Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 14 May 2016

இன்றைய புனிதர் 2016-05-14 புனித.மத்தியாஸ் அப்போஸ்தலர்

                                    

               இன்றைய புனிதர் 2016-05-14

                              புனித.மத்தியாஸ் அப்போஸ்தலர்

ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில் எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்த லராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவரா கவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் என்று கூறி னார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு மனதாக ஆண்ட வரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்க ளை அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண் பியும் என்று மன்றாடினர்.

அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என் னும் மற்றொரு பெயரும் இருந்தது. சீடர்கள் இருவரின் பெய ரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு சேர்த்துக் கொண்டனர்(தி.பணி 1:15-26) அதன்பிறகு மத்தியா, யூதேயா, எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் போது, யெருசலேம் நகரில் தலைவெட்டப்பட்டு, மறைசாட்சி யாக இறந்தார். ஜெர்மனி நாட்டின் ட்ரீயர் என்ற நகரில், பழமை வாய்ந்த ஆசீர்வாதப்பர் துறவற மடத்தில் மத்தியாவின் புனித பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளது.


செபம்:

மனிதர்களின் மனங்களை அறியும் இறைவா! திருத்தூதர் மத்தியா எவ்வாறு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டு, உம்மை ப்பற்றி சான்று பகர்ந்தாரோ, அதேபோல உம் பணிக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொரு துறவிகளும், குருக்களும் வாழ உதவி செய்தருளும்
.

No comments:

Post a Comment