Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 30 June 2016

இன்றைய புனிதர் 2016-07-01 புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon) திருத்தொண்டர்

                                  

                     இன்றைய புனிதர்2016-07-01

புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon)

                                              திருத்தொண்டர்

பிறப்பு 1813 மால்டா

இறப்பு01 ஜூலை 1875            

 புனிதர்பட்டம்: 1905, திருத்தந்தை 10ஆம் பயஸ்

இவர் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் பக்தியா னவராக வளர்ந்தார். தினமும் ஜெபமாலை செபிப்ப தில் வல்லவராக திகழ்ந்தார். இவர் தனது உயர் கல்வி யை முடித்தபின் குருமடத்திற்கு சென்றார். ஆனால் குருவாவதற்கான வயதையும், தகுதியும் இவரிடம் இல்லாமல் இருந்தது. இதனால் தன் வாழ்நாள் முழுவ தும் இவர் ஓர் ஆன்ம வழிகாட்டியாக பணிபுரிந்தார். இவர் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுக்கொடுப்பதிலும், அடிக்கடி மால்டா தீவிற்கு சென்று, அங்கிருந்து ஆங்கிலேயே படைவீரர்க ளுக்கு திருவருட்சாதனங்களைப் பற்றி கற்றுக்கொடு ப்பதிலும் தன் நாட்களை கழித்தார். போர் வீரர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, விசுவாச த்தில் வளர வழிகாட்டினார். இவர்களின் உதவியினா லும், 600 படைவீரர்களைக்கொண்டு, வாலெட்டாவில் ஓர் சபையை தொடங்கினார்.

காலைமுதல் மாலைவரை உழைத்து முடித்துபின், நாளுக்கு நன்றி கூறியும், அந்நாளில் செய்த பாவத்தி ற்கு பாவமன்னிப்பும் வேண்டி ஒவ்வொரு நாள் மாலை யும் வழிபாடு நடத்தப்பட்டது. உலகின் பாவங்களு க்காக அனைவரும் சேர்ந்து செபித்துக்கொண்டிரு க்கும்போது, தன் கைகளைவிரித்து, கண்களை மேலே உயர்த்தியவாறு, தன் ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.


செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குருத்துவ வாழ்வில் தன்னை அர்ப்பணிக்க விரும்பி, தகுதியின்மையால் குருவாகாமல், வாழ்நாள் முழுவதும் திருத்தொண்ட ரைப் போலவே வாழ்ந்த இக்னேசியசை நினைத்து நன்றி கூறுகின்றோம். அவரைப்போல வாழும் இளைஞர்களை நீர் ஆசீர்வதியும். இவர்களின் வழியாக உம் மக்களுக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுக்க, நீர் வரம் தர வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம்

No comments:

Post a Comment