Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 8 May 2016

இன்றைய புனிதர்2016-05-08 புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy) துறவி, சபை நிறுவுனர்

இன்றைய புனிதர்2016-05-08                                                                 புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy)                                                                     துறவி, சபை நிறுவுனர்                                                                                       

பிறப்பு 11 ஏப்ரல் 1815 ஆஹன்(Aachen), ஜெர்மனி                                   இறப்பு 8 மே 1848 சிம்பல்பெல்டு(Simpelfeld), ஹாலந்து

வர் தனது கல்வியை முடித்தபின் துறவற சபைகளை பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை படித்தார். ஆஹனில் பிற ந்த இவர், தனது பங்குதந்தை பவுல் உதவியுடன், பல சமூக பணி களில் தன்னை ஈடுபடுத்தினார். சிறப்பாக இளைஞர்களிடத்தில் அதிக அன்பு காட்டினார். 1837 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் ஆஹனில் இளைஞர்களுக்கென்று ஓர் பள்ளியை நிறுவினார். இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு, இவரின் சமூக சேவை பணிக்குழுவில் இருந்தவர்கள் முன் வந்தனர். இவ ர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமூக சேவையோடு, 1844 ஆம் ஆண்டு இறைவனின் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திகொ ண்டனர். இதன் விளைவாக 1848 ஆம் ஆண்டு கிளாரா ஃபாய் அவ ர்கள் "குழந்தை இயேசுவின் ஏழைகள்" என்ற சபையை நிறுவி னார். ஏராளமான ஏழை குழந்தைகளை ஒன்று சேர்த்து அவர் களை பராமரித்தார்கள் இச்சபை கன்னியர்கள். அதோடு கல்வி கற்றுக் கொடுத்து, வாழ்விற்கு வழிகாட்டி, தாய்க்குத் தாயாக இருந்து பராமரித்தார்கள். நாளடைவில் குழந்தைகளின் எண் ணிக்கை பெருகவே மீண்டும் ஓர் துறவற இல்லத்தை நிறுவி னார். இதில் பல கைவிடப்பட்ட பெண்களும், விதவைகளும் வந்து சேர்ந்தனர். கிளாரா இச்சபையை தொடங்கிய 15 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி முழுவதும் 19 துறவற மடங்களை துவ ங்கினார். சில கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையில் இவ ரது சபை ஹாலந்து நாட்டிலும் தொடங்கப்படவேண்டியதாக இருந்தது. இதனால் ஹாலந்து நாட்டில் ஓர் துறவற மடம் தொடங் கப்பட்டு, அந்த மடமே பிற்காலத்தில் இச்சபையின் தலைமை இல்லமாகவும் அமைந்தது. இச்சபையின் முதல் சபைத்தலைவி யாக கிளாரா ஃபாய் அவர்களே பொறுப்பேற்றார். பல ஏழை குழ ந்தைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும், விதவைகளுக் கும் தாயான இவர் இறந்தபிறகு ஹாலந்து நாட்டிலுள்ள சிம்பல் பெல்டு என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, இவரை முன் மாதி ரியாக கொண்டு இன்றுவரை இச்சபைத்துறவிகள் பணியா ற்றிவருகிறார்கள்


செபம்:


ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று மொழிந்த இயேசுவே! பெண்களின் மேல் அக்கறை கொண்டு, ஓர் சபையை நிறுவி இன்று வரை பணியாற்றிகொண்டிருக்கும் இச்சபையை நீர் நிறைவாக ஆசிர்வதியும். பெண்களின் முன்னேற்றத்தி ற்காக உழைக்கின்ற ஒவ்வொருவருக்கும் நல்ல உடல், உள்ள, ஆன்ம நலன்களை தந்து, எல்லா இடையூறுகளையும் எதிர் கொள்ள உமது சக்தியை தந்து, ஆசீர்வதித்து வழிநடத்தி யருள வேண்டுமென்று தந்தையாம் இயேசுவே உம்மை வேண்டு கிறோம்.

No comments:

Post a Comment