Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 4 February 2016

இன்றைய புனிதர் 2016-02-04 மறைப்பணியாளர் மறைசாட்சி புனித ஜான் தெ பிரிட்டோ John de Britto SJ

                                      

பிறப்பு1 மார்ச் 1647,லிசாபோன் Lissabon, போர்த்துக்கல்

இறப்பு 4 பிப்ரவரி 1693,இந்தியா

புனிதர்பட்டம்: 22 ஜூன் 1947 திருத்தந்தை 12 ஆம் பயஸ் Pope Pius XII

பாதுகாவல் : சிவகங்கை, மதுரை மறைமாவட்டம்

இவர் புனித சவேரியாரைப் பின்பற்றி இயேசு சபையில் சேர்ந் தார். பின்னர் மறைப்பரப்பு பணிக்காக இந்திய நாட்டிற்குச் சென்றார். அங்கு பல சமயங்களின் மத்தியில் பலதரப்பட்ட மக்களிடையே மறைப்பணியை ஆற்றினார். சிறப்பாக 1692 ஆம் ஆண்டு ஏறக்குறைய 4000 இந்து மதத்தைச் சார்ந்தவர்களை மனந்திருப்பினார். அந்நாட்டில் வாழும், இந்தியத் துறவிகளைப் போலவே தன் வாழ்வையும் மாற்றிக்கொண்டு, கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக அநீதிகளை எதிர்த்துப் போரிட்டார். மக்கள் நெறி தவறா கிறிஸ்தவ வாழ்வை அறிவுறுத்தினார். ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லற ஒருமைப்பாட்டுக் கற்பொழுக்கத்தை வலியுறுத்திப் போதித்தார். இதன் விளைவாக எதிரிகளால் பிடிக்கப்பட்டு, தனது 45 ஆம் வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

செபம்:
திடம் அளிப்பவரே எம் இறைவா! புனித ஜான் தெ பிரிட்டோவிற்கு தளரா மனதையும், திடத்தையும் அளித்து உமது திருமறையை எம் பாரத நாட்டில் பரவச் செய்தீர். அவரது விழாவை சிறப்பிக்கும் நாங்கள் அவருடைய பேறுபலன்களையும் பரிந்துரைகளையும் பெற்று, அவரின் விசுவாசத்தை பின்பற்றி வாழ உமது வரம் தாரும்.

No comments:

Post a Comment