Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 28 June 2016

ன்றைய புனிதர் 2016-06-28 28 புனித இரேனியுஸ் (St. Irenaeus) ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி

                           

                இன்றைய புனிதர் 2016-06-28

                          28 புனித இரேனியுஸ் (St. Irenaeus)

                            ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி

இறப்பு 28 ஜூன் 200                  பிறப்பு 130

இரேனியுஸ் என்ற சொல்லுக்கு "அமைதி விரும்பி" எ ன்பது பொருள். இவர் தம் பெயருக்கேற்ப அமைதியின் மூலம் பல அருஞ்செயல்களை நிலைநாட்டி திருச்ச பைக்கு பேரும் புகழும் தேடித்தந்தார். இவர் 2 ஆம் நூற்றாண்டின் சிறப்பான மறைவல்லுநர். புனித போலிக்கார்ப்பின் சீடர் லயன்ஸ்(Lions) நகர்புறத்துக் கிறிஸ்தவர்களின் ஆயராயிருந்தார். இவர்களின் பொருட்டு ஒருமுறை உரோமை சென்றார். பிறகு ஒரு முறை சிறிய ஆசியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக பரிந்துரைக்கவும் திருத்தந்தையை சந்திக்க சென்றார்.

இவர் ஆற்றிய திறமைமிக்க பெரும்பணி நாஸ்டிக் (Gnostic) என்று சொல்லப்பட்ட தப்பறையை தம் பெயரு க்கே உரிய அமைதியான முறையில் எடுத்துரைத்த தாகும். தொடக்கத்தில் உருவமற்ற பொருள் ஒன்று இருந்தது. இதிலிருந்தே தெய்வ தன்மையுடனிருந்த ஒருவரின் குறுக்கீட்டால் இவ்வுலகம் தோன்றியது என்பது இந்த தப்பறையின் சாரமாகும். 177 ஆம் ஆண்டு கொடுங்கோல் மன்னனும் மெய்மறை பகைவனுமான மார்க் அவுரேலியஸ்(Aurelias) ஆட்சியில் பயங்கரமான வேதகலாபனை தோன்றியது. இச்சூழலில்தான், சிறை யில் அகப்பட்ட குருக்கள் சிலர், சிறையில் அகப்படாத இவரை உரோமை நகருக்கு அனுப்பினார்கள். பிறகு இருவரும் பாப்பரசரிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறினர். இவர் உரோமையிலிருந்து வருவதற்குள் ஆயரான புனித போட்டினுசும்,(Botinus) அவரோடு குரு க்கள் பலரும் வேதத்திற்காக தங்கள் இரத்தத்தை சிந்தி சாட்சி பகர்ந்து, இவ்வுலகை விட்டு பிரிந்தனர். இச்சூ ழலில் இவர் திரும்பி வரவே ஆயராக நியமிக்கப்ப ட்டார். 24 ஆண்டுகள் ஆயராக பணியாற்றி பலரை மனந்திருப்பினார். பல மெய்மறை நூல்களை எழுதினார். இதன் வழியாகவும் பலரை இறைவன் பால் ஈர்த்தார்.


செபம்:
வழிகாட்டும் தெய்வமே எம் இறைவா! திருச்சபையையும், கிறிஸ்துவத்தையும் இவ்வுலகில் நிலைநாட்ட புனித இரேனியுஸ் அரும்பாடுபட்டுள்ளார். நீர் அவரோடு இருந்து, அவரை வழிநடத்தியுள்ளீர். இன்றைய எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்த ந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையி னரையும் நீர் ஆசீர்வதியும். உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த தேவையான அருள் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment