
இன்றைய புனிதர்2016-05-19
புனித இவோ ஹேலோரி (St.Ivo Helory)
குருபிறப்பு 1253 ரேகையர் (Treguier)
இறப்பு 19 மே 1303
இவர் சட்டவிரோதமாக குற்றம் புரியவர்களை திருத்தும் பணி யையும், ஒருங்கிணைக்கும் பணியையும் செய்தார். இவர் இறை யியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறையும் பற்றி படித்தார். தனது 31 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்று குருவானார். மிகச் சிறிய சிறிய ஊர்களில் குருவாக பணியாற்றினார். குருவான 14 ஆம் வருடத்தில் ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்பணி யில் அவர் முழுதிருப்தி அடையவில்லை. இதனால் அடுத்த 5 வருடங்களிலிருந்து இறக்கும்வரை ஏழைகளுக்கு உதவிசெய்து சட்டங்களால் துன்புறுத்தப்பட்டவர்களையும், கைவிடப்பட் டவர்களையும் அன்பு செய்து, அவர்களை வாழ்வில் முன்னேற்ற மடைய வழிவகை செய்தார். வாழ்வில் சுகமே இல்லாமல், எப் போதுமே துன்பத்தில் மட்டுமே வாழ்ந்தவர்களுக்கு, எல்லா நலன் களை செய்து கொடுத்து, மறுவாழ்வை அளித்து மகிழ்ச்சியூட்டி னார். அவரது வாழ்வு மற்றவர்களுக்கு ஓர் முன்மாதிரியான வாழ்வாக இருந்தது. இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து "இவோவின் சகோதரர்கள்" என்று பெயர் கொண்ட ஓர் சபையைத் தொடங்கி, தங்களது இறுதிமூச் சுவரை மக்களுக்காக பல இன்னல்கள் அடைந்து, தொடர்ந்து பணியாற்றினார்.
செபம்:
அன்பான இறைவா! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல, யாருமில்லாமல், வாழ்க்கையே சோகம் என வாழ்ந்தவர்களுக்கு புனித இவோ வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தனது நாட்டைவிட்டு, சட்டங்களால் புறக்கணிக்கப்பட்டு, உறவை இழந்து வாழும் மக்களை நீர் கண்ணோக்கியருளும், உமது அன்பின் திருக்கரம் கொண்டு அவர்களை வழிநடத்தியருளும்.
செபம்:
அன்பான இறைவா! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல, யாருமில்லாமல், வாழ்க்கையே சோகம் என வாழ்ந்தவர்களுக்கு புனித இவோ வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தனது நாட்டைவிட்டு, சட்டங்களால் புறக்கணிக்கப்பட்டு, உறவை இழந்து வாழும் மக்களை நீர் கண்ணோக்கியருளும், உமது அன்பின் திருக்கரம் கொண்டு அவர்களை வழிநடத்தியருளும்.
No comments:
Post a Comment