இன்றைய புனிதர்2016-05-09
புனித.கரோலின் கெராடிங்கர் (St.Karoline Gerhardinger)சபை நிறுவுனர்
பிறப்பு 1797 ரேகன்ஸ்பூர்க் (Regensburg), ஜெர்மனி
இறப்பு 9 மே 1879 மியூனிக்(Munich) , ஜெர்மனி
புனிதர்பட்டம்: 17 நவம்பர் 1985
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்
கப்பலோட்டியின் மகளாக பிறந்த இவர் 1833 ஆம் ஆண்டுவரை தான் பிறந்த ஊரிலேயே ஆசிரியராக பணியாற்றினார். அப்போது ரேகன்ஸ்பூர்க்கில் ஆயராக இருந்த ஜார்ஜ் மைக்கேல் என்பவர் ஒரு துறவற மடம் தொடங்க திட்டமிட்டார். இத்துறவற மடம் இளைய பெண்குழந்தைகளை பராமரிப்பதற்காக இருக்க வேண்டுமென்று நினைத்தார். அப்போது ஆயர் ஜார்ஜ், கரோலின் உதவியை நாடினார். பின்னர் இருவரும் சேர்ந்து "மரியாவின் எளிய அருட்சகோதரிகள்" (Congregation of School sisters of Notredam) என்ற சபையை முதன்முதலில் நூர்ன்பர்க்கில் 1834 ஆம் ஆண்டு மார்ஸ் 22 ஆம் நாள் நிறுவினார்கள். இச்சபையை தொடர்ந்து வழிநடத்த அரசர் முதலாம் லூட்விக் பல உதவிகளை செய்தார்.
ரேகன்ஸ்பூர்கிலிருந்து இப்புதிய துறவற மடத்தில் தங்கும் அறைகள் மிக குறைவாக இருந்ததால் 1843 ஆம் ஆண்டு இத்துறவற சபையை மியூனிக்கில் இருந்த புனித கிளாரம்மாள் துறவற மடத்திற்கு மாற்றினார். மிகக் குறைந்த வருடங்களில் இத்துறவற சபை மிகவேகமாக உலகம் முழுவதும் பரவியது. பின்னர் இச்சபை 'இயேசுவின் புனித தெரசாள்" என்று பெயர் மாற்றம் பெற்றது. தான் இறக்கும் வரை கரோலின் அவர்களே இச்சபையின் தலைவியாக பொற்ப்பேற்று வழிநடத்தினார்.
இவர் மியூனிக்கில் உள்ள புனித யாக்கோபு ஆலயத்தில் தனது இறுதி நாட்களை கழித்தார். இவரது உடல் புனித யாக்கோபு ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! ஆசிரியர் பணியின் வழியாகவும், குழந்தைகளை பராமரிக்கும் பணியின் வழியாகவும் உமக்குரியவராக புனித கரோலின் வாழ்ந்தார். இவரைப் போலவே ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களின் பணி வாழ்வின் வழியாக உம்மைப் போற்றி புகழ உம் வரம் தாரும்.
No comments:
Post a Comment