Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 13 February 2016

இன்றைய புனிதர் 2016-02-14 மறைப்பணியாளர் சிரில் மற்றும் மெத்தோடியுஸ் Cyrillus und Methodius

                               

                        
                    இன்றைய புனிதர் 2016-02-14
மறைப்பணியாளர் சிரில் மற்றும் மெத்தோடியுஸ் Cyrillus und Methodius

பிறப்பு 9 ஆம் நூற்றாண்டு,தெசலோனிக்கா, கிரேக்க நாடு

இறப்பு சிரில் : 14 பிப்ரவரி 869 உரோம்
மெத்தோடியஸ் : 6 ஏப்ரல் 885 உரோம்

பாதுகாவல் : ஐரோப்பா கண்டம், இடி, மழையிலிருந்து

அரசர் 3 ஆம் மைக்கேல் என்பவர் இவ்விரு குருக்களையும் தன் நாட்டிற்கு மறைபரப்பு பணிக்காக அழைத்தான். இவர்கள் இருவரும் ஸ்லேவிஸ் மொழியை முதன் முதலாகக் கற்றுக்கொண்டு சிறப்பாக மறைப்பணியாற்றினார். பின்னர் ஸ்லேவிஸா மொழியில் சில இலக்கிய நூல்களை எழுதினர். பிறகு சில கிறிஸ்தவ புனித நூல்களையும் ஸ்லேவிஸா மொழியில் மொழிபெயர்த்தனர்.

பலவிதமான மறைப்பரப்பு பணிகளை ஆற்றிய இவர்கள் இருவரும் மேரன் (Mähren) என்ற நகரிலிருந்து உரோம் நகரை நோக்கி பயணம் செய்தனர். அங்கு திருத்தந்தை 2 ஆம் அத்திரியான் Hadrian II, திருத்தந்தை கிளமென்ஸ் அவர்களின் இறந்த உடலை பாதுகாக்கும் பொறுப்பை அளித்தார். பின்னர் அவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை இலக்கியமாக வடிவமைக்கும் பணியையும் அளித்தார். இப்பணியை ஆற்ற சிரில் உரோம் நகரிலிருந்து ஒரு துறவற இல்லத்தை தன் இருப்பிடமாகக் கொண்டார். அங்கு 50 நாட்கள் மட்டுமே இலக்கியப் பணியை ஆற்றிய சிரில், கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.

பிறகு திருத்தந்தை 2 ஆம் அத்திரியான் மெத்தோடியஸை பனோனியன் Pannonien நகருக்கு பேராயராக தேர்வு செய்தார். அந்நகரில் சிறந்த முறையில் தனது பேராயர் பணியை தொடர்ந்த மெத்தோடியஸ், சால்ஸ்பூர்க்கில்Salzburg, கைதியாக பிடித்துக்கொண்டு போகப்பட்டார். பிறகு திருத்தந்தை 8 ஆம் யோஹானஸ் அவர்களால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு 873 ஆம் ஆண்டு மீண்டும் பேராயர் பணியை தொடர அனுமதிக்கப்பட்டார். இவர் ஸ்லேவிஸ் மொழியில் தனது மறைப்பணியை தொடர்ந்தாற்றினார். இதனால் சிலரின் எதிரியாகவும் மாறினார். இதனால் திருச்சபையில் பல குழப்பங்கள் ஏற்பட்டது, இவரின் இறப்பிற்கு பிறகு ஆலயங்களில் ஸ்லேவிஸ் மொழியில் போதிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது

செபம்:
வரங்களை வாரி வழங்குபவரே எம் இறைவா! பல மொழி பேசும் திறனை இன்றைய புனிதர்களுக்கு கொடையாக அளித்தீர். உமது அருளால் அவர்களின் மறைப்பரப்பு பணிகளில் உடனிருந்து வழிநடத்தினீர். இன்று பல மொழி இலக்கியங்களில் நூல்களை எழுதியும், அவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் நண்பர்களை நீர் ஆசிர்வதியும், உமது அருளால் அவர்களை நிரப்பியருளும். தங்களின் பணிகளின் வழியாக உம்மை இவ்வுலகில் பறைசாற்ற அவர்களை உமது கருவியாய் பயன்படுத்தி வாழ்ந்திட வரமருளூம்

No comments:

Post a Comment