Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 15 February 2016

இன்றைய புனிதர் 2016-02-15 சபைநிறுவுநர் தெயோடோசியுஸ் புளோரெண்டினி Theodosius Florentini OFM cap

                   

                             
                          இன்றைய புனிதர் 2016-02-15
                 சபைநிறுவுநர் தெயோடோசியுஸ் புளோரெண்டினி Theodosius Florentini OFM cap

பிறப்பு 23 மே 1808, முன்ஸ்ரர் Münster, சுவிஸ்

இறப்பு 15 பிப்ரவரி 1865, ஹைடன் Heiden, சுவிஸ்

இவர் அண்டோன் கிறிஸ்பின் Anton Crispin என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். இவர் சுவிட்சர்லாந்தில் மென்சிங்கர் Menzinger அருள்சகோதரிகள் மற்றும் பார்ம்ஹெர்சிகன் Barmherzigenஅருள்சகோதரிகள் என்ற இரு சபைகளை நிறுவினார். இவர் 1825 ஆம் ஆண்டு தனது 17 வய திலேயே கப்புச்சின் சபையில் சேர்ந்து குருவானார். பின்னர் பலரின் வாழ்வில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். அத்து டன் பல குடும்பங்களில் அப்போஸ்தல வாழ்வை அறிமுகப்படு த்தினார். அத்துடன் பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் பல தொழிற்சாலைகளிலும் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியா ற்றினார்.


இவர் கைவிடப்பட்டவர்களுக்கென்று பல இல்லங்களை நிறுவினார். அதன்பிறகு ஆண்களுக்கென சில மருத்துவப் பயிற்சி பெறும் இல்லங்களை நிறுவினார். இடைவிடாமல் பணியாற்றி பல அச்சிடும் நிறுவனங்களையும், நூலகங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினார். இவர் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்பாக ஆற்றினார். இவர் "மக்களின் மறைப்பரப்பு பணியாளர்" என்றழைக்கப்பட்டார். இவரின் உடல் ஓர் "அப்போஸ்தலிக்க பள்ளியில்" அடக்கம் செய்யப்பட்டது. 1906 ஆம் ஆண்டு அவரின் கல்லறையின் மேல் பார்ம்ஹெர்சியின் சிஸ்டர்ஸ் பேராலயம் ஒன்றை எழுப்பினர்.


செபம்:
எங்களின் அன்பான தந்தையே! தனது பல்வேறு விதமான பணிகளின் வழியாகவும், பல புதிய முயற்சிகளின் வழியாகவும் உம் பணியை திறம்பட ஆற்றிய தெயோடோசியுஸ் அவர்களை எம் முன்னோர்களுக்கு கொடையாக தந்தமைக்காக நாங்கள் உம்மை போற்றிப் புகழ்கின்றோம். அவர் நிறுவிய அனைத்து நிறுவனங்களையும் நீர் தொடர்ந்து வழிநடத்தும். இதன்வழியாக பல ஏழைகள் பயனடைய வழிகாட்டும். அவர் நிறுவிய துறவற சபைகளை உமது சீடத்துவவாழ்வை வாழ, வழிகாட்டிட வேண்டுமாய் தந்தையே உம்மை இறைஞ்சு வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment