்சியாளர் பவுல் மீகி மற்றும் தோழர்கள் Paul Miki und Gefährten SJ
பிறப்பு1565,சியோட்டோ Kyoto, ஜப்பான்
இறப்பு 5 பிப்ரவரி, 1597 நாகசாகி, ஜப்பான்
புனிதர்பட்டம்: 8 ஜூன் 1862, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
இவர் ஜப்பான் நாட்டில் வாழ்ந்த ஓர் கிறிஸ்தவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். இவர் தனது 22 ஆம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். மிகச் சிறந்த மறையுரையாளரான இவர், ஜப்பான் நாட்டில் சிறப்பாக மறைப்பணியாற்றினார். 1587 ஆம் ஆண்டு சோகுண்டோயோடோமி ஹிடேயோஷி Shogun Toyotomi Hideyoshi என்பவர் இட்ட கட்டளையின் பேரில் இப்புனிதர் பிடிக்கப்பட்டு தனித்தீவிற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இருப்பினும் இவர் ஆற்றியப் பணி மக்களிடையே தீப்போல பரவியது. இவரின் தோழர்களும் மறைப்பணியை சிறப்பாக ஆற்றினர். கிறிஸ்தவ மக்கள் பெருகினர். இதனால் சோகுன் டோயோடோமி ஆத்திரமடைந்து 25 தோழர்களையும் பிடித்து சிறையிலடைத்தான். பின்னர் நாகசாகி நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அடித்து கொல்லப்பட்டார்கள்
செபம்: ஆற்றல் வழங்கும் எம் தந்தையே! இன்றைய நாளில் நினைவுகூரும் இப்புனிதர்களுக்கு நீர் சிலுவையின் வழியாக உமது எல்லையில்லா பேரின்ப வாழ்வை அளித்தீர். நாங்கள் உமது விசுவாசத்தில் நிலையாக நிலைத்திருந்து, இறை நம்பிக்கையை எங்களின் இறுதி மூச்சுவரை பற்றிக்கொள்ள உம் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment