Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 4 February 2016

இன்றைய புனிதர் 2016-02-05 மறைசாட்சி ஆகத்தா Agatha


                                              


பிறப்பு225,கத்தானியா Catania, இத்தாலி

இறப்பு250,செசிலி, Sizilien

பாதுகாவல் : கத்தானியா, தங்கம் தயாரிப்பாளர், நெசவாளர், நெருப்பு, நிலநடுக்கத்திலிருந்து

இவர் ஓர் சிறந்த பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந் தவர். இவரின் பெற்றோர் இவரை, ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவராக வளர்த்தனர். பிறப்பிலிருந்தே மிக அழகுவாய்ந்த பெண்ணாக இருந்தார். இவர் இறைவனின் மேல் அளவுகடந்த பக்தி கொண்டவராக இருந்ததால் 30 நாட்கள் பகைவர்களால் மறைத்து வைக்கப்பட்டு வதைக்கப்பட்டார். தனது விசுவாச வாழ்வில், பல கொடுமைகளின் மத்தியிலும் சிறந்தவராக திகழ்ந்தார். இதனால் இன்னும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.

இவர் இன்னும் அதிகமாக இறைவனைப் பற்றிக்கொண்டதால் வெடிகள் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். பின்னர் மார்பு அறுக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டார். அத்துடன் நெருப்பினால் சுடப்பட்டார். கொதிக்கும் எண்ணெயில் தள்ளப்பட்டார். பல உடைந்த பொருட்களால் உடல் முழுவதும் அகோரமாக கிழிக்கப்பட்டார். இவர் அனைத்துத் துன்பங்களையும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் ஏராளமான வேண்டல்களோடும் தன் துன்பங்களைக் கடவுளுக்காக அர்ப்பணித்தார்.


செபம்:
தூய்மைக்கெல்லாம் ஊற்றாம் எம் இறைவா! கன்னியும் மறைசாட்சியுமான புனித ஆகத்தா, தனது தூய வாழ்வாலும் வீரமுள்ள மறைசாட்சியத்தாலும், உமது பார்வையில் மிக மதிப்புக்குரியவரானார். அவரின் பரிந்துரையால் எங்களின் பாவங்களை மன்னித்து, எம்மை உம்மோடு இணைத்துக்கொள்ள வரமருளும்.

No comments:

Post a Comment