
Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 24 June 2016
இன்றைய புனிதர் 2016-06-24 திருமுழுக்கு யோவானின் பிறப்பு (The birthday of John the Baptist)

இவரது பிறப்பை லூக்கா நற்செய்தியாளர் முன்னறி வித்தார். யோவானின் தாய் எலிசபெத் கருவுற இயலா தவர். இவரும் செக்கரியாவும் வயது முதிர்ந்தவர்கள். வானதூதர் யோவானின் பிறப்பை செக்கரியாவிடம் அறிவித்தார்கள். ஆனால் அவர் ஆண்டவரின் செயலை நம்பவில்லை. அது நிறைவேறும் வரை அவர் பேச இய லாதவராக தண்டனை பெற்றார். கருவுற்றிருந்த எலிச பெத்தை அவரின் உறவினரும் தெய்வ வல்லமையால் கருவுற்றருந்தவருமான மரியா சந்தித்தார். மலை நாடு களை கடந்து முதன்முறையாக மறைபரப்பு பணியாள ராக எலிசபெத்திடம் நற்செய்தி அறிவித்தார். எலிச பெத் மரியாவின் வாழ்த்துரையை கேட்ட நேரத்தில், அவள் வயிற்றினுள் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளிற்று. (லூக். 1:42-44). மறைவல்லுநர்கள் இந்நிகழ்ச்சி யின் மூலம் மீட்பர் இயேசுவின் வருகையினால் தாயின் வயிற்றிலிருந்த யோவான் பாவ மீட்பு பெற்று புனிதரா க்கப்பட்டார் என்பார்கள். திருமுழுக்கு யோவான் பிற ந்தபின் இறைவனால் குறிக்கப்பட்ட நாட்களில் பாலை நிலத்தை நாடி மீட்பரின் வழியை ஆயத்தம் செய்யவும், பாவ மன்னிப்பு அடைய மனம் மாறி திருமுழுக்கு பெறவும், மக்களை ஆயத்தம் செய்கிறார். (மாற்கு 1:2-43)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment