
இன்றைய புனிதர் 2016-05-12 புனித பங்கிராஸ் மறைசாட்சி
பிறப்பு 289 சின்னாடா(Synnada), பிரிஜியா(Phrygia)
இறப்பு 304 அவுரேலியா(Aurelia), ரோம்(Rome)
கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்கிராஸ் தனது 14 வயதிலேயே டயக்ளீசியன் காலத்தில் கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார். கிறிஸ்துவை நெருங்கி பின்பற்றிய பங்கிராசின் மாமா டெனிஸ் இவரை வளர்த்தார். நாளடைவில் டெனிஸ் கிறிஸ்துவுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். புனித பங்கிராஸ் உரோமையில் மறைசாட்சியாக இறந்தார். அவர் இறந்தபோது து508 ஆம் ஆண்டு திருத்தந்தை சிக்மாக்கஸ் இவரது கல்லறைமீது ஒரு பேராலயம் எழுப்பினார். இப்புனிதரின் கல்லறை உரோமில் அவுரேலியா சாலையில் உள்ளது. உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் அழகாக காட்சியளிக்கிறது.
இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப்பெற்றவ ரெனில், லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்ற போது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிக ளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரை சூட்டினார்.
கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழு திய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதி னார். பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! உமது திருச்சபையைக் காக்க மறைசாட்சியாக மரித்த பங்கிராசுக்காக, இன்று நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். விண்ணகத்திலிருந்து அவர் புரியும் மன்றாட்டின் உதவியினால் திருச்சபையை வளர்க்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.
இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப்பெற்றவ ரெனில், லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்ற போது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிக ளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரை சூட்டினார்.
கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழு திய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதி னார். பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! உமது திருச்சபையைக் காக்க மறைசாட்சியாக மரித்த பங்கிராசுக்காக, இன்று நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். விண்ணகத்திலிருந்து அவர் புரியும் மன்றாட்டின் உதவியினால் திருச்சபையை வளர்க்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.
No comments:
Post a Comment