
Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 4 June 2016
இன்றைய புனிதர் 2016-06-04 புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo) நேயாப்பல் நாட்டின் பாதுகாவலர்

இவர் பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார். இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாக்கப்பட்டது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார். அப்போது பணியாற்றும் போது, ஒருநாள் தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587 ஆம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார். குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளி க்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துட னும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மன்நோயாளி களையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment