Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 27 May 2016

இன்றைய புனிதர் 2016-05-27 புனித அகஸ்டின் (St. Augustine) காண்டர்பரி ஆயர்(Archbishop of Canterbury)

                                         

             இன்றைய புனிதர் 2016-05-27

          புனித அகஸ்டின் (St. Augustine)

               காண்டர்பரி ஆயர்(Archbishop of Canterbury)

பிறப்பு ஆறாம் நூற்றாண்டு ரோம், இத்தாலி

இறப்பு26 மே 605கெண்ட், காண்டர்பரி, இங்கிலாந்து

இவர் காண்டர்பரி நகரின் முதல் ஆயர். இவர் இங்கிலாந்து நாட் டின் பாதுகாவலர். உரோமைத் துறவற மடத்திலிருந்து, இவரது தலைமையில்தான், திருத்தந்தை பெரிய கிரகோரியார் 40 துற விகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்பு பணிக்காக அனு ப்பிவைத்தார். அப்போது அவர்கள் பிரான்சு நாட்டு வழியே சென் றார்கள். அச்சமயத்தில் இங்கிலாந்து நாட்டு மக்களின் சூழ்ச்சி யைக் கண்டு அச்சமுற்றார்கள். அவர்கள் திருத்தந்தையின் ஆலோசனை என்ன என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள, தங் கள் தலைவரை உரோமுக்கு அனுப்பினர். தங்களுக்கு மறைபோ தக பணியை ஆற்றுவதற்கு சாக்சென் மொழி தெரியாதென்ப தையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னா ர்கள்.

இதற்கு திருத்தந்தை வதந்திகளையும், பயமுறுத்தல்களையும் பார்த்து அஞ்சவேண்டாம். இறைவனில் முழு நம்பிக்கை கொள் ளுங்கள். பல தியாகங்களை செய்யுங்கள். என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக்கொள்ளு ங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடு த்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, இயேசு வின் பணியை செய்யத் தயாரானார்கள். இதனைத் தொடர்ந்து 597 ல் தானெட் (Thanet) என்ற தீவை அடைந்து பணியைத் தொடர்ந் தார்கள். இந்தத் துறவிகளின் அயராது உழைப்பும், அஞ்சா நெஞ் சமும் எந்த அளவுக்கு வெற்றியை கொணர்ந்தது என்பதைப் பற்றி புனித பேதா அவரின் வரலாற்றில் புகழ்ச்சியோடு எழுதி யுள்ளார்.

இவர்கள் தானெட் தீவில் பணி செய்தபோது, புனித மார்ட்டின் பெயரால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று அங்கு இருந்தது. இவ்வால யம் மிகவும் பாழடைந்து கிடந்தது. இதை இத்துறவிகளிடம் ஒப்படைத்தனர். அத்துறவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அக்கோவிலில் செபித்தனர். பண் இசைத்தனர். திருப்பலி நிறைவேற்றினர், போதித்தனர். திருமுழுக்கு கொடுத்து வந் தனர். இவர்களது எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த ஜெப வாழ்வும் அந்நாட்டு அரசனை பெரிதும் கவர்ந்தது. அரசன் எதெல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார். அங்கி ருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவன்று மனந்திரும்பி புதிய ஞானஸ் நானம் பெற்றனர். நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத் தகு முறையில் வளர்ச்சியடைந்தது. இதையறிந்த திருத்தந்தை அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால் இவ ர்களுக்கும், திருத்தந்தைக்கும் இருந்த உறவு மேலும் வலுப்பெ ற்றது. இவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்த புனித அகஸ்டீன், இங்கிலாந்து நாட்டில் காலடி எடுத்துவைக்கும் போதே காட்சியாகக் கண்டு இவையனைத்தும் நடக்கும் என்று சொன்னார். அவர் இச்சகோதரிகளை ஏஞ்சல்ஸ்(தேவ தூதர்கள்) என்றே கூறி வந்தாராம். மிக மேலான காரியங்களையும் இறைவ னின் மேல் சுமத்திவிட்டு, இறைவன் பெயரால் செய்து இக்கன் னியர்களை கொண்டு மறையுரையாற்றி வெற்றி கண்டாராம் இப்புனிதர்.


செபம்:

நல்ல நண்பனே என் இறைவா! தீயவர்களின் நடுவில் மறைபரப் பாற்றி, வெற்றி பெற்று, உமது நாமத்தை நிலைநாட்டி, கொடியவ ர்களையும் தம் அன்பு செயல்களால் மனந்திருப்பினார். இன் றைய புனிதர் அகஸ்டின் இன்னும் உம் பணியை தைரியத்துடன் செய்து, எதிரிகளை அன்பால் ஈர்த்து உம்மை இவ்வுலகில் பரப்ப ஒவ்வொரு துறவறத்தாருக்கும் உம் அருள் தாரும்.

No comments:

Post a Comment