Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 26 June 2016

இன்றைய புனிதர் 2016-06-27 அலெக்சாண்டிரியா நகர் புனித சிரில் (St.Cyril of Alexandria ) ஆயர், மறைவல்லுநர்( Bishop & Doctor of the Church)

                 
                இன்றைய புனிதர் 2016-06-27

அலெக்சாண்டிரியா நகர் புனித சிரில் (St.Cyril of Alexandria )

                   ஆயர், மறைவல்லுநர்( Bishop & Doctor of the Church)

                       இறப்பு 444   பிறப்பு 370

புனிதர்கள் என்று கூறினால் குறையே இல்லாதவர்கள் என்று பொருளில்லை என்பதற்கு இவர் ஓர் எடுத்து க்காட்டு. இவர் கோபக்காரர். பொறுமையில்லாதவர். சற்று விவேகம் அற்றவர். இவர் நொவேஷியன்(Novesien) என்று பெயர் கொண்ட ஆலயங்களை இழுத்து மூடி னார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் மீது பழி சுமத்தி னார். யூதர்களின் செல்வங்களை பறித்தார். அவ ர்களை அலெக்சாண்டிரியா நகரினின்று வெளியேற்றி னார். எபேசு நகரில் கூடிய பொது சங்கத்தில் அந்தி யோக்கியா நகரின் பிதாப்பிதா, அரசு ஆணைப்படி தலைமை தாங்குமுன்னரே, ஆத்திரப்பட்டு நெஸ்டோ ரியசை வெளியேற்றினார்.

428 ஆம் ஆண்டில் அந்தியோக்கியாவை சார்ந்த துறவி நெஸ்டோரியஸ் கொன்ஸ்டாண்டினோபிளின் பேரா யராக நியமனம் பெற்றார். இவர் கிறிஸ்து இயேசுவிடம் 2 ஆட்கள் உண்டு என்ற தப்பறையை போதித்து வ ந்தார். சிரில் இவரது தப்பறையை சுட்டிக் காட்டினார். நெஸ்டோரியஸ் திருந்தவில்லை. இருவரும் திருத்தந்தை முதல் செலஸ்டீனிடம்(Celestine I) இந்த விவாதத்தை முன் வைத்தனர். உரோமை ஆயர் குழு இதனை ஆராய்ந்தது. "நெஸ்டோரியஸ் கூறுவது தவறு. இதனை 10 நாட்களுக்குள் அவர் நீக்கி கொள்ளவேண்டும்" என்று பணித்தது. நெஸ்டோரியஸ் அடம் பிடித்தார்.

இதன் விளைவாக தோன்றியதுதான் 341 ல் கூடிய எபேசு பொதுச்சங்கம். இதில் சிரில் தலைமை தாங்க, 200ஆயர்கள் கலந்துகொண்டனர். சிரில் தான் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் நியமனம் பெற்றிருந்தார், நெஸ்டோரியஸ் இதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதனால் நெஸ்டோரியஸ்ஸின் தவறு சுட்டிக்காட்டப்பட்டு, அவரும் திருச்சபைக்கு புறம்பாக்கப்பட்டார். இந்த பொதுச்சங்கத்தில் தான் முதன்முறையாக மரியன்னைக்குTheotokos என்ற சொல் பயன்படுத்தப்பட்டு, "இறைவனின் தாய்" என்பதே மரியன்னைக்கு பொருத்தமான அடைமொழி. நெஸ்டோரியஸ் கூறியதுபோல் "கிறிஸ்துவின் தாய்" என்பது மரியன்னைக்கு பொருந்தாது. தவறான பொருளை கொடுப்பதனால் அது தவறு என்று அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்து இறைத்தந்தையுடன் ஒரே பொருளாயிருந்து அதே வேளையில் மனிதனோடும் ஒன்றாக கலந்த ஆளாக இருந்தால் மட்டுமே, மனிதனை மீட்க இயலும். காரணம், இறைவனும், மனிதனும் சந்திப்பது. கிறிஸ்துவின் மனிதவதாரத்தில்தான். இது மனுவுறுவெடுத்த கடவுளின் தசையாக இருந்தால் மட்டுமே (மீட்பு பெறவேண்டிய) மனிதன் அவரது மனித இயல்பின் வழியாக கிறிஸ்துவின் தெய்வீகத்தை வந்தடைய முடியும்.


செபம்:
பாவிகளையே அழைக்கவந்த எம் இறைவா! பெரியவர், சிறியவர், திறமையானவர், திறமையற்றவர் என்று பாராமல் அனைவரையும் சமமாக நீர் அன்பு செய்கின்றீர். தவறும் நேரத்தில் உடனிருந்து வழிநடத்துகின்றீர். உம் வழியை பின்பற்றி வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற நிலையை நாங்கள் அடைய எம்மை வழிநடத்தியருளும்.

No comments:

Post a Comment