இன்றைய புனிதர் 2016-05-17
புனித பாஸ்காலீஸ் பேலோன் (St.Paschalis Baylon)குரு
இறப்பு 17 மே 1592 வாலென்சியா(Valencia)
புனிதர்பட்டம்: 1690 திருத்தந்தை எட்டாம் அலெக்ஸாண்டர்
இவர் பிறந்து வளர்ந்த உடன் குடும்பத்தை கவனிக்கும் பொறு ப்பை ஏற்றார். இதனால் ஆடுகளை பராமரிக்கும் ஆயனாக கூலி வேலைக்கு சேர்ந்தார். இவர் ஒருபோதும் பள்ளிக்கூடம் போனதே இல்லை. ஆனால் இவர் தானாகவே எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். ஆடு, மாடுகளை வயலில் மேய்க்கும் போது கடவு ளின் படைப்பை கண்டுரசித்து, அதன்வழியாக கடவுளை வழிப ட்டு அவரோடு தொடர்புகொண்டார்.
தனக்கு 17 வயது நடக்கும்போது பிரான்சிஸ்கன் சபையில் ஆடு, மாடுகளை பராமரிக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டார். அப்போ துதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள் விப்பட்டு, அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டார். இதனால் இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்களால் மிகவும் ஈர்க்கப்ப ட்டார். இவரது ஆழமான விசுவாசத்தை கண்ட அச்சகோதரர்கள் இவரை தங்கள் சபையில் சேர அனுமதித்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள் அச்சகோதரர்களையும், பாஸ்காலிஸ்சையும் தவறாக பேசினர். இதனால் பாஸ்காலிஸ் மிகவும் வேதனைப்ப ட்டார். இருப்பினும் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் அவரை ஊக்கமூட்டி, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்ற னர். பின்னர் அச்சபை தலைமை சகோதரர் அவர்களின் அறிவு ரைப்படி, இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரராக வாழ முழும னதுடன் விருப்பம் தெரிவித்தார்.
அதன்பிறகு 1564 ஆம் ஆண்டு மான்போர்ட் சபை சகோதரர்கள் பாஸ்காசிசை தங்கள் சபைக்கு கடனாக தர வேண்டி இடைவி டாமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் வற்புறுத் தலால் சில வருடங்களுக்கு கடனாக மான்போர்ட் சபைக்கு அனு ப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் ஏழ்மையில் வாழ்ந்து, எளிமை யான வாழ்வை மேற்கொண்டு சில துறவற மடங்களை ஏற்படுத் தினார். அவர் ஏற்படுத்திய துறவற மடங்களில், சிறிய சிறிய பணிகளில் அமர்த்தப்பட்டு, அவற்றை திறம்பட இறைவ னின் மகிமைக்காக செய்தார். அவர் மான்போர்ட் சபையில் இருந்தா லும் கூட, பிரான்சிஸ் சபையின் ஒழுங்குகளை தவறாமல் கடை பிடித்து வந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். அவர் திவ்விய நற்கருணை பேழையின் முன் மணிக் கணக்காக அமர்ந்து செபிப்பார். அதிலிருந்துதான் அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ் வில்லத்திலுருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொட ர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவ னடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலங்கா அற்புதங் கள் இன்று வரை நடந்து வருகின்றது.
இவர் ஸ்பெயின் நாட்டு புனிதர்களில் மிக உயர்ந்த புனிதராக அழைக்கப்படுகின்றார். 1897 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் பலிபீட திருவருட்சாதனத்தின் பாதுகாவலர் என்றழைக்கப்பட்டார். இவர் இறந்த 100 வருடங்களுக்குப்பிறகு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! திவ்விய நற்கருணை யின் மீது அளவில்லா நம்பிக்கைக்கொண்டு, வாழ்விற்குத் தேவையான சக்தியை புனித பாஸ்காலிஸ் பெற்றுக் கொண்டார். நாங்களும் அவரைப் போல திவ்விய நன்மை உட்கொண்ட பிறகு உம்மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு வாழ எமக்கு உமது ஆசீர்வாதங்களைத் தாரும்.
தனக்கு 17 வயது நடக்கும்போது பிரான்சிஸ்கன் சபையில் ஆடு, மாடுகளை பராமரிக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டார். அப்போ துதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள் விப்பட்டு, அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டார். இதனால் இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்களால் மிகவும் ஈர்க்கப்ப ட்டார். இவரது ஆழமான விசுவாசத்தை கண்ட அச்சகோதரர்கள் இவரை தங்கள் சபையில் சேர அனுமதித்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள் அச்சகோதரர்களையும், பாஸ்காலிஸ்சையும் தவறாக பேசினர். இதனால் பாஸ்காலிஸ் மிகவும் வேதனைப்ப ட்டார். இருப்பினும் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் அவரை ஊக்கமூட்டி, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்ற னர். பின்னர் அச்சபை தலைமை சகோதரர் அவர்களின் அறிவு ரைப்படி, இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரராக வாழ முழும னதுடன் விருப்பம் தெரிவித்தார்.
அதன்பிறகு 1564 ஆம் ஆண்டு மான்போர்ட் சபை சகோதரர்கள் பாஸ்காசிசை தங்கள் சபைக்கு கடனாக தர வேண்டி இடைவி டாமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் வற்புறுத் தலால் சில வருடங்களுக்கு கடனாக மான்போர்ட் சபைக்கு அனு ப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் ஏழ்மையில் வாழ்ந்து, எளிமை யான வாழ்வை மேற்கொண்டு சில துறவற மடங்களை ஏற்படுத் தினார். அவர் ஏற்படுத்திய துறவற மடங்களில், சிறிய சிறிய பணிகளில் அமர்த்தப்பட்டு, அவற்றை திறம்பட இறைவ னின் மகிமைக்காக செய்தார். அவர் மான்போர்ட் சபையில் இருந்தா லும் கூட, பிரான்சிஸ் சபையின் ஒழுங்குகளை தவறாமல் கடை பிடித்து வந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். அவர் திவ்விய நற்கருணை பேழையின் முன் மணிக் கணக்காக அமர்ந்து செபிப்பார். அதிலிருந்துதான் அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ் வில்லத்திலுருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொட ர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவ னடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலங்கா அற்புதங் கள் இன்று வரை நடந்து வருகின்றது.
இவர் ஸ்பெயின் நாட்டு புனிதர்களில் மிக உயர்ந்த புனிதராக அழைக்கப்படுகின்றார். 1897 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் பலிபீட திருவருட்சாதனத்தின் பாதுகாவலர் என்றழைக்கப்பட்டார். இவர் இறந்த 100 வருடங்களுக்குப்பிறகு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! திவ்விய நற்கருணை யின் மீது அளவில்லா நம்பிக்கைக்கொண்டு, வாழ்விற்குத் தேவையான சக்தியை புனித பாஸ்காலிஸ் பெற்றுக் கொண்டார். நாங்களும் அவரைப் போல திவ்விய நன்மை உட்கொண்ட பிறகு உம்மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு வாழ எமக்கு உமது ஆசீர்வாதங்களைத் தாரும்.

No comments:
Post a Comment