Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 18 May 2016

இன்றைய புனிதர் 2016-05-18 புனித முதலாம் யோவான் (St. John I) திருத்தந்தை, மறைசாட்சி (Pope, Martyr)


                   

           இன்றைய புனிதர் 2016-05-1                         புனித முதலாம் யோவான் (St. John I)

திருத்தந்தை, மறைசாட்சி (Pope, Martyr)

பிறப்பு டோஸ்கானா(Tuscany), இத்தாலி

இறப்பு 18 மே 526 ராவென்னா(Ravenna)

இவர் ஹார்மிஸ்தாஸ்(Hormisdas) என்ற திருத்தந்தைக்கு அடுத்தப்படியாக 523 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாள் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கான் ஸ்டாண்டினோபிள் என்ற நகரில், ஒரு தூதவராக காலடி எடுத்து வைத்த முதல் திருத்தந்தை. இவர் திருத் தந்தையாக இருந்தபோது, ஆரியமதத்தை சேர்ந்த சேர் ந்த அரசர் முதல் தியோடரிக்(Theoderich) உரோம் நகரை ஆட்சி செய்து வந்தான். அப்போது கான்ஸ்டாண்டி னோபிளில் இருந்த மன்னர் ஜஸ்டினோஸ்(Justinos) அந்ந கரிலிருந்த ஆரிய மதத்தை சார்ந்த முதலாம் ஜஸ்டி னோஸ் என்பவரை கொடுமைப்படுத்துகிறான் என்ப தைப்பற்றி கேள்விப்பட்டான். இதனால் மன்னர் ஜஸ் டினோஸிடம் இப்பிரச்சனைகளைப்பற்றி பேசவும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தவும் வேண்டி, அரசர் தியோடரிக், திருத்தந்தையை தூதுவராக கான்ஸ்டா ண்டினோபிளுக்கு அனுப்பி வைத்தார். திருத்தந் தையை அன்புடன் நடத்துமாறு அந்நாட்டு மன்னருக்கு தூதுவிட்டான்.

அப்போது திருத்தந்தை, மன்னர் ஜஸ்டினோஸிடம் மிக வும் அன்பாகவும், ஞானத்தோடும், பேசி எல்லாப் பிரச்ச னைகளையும் தீர்த்துவைத்து, நல்லதோர் உறவை ஏற் படுத்தி, சமாதான உடன்படிக்கை செய்து வைத்துவி ட்டு, மீண்டும் திருத்தந்தை இத்தாலி நாட்டிற்கு திரும்பி   னார். நடந்தவைகள் அனைத்தையும் அரசர் தியோடரிடம் எடுத்து கூறினார் திருத்தந்தை. திருத்தந்தை ரோம் திரும்பிய சில மாதங்களிலேயே கான்ஸ்டாண்டினோபிள் மன்னன், அவரை சந்தித்து பேச உரோம் வந்தான். இவர்கள் இருவருக்கும் நல்லதோர் உறவு ஏற்பட்டது. திருச்சபையையும், நாட்டையும் நல்வழியில் வழிநடத்த ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்தனர். இவர்களின் நல்லுறவை கண்ட அரசர் தியோடரிக், பொறாமைக்கொண்டு பயமுற்றான். அவர்கள் இவனுக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணினான். இதனால் தியோடரிக் ஆத்திரம்கொண்டு மன்னன் ஜஸ்டினின் ஆட்களில் ஒருவரான பொயித்தியஸ்(Poithias) என்பவரைக் கொன்றான். அதன்பின் திருச்சபைக்கெதிராக பல அநியாயங்களை செய்தான். பிறகு ராவென்னா நகரில் திருத்தந்தையைச் சிறையிலிட்டான். அங்கு அவர் சொல்லொண்ணாத் துயரங்களை அடைந்தார். கொடிய வேதனைக்குப்பின் உயிர்நீத்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப்பின் தியோடரிக்கும் இறந்தார். ஆனால் அவன் இறப்பதற்கு முன் தனக்குப்பிடித்த ஒருவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்துவிட்டு இறந்தான்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! நீர் சிலுவைச் சாவை சுமந்து, உயிர் நீத்ததைப்போல, கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப பல ஆயர்களும், குருக்களும், கன்னியரும், பொதுநிலையினரும் உயிர் துறந்துள்ளனர். இவர்களின் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, எம்மை முழுவதும் அர்ப்பணித்து உமக்காக வாழ்ந்திட உம் அருளைப் பொழிந்தருளும்.

No comments:

Post a Comment