Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 7 June 2016

இன்றைய புனிதர் 2016-06-08 புனித.மேடர்டாஸ் (St. Medardaus) ஆயர் பிறப்பு 475வாலெண்சியென்னா(Valencienne), ஆப்பிரிக்கா இறப்பு 560 பிரான்சு

                           

                    இன்றைய புனிதர் 2016-06-08

                          புனித.மேடர்டாஸ் (St. Medardaus) ஆயர்

பிறப்பு 475வாலெண்சியென்னா(Valencienne), ஆப்பிரிக்கா

இறப்பு 560 பிரான்சு

இவர் தன் இளம் வயதில், ஒரு நாள் புல்வெளியில் நட ந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய மழை வந்தது. அப்போது ஒரு பெரிய பருந்து வந்து இளைஞனை அப்படியே தூக்கிக்கொண்டு பிறந்தது. இளைஞன் மழையில் நனையாமல் இருக்க தன் சிற குகளை அடர்ந்து விரித்து, தன் சிறகுகளின் நிழலில் வைத்து காத்தது. இதனால் மழை இல்லாமல் இயற்கை வளம் கருகும்போது இவரின் பெயரை கூறி ஜெபித் தால் மழை வரும் என்ற நம்பிக்கை பரவியது. அதே போல் மக்கள் இவரின் பெயரால் ஜெபிக்கும்போது, பலமுறை மழையைபெற்று கொண்டனர். இதனால் ஜூன் 8 ஆம் நாள் மழைக்கான நாள் என்று குறிப்பிட்டு ள்ளனர். இறைவனின் அருளால் நிரப்பப்பட்டு இவர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். இவர் சிரி த்தாலே, இவரின் வாயில் உள்ள மொத்தப் பற்களையும் பார்க்கலாம். அவ்வாறு அவர் வாய்விட்டு சிரிப்பார்.

505 ஆம் ஆண்டு இவர் குருவாக திருநிலைப்படுத்தப்ப ட்டார். 530 ஆம் ஆண்டு பாரிசிலிருந்த நையன் (Noyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்க ப்பட்டார். இவர் ரைம்ஸ் (Reims) பேராயர் ரெமிஜியுஸ் என்பவரால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் மேடர்டாஸ் – ன்(Medardaus) பணி அம்மறைமா நிலத்தில் ஆல் போல் தழைத்து வளர்ந்தது. அப்போது அவர் தூரின் நாட்டு அரசின் ராடேகுண்டீஸ் என்பவ ரால் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது உடல் "புனித மடோனா" என்ற துறவற மடத்திற்கு சொந்த மான கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்று இக்கல் லறையின் மேல் ஒரு சிறிய கெபி கட்டப்பட்டுள்ளது.


செபம்:
அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வரும் எம் இறைவா! உமது பெயரால் நம்பிக்கையோடு செபி க்கிறவர்களுக்கு எல்லாவிதங்களிலும் உதவி செய்து வருகின்றீர். ஆம் இறைவா! உம்மால் படைக்கப்பட்ட இயற்கை வாடும்போது, உமது வல்லமையில், அவை கள் மீண்டும் புத்துயிர் பெற உதவும்.

No comments:

Post a Comment