Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 15 May 2016

இன்றைய புனிதர் 2016-05-15 புனித.சோபியா மறைசாட்சி

                  
                இன்றைய புனிதர் 2016-0515 

                             புனித.சோபியா

                                                       மறைசாட்சி

பிறப்பு இத்தாலி

இறப்பு 137 ரோம்

இவர் ஓர் திருமணமான பெண். இவருக்கு 3 பெண் குழந்தை பிற ந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் Faith. வய து 12, இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை Hope. வயது 10. மூன்றாவது குழந்தையின் பெயர் அன்பு love. வயது 9. 1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமு ழுக்கு பெயராக வைத்தார். சோபியா. இறைவனை இவர்கள் தங் களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள். இதனால் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள்.

குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன் றார்கள். அதன்பின் தாய் சோபியாவையும் கொன்றார்கள். சோபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைக ளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோபியாவை குழந்தைக ளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார் கள். இவர்கள் அனைவரும் 117- லிருந்து 138 ஆண்டிற்குள் மறைசா ட்சிகளாக இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

778 ஆம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace)உள்ள எசாவ் (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவறமடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனித ரின் பெயர் கொண்டு சோபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகி ன்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.


செபம்:

எங்கள் தாயும் தந்தையுமான இறைவா! உம் பொருட்டு இன்ன ல்கள் அடையும் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். மறைசாட்சியாக மரிக்கின்ற இன்னும் துன்பப்பட்டுகொண்டிரு க்கின்றவர்களை நீர் ஆசீர்வதித்து எதையும் உமக்காக தாங்கும் இதயத்தை தந்திட வேண்டுமாய் இறைஞ்சுகிறோம்.

No comments:

Post a Comment