
இன்றைய புனிதர் 2016-05-23
புனித ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி (St.John Baptista de Rossi)குரு
பிறப்பு 1698வோல்ஜியோ(Voltgio), இத்தாலி
இறப்பு 23 மே 1764 உரோம்
புனிதர்பட்டம்: 1881, திருத்தந்தை 13 ஆம் லியோ
இவர் ரோமில் டொமினிக்கன் சபையில் படித்தவர். படிக் கும் போது இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இறக்கும் வரை இவர் இந்நோயால் அவதிப்பட்டார்.. 1721 ஆம் ஆண்டு ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி குருவானார். இவர் குருவான நாளிலிருந்து ஏழைமக்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஏழை மக்களுக்கென்று, எதிர்கால வாழ்வில் முன்னேறுவதற்காக ஒரு குழுவை அமைத்தார். இதன்வழியாக மக்களுக்கு தன் நம்பிக்கையும், தைரியத்தையும், அவர் அவர்க ளுக்குரிய உரிமையோடு பேசுவதற்கும், நோன்பிருந்து செபிப்ப தற்கும், தவத்தின் வழியாக பல நற்பலன்களை அடைவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தார். 1737 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை, தீயவர்களை எதிர்த்து போராடி ஏழை மக்களின் உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். கானானிய மக்க ளின் நண்பராக வாழ்ந்து அவர்களின் ஆன்மகுருவாகவே இறந் தார். இவர் இறந்தபிறகு ஜாதி, மதம் என்று பாராமல் அனைத்து மக்களும் இவரின் கல்லறைக்கு வந்து, இவரை வழிபட்டு, நற்பல ன்கள் பலவற்றை பெற்று சென்றனர்.
செபம்:
இரக்கத்தின் ஊற்றே இறைவா! இன்று புனிதர்களாக போற்றப்படுகின்றவர்களில் பெரும்பாலானோர், ஏழை, எளிய மக்களுக்காக உழைத்தவர்களாக உள்ளனர். இவர்களின் முன்மாதிரிகையான வாழ்வைப் பின்பற்றி, இன்றைய உலகில் உள்ள ஒவ்வொரு இறையடியார்களும் ஏழை எளியவரை அன்பு செய்து வாழ உமது அருள் வரங்களை தந்து காத்திட வேண்டுமாய் உம்மை இறைஞ்சுறோம்.
செபம்:
இரக்கத்தின் ஊற்றே இறைவா! இன்று புனிதர்களாக போற்றப்படுகின்றவர்களில் பெரும்பாலானோர், ஏழை, எளிய மக்களுக்காக உழைத்தவர்களாக உள்ளனர். இவர்களின் முன்மாதிரிகையான வாழ்வைப் பின்பற்றி, இன்றைய உலகில் உள்ள ஒவ்வொரு இறையடியார்களும் ஏழை எளியவரை அன்பு செய்து வாழ உமது அருள் வரங்களை தந்து காத்திட வேண்டுமாய் உம்மை இறைஞ்சுறோம்.
No comments:
Post a Comment