Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 5 June 2016

இன்றைய புனிதர் 2016-06-05 புனித போனிபாஸ் மறைசாட்சி

                

             இன்றைய புனிதர் 2016-06-05

             புனித போனிபாஸ் மறைசாட்சி

பிறப்பு 673 டெவன்ஷயர், இங்கிலாந்து

இறப்பு 756

வின்பரட் (Winbarat) என்பது இவரது திருமுழுக்கு பெயர். இவர் தனது ஐந்தாம் வயதில் இருக்கும்போது துறவிகள் சிலர் இவரது குடும்பத்தை சந்திக்க வந்தனர். அப்போது வின்பரட் தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசைபட்டார். தமது 7 ஆம் வயதில் வீட்டின் அருகிலிருந்த ஒரு துறவற மடத்தில் சேர்ந்து கல்வி கற் றார். சிறந்த அறிவாளியும், புனிதருமான துறவி வின்பரட் இவ ருக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். வின்பரட் (போனிபாஸ்) தமது படிப்பை முடித்தபின் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி னார். அப்போது முதன்முதலாக இலத்தின் இலக்கணத்தை ஆங் கிலேயருக்கெனத் தயாரித்தார். பின்னர் தமது 30 ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பின் வின்பரட் (போ னிபாஸ்) ஜெர்மனி நாட்டில் மறைபரப்பு பணிக்கு இறைவன் தம் மை அழைப்பதாக உணர்ந்தார். இதனால் 716 ல் ஜெர்மனி வந் தார். பின்னர் அங்கு மறைபரப்புபணிக்கான சூழ்நிலை இல்லை என்பதை மீண்டும் தாயகம் திரும்பினார். திருத்தந்தையின் ஆசீ ரோடு போனால் பயன் உண்டு என்று நினைத்து, உரோமை செ ன்று திருத்தந்தை இவரது பெயரை "போனிபாஸ்" என்று மாற்றி னார். புதிய பெயருடன் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்(Hess) என்ற பகுதிக்கு சென்றார். அவர் சென்ற நேரத்தில் கொடிய அரசன் ராட்போர்ட் என்பவன் இறந்தான். அவனை அடுத்து வந்த அர சன் இவரிடம் அதிக அன்பு காட்டினார். இதனால் 3 ஆண்டுகள் பிரிஸ்லாந்தில் கடுமையாக உழைத்து மறைபரப்பு பணியை ஆற்றினார். இவரின் புனிதமான பணியை பார்த்த குருக்கள் இவரை ஆயராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். ஆனால் போனிபாஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இவர் 722 ல் உரோமுக்கு செல்ல இவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அங்கே அவர் ஆயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவருக்கு மறை பரப்பு பணியை ஜெர்மனி முழுவதும் பரப்ப பொறுப்பு வழங்கப் பட்டது. திருத்தந்தை அரசர் சார்லஸ் மார்ட்டலுக்கு(Charles Martel) கொடுத்தனுப்பிய பரிந்துரைக்கடிதம் இதற்கு மிக உதவியாக இருந்தது. இதன் அடிப்படையில் ஜெர்மனி முழுவதும் இருந்த மூட நம்பிக்கைகளையும், தவறான கொள்கைகளையும் கூண் டோடு அழிக்க அவருக்கு துணிச்சல் ஏற்பட்டது. ஒருமுறை மக் கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி, அவர்கள் தெய்வமாக வழி பட்டு வந்த ஒரு வளர்ந்த மரத்தின் முன் நிற்க வைத்து, அம்மரத் தை ஒரு கோடாரி வைத்து வெட்டினார். அம்மரம் 4துண்டுகளாக பிரிந்து விழுந்தது. இதனால் கடவுளின் சினம் பேராபத்துடன் வர ப்போகிறது என்று அம்மக்கள் கதிகலங்கினர். எந்த வித ஆபத் தும் இல்லாமற் போகவே, அவர்கள் நம்பிய தெய்வங்கள் பயன ற்றவை என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பின் அவர்கள் கடவுள் ஒ ருவரே என்பதை உணர்ந்தனர். அம்மக்களை மனமாற்றியப் பி ன் அவர் அங்கிருந்து துரிஞ்சியா பகுதிக்கு மறைபரப்பு பணிக் கு சென்றார். அங்கிருந்த மக்கள் குருக்களுக்கு பல தொல்லை களை கொடுத்தனர். இதனால் இங்கிலாந்திலிருந்து ஏராளமான துறவிகளையும், கன்னியர்களையும் அழைத்து வந்தார். 731 ல் திருத்தந்தை 2 ஆம் கிரகோரி இறந்தார். அதன்பின் வந்த திருத் தந்தை 3ஆம் கிரகோரி, போனிபாசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி, மறைபரப்பு பணியை திறம்பட தொட ஊக்கமூட்டி னார்.  741 ல் மன்னன் சார்லஸ் மார்ட்டலுக்குப்பின், அவரின் மக ன்கள் பெப்பின், கார்ல்மென் ஆட்சிக்கு வந்தனர். இவர்களும் போனிபாசுக்கு பல சலுகைகளை வழங்கினர். அப்போது இரு முறை ஆயர் பேரவைகளை கூட்டினார். அதன்வழியாக திருச்ச பையில் இருந்த பலதரப்பட்ட ஊழல்களை களைந்தார். திருச் சபையில் புதிய இரத்தத்தைப் பாய்ச்சினார். மைன்ஸ்-ஐ (Mainz) தலைநகராகக் கொண்டு, அவர் கர்தினால்களின் அதிகாரங்க ளுடன் பணியில் ஈடுபட்டார். போனிபாசுக்கு மறைபரப்பு பணி க்கு மிக உதவியாய் இருந்த மன்னன் கார்லமென் காலமானார். இதனால் மனமுடைந்த போனிபாஸ் துறவுமடம் போக விரும்பி, அங்கு தனிமையை நாடினார். அப்போது அரசன் பெப்பின் இரு நாடுகளையும் ஒன்றிணைத்தான்.

இப்பணி போனிபாசுக்கு தன் பணியை எளிதாக ஆற்ற மிகவும் உதவியாயிருந்தது. ஆயர் அப்போது வயது முதிர்ந்தவராக இரு ந்தார். இதனால் எல்லாவிதங்களிலும் தனக்கு உதவியாக இருந்த "லல்"(Lall) என்பவரிடம் தன் பொறுப்புகள் அனைத்தையும் ஒப் படைத்தார். பின்னர் தன் கையால் முதன்முதலாக திருமுழுக்கு பெற்ற பிரீஸ்லாந்து மக்களிடையே சென்று மறைபரப்பு பணி யை தொடர்ந்தார். பிரிஸ்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருள் மங்கிக்கிடந்தது. அம்மக்கள் ஆயரில்லா ஆடுகளை போல இரு ந்தனர். அப்போது தமது 73 ஆம் வயதில் அம்மக்களை ஒன்றாக கூட்டி கிறிஸ்து உயிர்ப்பு விழாவிற்கு அடுத்த ஞாயிறன்று ஞான ஸ்நானம், உறுதிபூசுதல் கொடுக்க "டொக்கு" என்ற இடத்தில் ஏற்பாடு செய்தார். புதிய கிறிஸ்துவர்களின் வருகைக்காக தம் குடிசையில் காத்துக்கொண்டிருக்கும்போது, சில முரடர்களால் தாக்கப்பட்டார். ஆயரின் உடன் பணியாளர்கள் அவரை காப் பாற்ற முயன்றனர். ஆனால் " கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடு ப்போம்" என்று ஆயர் போனிபாஸ் கூறும் போதே, முதல் அடி அவர் மேல் விழ, ஆயரின் உயிர் பிரிந்தது. அவரோடு இணைத்து உடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். இன்று இத்தனை நூற்றாண்டுகளாக ஜெர்மனியும், பிரான்சும் ஆழமான விசு வாசமுள்ள நாடுகளாக காட்சியளிக்கின்றன என்றால் அதற்கு அடித்தளமிட்டவர், இரத்தம் சிந்தி உரமிட்டவர். புனித போனி பாஸ் என்பதை எவராலும் மறக்க இயலாது.


செபம்:

விசுவாசத்தின் பரம்பொருளே! இரத்தம் சிந்தி, உயிரை விட்டு, உமது மறைபரப்பு பணியை ஆற்றியுள்ளார் புனித போனிபாஸ். இன்றைய மறைபரப்பு பணியாளர்கள் தைரியத்துடன், உம்மை பறைசாற்றி, உமது சாட்சிகளாய் வாழ இறைவா உம் வரம் தாரும்.

No comments:

Post a Comment