
இன்றைய புனிதர் 2016-05-25
புனித வணக்கத்துக்குரிய பேதா (St.Beda, the Reverend)
பிறப்பு இங்கிலாந்து
இறப்பு 735இங்கிலாந்து
இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். இவர் ஆசீர்வாத ப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர் இவருக்கு 7 வயது நடக்கும்போது நார்த்தம்பிரியாவில்(Narthampriya) இருந்த துறவற மடத்தில், புனித பெனடிக்ட் பிஸ்கோப்(Benedict Piskop) என்ப வரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப் பட்டு வந்தார். அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுதேர்வ தில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பது தான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம்.
இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொட ங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர் எழுதிய 45 நூல்க ளில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலா ந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூ லை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழி யாமல் பதிந்துவிடும்.
அவரது இறுதி நாளன்று, அவர் அவரது மாணவர்களில் ஒருவ ராகிய வில்பெர்ட் (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்கு மாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர். அப்போது வில்பெர்ட், பேதாவை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதி கொண்டிருந்தோம். அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ் சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பேதா, "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். அப்போது பேதா, அம்மாணவரிடம் நல்லது பிள்ளாய்! இப்போது எனது தலையை உனது கைகளால் தாங்கிப்பிடி. இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போ கிறேன் என்று கூறினார். வில்பெர்டும் அவர் சொன்னப்படியே செய்தார். அப்போது பேதா "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே உயிர் நீத்தார்.
செபம்:
வாழ்வின் ஊற்றே எம் இறைவா! ஆழமான ஆன்மீகத்தின் வழியாகவும், உம்மை தன் கற்று கொடுக்கும் பணியின் வழியாகவும் புனித பேதா இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தார். சாவு என்பது வாழ்வின் எதிரொலி என்பதை கற்பித்து வாழ்ந்தார். இப்புனிதரைபோல ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பக்தியில் வளரவும், வாழவும், உம் அருள் தந்து காத்திடும்.
இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொட ங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர் எழுதிய 45 நூல்க ளில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலா ந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூ லை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழி யாமல் பதிந்துவிடும்.
அவரது இறுதி நாளன்று, அவர் அவரது மாணவர்களில் ஒருவ ராகிய வில்பெர்ட் (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்கு மாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர். அப்போது வில்பெர்ட், பேதாவை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதி கொண்டிருந்தோம். அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ் சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பேதா, "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். அப்போது பேதா, அம்மாணவரிடம் நல்லது பிள்ளாய்! இப்போது எனது தலையை உனது கைகளால் தாங்கிப்பிடி. இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போ கிறேன் என்று கூறினார். வில்பெர்டும் அவர் சொன்னப்படியே செய்தார். அப்போது பேதா "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே உயிர் நீத்தார்.
செபம்:
வாழ்வின் ஊற்றே எம் இறைவா! ஆழமான ஆன்மீகத்தின் வழியாகவும், உம்மை தன் கற்று கொடுக்கும் பணியின் வழியாகவும் புனித பேதா இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தார். சாவு என்பது வாழ்வின் எதிரொலி என்பதை கற்பித்து வாழ்ந்தார். இப்புனிதரைபோல ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பக்தியில் வளரவும், வாழவும், உம் அருள் தந்து காத்திடும்.
No comments:
Post a Comment