Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 4 February 2016
இன்றைய புனிதர் 2016-02-04 மறைப்பணியாளர் மறைசாட்சி புனித ஜான் தெ பிரிட்டோ John de Britto SJ
இவர் புனித சவேரியாரைப் பின்பற்றி இயேசு சபையில் சேர்ந் தார். பின்னர் மறைப்பரப்பு பணிக்காக இந்திய நாட்டிற்குச் சென்றார். அங்கு பல சமயங்களின் மத்தியில் பலதரப்பட்ட மக்களிடையே மறைப்பணியை ஆற்றினார். சிறப்பாக 1692 ஆம் ஆண்டு ஏறக்குறைய 4000 இந்து மதத்தைச் சார்ந்தவர்களை மனந்திருப்பினார். அந்நாட்டில் வாழும், இந்தியத் துறவிகளைப் போலவே தன் வாழ்வையும் மாற்றிக்கொண்டு, கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். ஏழை எளிய மக்களுக்காக அநீதிகளை எதிர்த்துப் போரிட்டார். மக்கள் நெறி தவறா கிறிஸ்தவ வாழ்வை அறிவுறுத்தினார். ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லற ஒருமைப்பாட்டுக் கற்பொழுக்கத்தை வலியுறுத்திப் போதித்தார். இதன் விளைவாக எதிரிகளால் பிடிக்கப்பட்டு, தனது 45 ஆம் வயதில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment