Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 28 May 2016

இன்றைய புனிதர் 2016-05-29 புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் (St.Sicinnius, St.Alexander) மறைசாட்சிகள் (Martyrius)

                           

                  

                 இன்றைய புனிதர் 2016-05-29

         புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் 

                                   (St.Sicinnius, St.Alexander)
                           மறைசாட்சிகள் (Martyrius)

     இறப்பு 29 மே 397 தென் டிரோல்(Südtirol), இத்தாலி




இவர்கள் மூவரும் தென் டிரோலிலுள்ள பேராலயத்தில் மறைசா ட்சிகளானார்கள். இவர்கள் மூவருமே மிலான் பேராயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு, தமத்திருத் துவர்கள் என்றழைக்கப்பட்டார்கள். பிறகு ஆயர் விஜிலியஸ்(Vigilius) அவர்களால் மிஷினரியாக அனுப்பப்பட் டார்கள். மூன்று பேரும் இறைவனின் வார்த்தைகளை இடைவி டாமல் பரப்பினார்கள். கடவுளுக்கென்று நோனிஸ்பெர்க்(Nonsberg) என்ற ஊரில் ஓர் ஆலயம் எழுப்பினார்கள். இவர்களின் மறை பரப்பு பணிகளை பார்த்தவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டவ ர்களுள் ஏராளமானோர் மனந்திரும்பி இறைவனை நம்பினர். அவ்வாறு அவர்கள் தொடர்ந்து போதிக்கும்போது ஒருநாள், மூவ ரும் அறுவடை திருநாளை சிறப்பிக்கும்விதமாக ஆலயத்தில் கூடி ஜெபிக்கும் வேளையில், கடவுளை நம்பாதவர்களில் சிலர், அதிரடியாக ஆலயத்திற்குள் நுழைந்து மூவரையும் தாக்கி னார்கள். அதில் அலெக்சாண்டர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருடன் எரித்த அலெக்சாண்டரின் சாம்பலை கொண்டுவந்து சிசினியுஸ், மார்டீரியசின் மேல் தூவி ஏளனம் செய்து, அவர்கள் இருவரையும் கொலை செய்தார்கள். இவ்வாறு மூவருமே கொடி யவர்களின் அகோர செயல்களால், மறைசாட்சிகளாக அவ்
வாலயத்திலேயே இறந்தார்கள்.


செபம்:

அன்புத் தந்தையே இறைவா! அன்று இன்றைய புனிதர்கள் மூவ
ரும் மறைசாட்சிகளாக மரித்தார்கள். அவர்களைப்போல இன் றும் எத்தனையோ மக்கள், தங்கள் அன்றாட வாழ்வில் மறை சாட்சிகளாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனை வரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இம்மண்ணில் செய்த பாவங்களை மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment