Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 5 June 2016

இன்றைய புனிதர் 2016-06-06 புனித நார்பெர்ட் (St. Norbert) ஆயர், செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் பாதுகாவலர்

                     

              இன்றைய புனிதர் 2016-06-06

                          புனித நார்பெர்ட் (St. Norbert)ஆயர், செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் பாதுகாவலர்

பிறப்பு  1082  க்சாண்டன் (Xanten)
இறப்பு  1134 மக்டேபூர்க்(Magdeburg)

புனிதர்பட்டம்: 1582, 13ஆம் கிரகோரி

இவர் அரச குலத்தில் தோன்றியவர். ஆழமான அறிவுத்திறமை உடையவர். ஆழ்ந்த தெய்வபக்தியின் காரணமாக இளமையி லேயே குருத்துவத்தை விரும்பினார். ஆனால் இவர் இளைஞரா னதும் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தா ரோடு சேர்ந்து உலக இன்பங்களை அனுபவித்ததால், குருவாகும் ஆசை போய்விட்டது. ஒருமுறை இவர் குதிரையின் மேல் ஏறி வேறு ஊருக்கு செல்லும்போது, எதிர்பாராத விதமாக புயல்காற் றும், இடிமின்னலும் உண்டானது. இவருக்கு முன் இடிவிழவே, குதிரை நிலை தடுமாறி, அவரை கீழே தள்ளியது. அப்போது அவர் ஆண்டவரை நோக்கி, "நான் என்ன செய்ய வேண்டுமெ ன்று விரும்புகிறீர்?" என்று கேட்டு கதறி அழுதார். "தீமையை நீக்கு; நன்மை செய்ய புறப்படு; அமைதியைத் தேடி கண்டுபிடி" என்று உடனே ஓர் குரல் கேட்டது. அதன்பின் அவர், புனித பவுலைப் போல மனம் மாறினார். தன் வாழ்நாட்களை தேவ ஊழியத்தில் செலவழிக்க உறுதி பூண்டார். முறையான பயிற்சி பெற்று குருப்பட்டம் பெற்றார். தன் செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். கடுந்தவம் புரிந்து, உபவாசம் இருந்து புனிதராக வாழ்ந்தார். இறை தூண்டுதலால் ஓர் துறவற சபை யைத் தொடங்கினார். இவர் ஆண்ட்வெர்ப் (Andwerf) என்ற நகரின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். ஏனெனில் தவறான பாதையில் வாழ்ந்த அந்நகர் மக்களை அவர் பல வழிகளில் நல் வழிப்படுத்தினார். அதன்பின் அவர் மாக்டபர்க் (Makdeberg) என்ற நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே இருந்த பல ஊழல்களை நீக்கினார்.

பின்னர் ஜெர்மன் நாட்டு அரசர் லோத்தேர் (Lothar) என்பவருக்கு ஆலோசகராக பணியாற்றினார். மாக்டபர்க் நகரின் பேராயராக நியமிக்கப்பட்டபின், அந்நகருக்கு முதன்முறையாக சென்ற போது, தாழ்ச்சியின் பொருட்டு மிதியடியின்றிப் பேராலயத்திற் குள் நுழைந்தார். பின்னர் பேராயரின் இல்லத்திற்குள் நுழைந்த போது, வாயிற்காப்போன் இவர் யாரென்று தெரியாமல், உள்ளே நுழைய அனுமதி தர மறுத்தார். ஏனெனில் அவர் ஓர் ஏழை யைப்போல தோற்றமளித்தார். ஆயர் வாயிற் காப்போரை நோக் கி, உண்மையில் நீதான் என்னை புரிந்துக்கொண்டாய். எனது நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான் என்னை பேராயர் பதவிக்கு உயர்த்தி, இந்த இல்லத்திற்கு வரக்கட்டாயப்படுத்து கிறார்கள். நானோ தகுதியற்றவன், வறியவன் என்றார். பின்னர் வாயிற்காப்போன் தன் தவறை உணர்ந்து புனிதரிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆயர் நார்பெர்ட் ஏற்படுத்திய சபை "நார்பெர்டைன்" என்று அழைக்கப்படுகின்றது. இவர் திவ்விய நற்கருணை மீது தனி பெரும் பக்தி கொண்டிருந்தார். இப்பக்தியை இத்துறவற சபை யை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார். இவர் இறந்த மறு நூற்றாண்டில் இவரது சபை 500 ஆக பெருகியது. பின்னர் பெண்களுக்கென்றும் ஓர் சபை நிறுவப்பட்டது. இதில் 3ஆம் சபையினரும் உள்ளனர்.


செபம்:

அன்பே உருவான இறைவா! ஆடம்பர வாழ்வில் தன் நாட்களை கழித்து, உம்மை அறியாமல் இருக்கும் ஒவ்வொரு மனிதரையும் நீர் உமது கருணை கண்கொண்டு பாரும். புனித நார்பெர்டைப்போல மனந்திரும்பி, உமக்கு சான்று புரியும் வாழ்வு வாழ, நீர் உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment