Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 14 July 2016

இன்றைய புனிதர் 2016-07-15 புனித பொனவந்தூர் (St. Bonaventure) ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)

     
  இன்றைய புனிதர் 2016-07-15
                  புனித பொனவந்தூர் (St. Bonaventure)
         ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)

பிறப்பு1218 தஸ்கனி ( Tuscany), இத்தாலி

இறப்பு 1274லயனஸ்(Lyons), பிரான்ஸ்

இவரின் திருமுழுக்கு பெயர் ஜான். இவர் 4 வயது இரு க்கும்போது கொடிய நோயால் தாக்கப்பட்டார். புனித அசிசியாரிடம் வேண்டிய பிறகு அவரின் நோய் அவ ரைவிட்டு விலகியது. இதனால் இவர் தன் இளம் வயதி லிருந்தே அசிசியாரிடம் அளவு கடந்த பக்திக்கொண்டி ருந்தார். தன் படிப்பை முடித்த பின், தன்னை புனித அசிசி சபையில் அர்ப்பணிக்க விரும்பினார். துறவற சபையில் தன்னை அர்ப்பணித்தபின், இவரின் 36 ஆம் வயதில், சபைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சபையை நன்கு வளர்த்தெடுத்தார். இவர் அச்சபைக்கு ஆற்றியத்தொண்டால், இவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார்.

இவர்தான் மூவேளை செபத்தை முதன்முதலில் தன் சபையில் அறிமுகப்படுத்தினார். இன்று இச்செபம் திரு ச்சபையிலும் வேரூன்றியுள்ளது. இவர் பலரின் கட்டா யத்தினால் அல்பேனிய நாட்டின் ஆயராகவும், கர்தி னாலாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 2 ஆம் லியோன் பொதுச் சங்கத்தில், சில கருத்துக்களை நுணுக்கமாய் ஆராய தயாரித்துக்கொடுத்தார். அப்போதுதான் கிழ க்கு, மேற்கத்திய திருச்சபைகளையும் ஒன்று சே ர்த்தார். லியோன் பொதுசங்கம் நடக்கும்போது, இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். திருத்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் இறையன்பு, செபம், காட்சி தியானம் இவைகளில் தன் நேரங்களை செலவிட்டார்.

இவர் ஒருநாள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிரு ந்தார். அப்போதுதான் திருத்தந்தை 10 ஆம் கிரகோரி யார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதை அறி விக்க, கர்தினாலின் தொப்பியையும் எடுத்து சென்று, செய்தியை அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் தன் வேலையை முடித்து வரும்வரை அத்தொப்பியை அருகிலிருக்கும் மரக்கிளையில் தொங்கவிட சொ ன்னார். இதிலிருந்து அவரின் தாழ்ச்சி எத்தமையது என்பது வெளிப்பட்டது.


செபம்:
என்றும் வாழும் கடவுளே! அசிசியாரை போலவே தன் வாழ்வை வாழ்ந்த புனித பொனவெந்தூரை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஏழை மக்க ளின்மேல், அளவில்லா அன்பு கொண்டு நோயால் தா க்கப்பட்டவர்களுக்காக தன்னையே அர்ப்பணம் செய்து நோய்களை அன்பின் வழியாக குணமாக்கிய இப்புனிதரை போல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் அன்புகாட்டி வழிநடத்த தேவையான வரம் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 13 July 2016

இன்றைய புனிதர்2016-07-14 புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis) குரு

           
    இன்றைய புனிதர்
2016-07-14

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis)

                                           குரு

பிறப்பு1550ஷீட்டி(Chieti), அப்ருட்சி(Abruzzi)

இறப்பு 1614 உரோம்

பாதுகாவல்: மருத்துவர்களின் பாதுகாவலர்

இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் தாயை இழ ந்தார். தந்தை இவரைவிட்டு அகன்று போனார். இத னால் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். 17 வயதில் துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு , ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவம னையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அப்போது கப்புச்சின் சபை குரு ஆ ற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது.

அதன்பின் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று விரு ப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்த உடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்ப த்தை தெரிவித்தார். அங்கு அவரின் விருப்பம் நிறைவே ற்றப்பட்டாலும் புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவ பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, தனது 34 ஆம் வயதில் குருவானார். அதன்பிறகு ஒரு சபையை நிறு வினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயா ளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைக ளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இ ச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நோயுற்றோர் மீது தனியன்பு கொண்டு கமில்லஸ் பணிபுரிந்தார். அவருடைய பரிந்துரையால் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மை அன்பு செய்து, எங்கள் இறப்பு வேளையில் நம்பிக்கையோடு உம் திருமுன் வந்து சேர அருள்புரியும்.

இன்றைய புனிதர் 2016-07-13 புனித இரண்டாம் ஹென்றி(St.Henry) அரசர்


         
இன்றைய புனிதர்2016-07-13

புனித இரண்டாம் ஹென்றி(St.Henry)

                                                  அரசர்

பிறப்பு973பவேரியா (Bavaria), ஜெர்மனி

இறப்பு1024பாம்பர்க்(Bamberg), ஜெர்மனி

புனிதர்பட்டம்: 1146, திருத்தந்தை 3 ஆம் யூஜின்

இவர் பவேரியா நாட்டு அரசராக 995 ல் உரோம் பேரர சின் மன்னராக 1002 ல் உயர்வுப்பெற்றார். திருச்சபை யின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் போர்களில் ஈடுபடத் தயங்காதவர். இவர் துறவற மடத் தலைவ ர்களையும், ஆயர்களையும் நியமனம் செய்யும் அதிகா ரத்தை பெற்றிருந்தார். இவரின் துணைவியாரும் புனித வாழ்க்கை வாழ்ந்து புனிதர் பட்டம் பெற்றார். உரோம் நகரில் ஏற்பட்ட கலகத்தை நசுக்க திருத்தந்தை 8ஆம் ஆசீர்வதிப்பருக்கு மன்னர் உறுதுணையாயி ருந்தார். இவர் மற்ற நாடுகளில் அமைதி நிலவ அரு ம்பாடுபட்டார்.

இவர் தன் நாட்டு மக்களுக்கு பின்வரும் இறைவசன த்தை அடிக்கடி கூறிவந்தார். "அழிந்து போகும் செல்வ த்தை துறந்துவிட்டு என்றும் அழியா, நிலையான செல்வத்தை வான்வீட்டில் சேர்த்து இடத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்" என்பதை மறக்கக்கூ டாது என்பார். இவ்வுலகில் நாம் பெறும் புகழ் புகை யாக மறைந்துவிடும். எனவே நிலையான பேரின்ப த்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தன் நாட்டில் கடவுளின் இரக்கத்தைப் பெற, பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார். அவற்றின் பராமரிப்பிற்காக செல்வங்களை வாரி வழங்கினார். பாக்பெர்கில்லிருந்து பணத்தை செலவிட்டார். இறுதி வரை இறைப்பணியாற்றி அவ்வாலய பணியி ன்போதே உயிர் துறந்தார்.


செபம்:
எல்லாம் வல்லவரே! அரசரான போதும் கூட, இவ்வுலக காரியங்களின் மேல் அக்கறை கொள்ளாமல், உம் மேல் அக்கறைகொண்டு வாழ்ந்தார் அரசன் ஹென்றி. தன் நாட்டு மக்களையும், விண்ணகத்தில் செல்வம் சேர்க்க தூண்டினார். இவரால் பவேரியா முழுவதும் இறைப க்தி பரவிற்று. இப்பக்தியானது அம்மக்களிடையே எப்போதும் நிலைக்க, அவர்களை வழிநடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 11 July 2016

இன்றைய புனிதர் 2016-07-12 புனித யோவான் குவால்பெர்டூஸ்(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்


                 
     இன்றைய புனிதர் 2016-07-12

புனித யோவான் குவால்பெர்டூஸ்

(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்

பிறப்பு995புளோரன்ஸ், Florence

இறப்பு1073, 12 ஜூன்டோஸ்கானா, Toscana

புனிதர் பட்டம்: 1193, திருத்தந்தை 3 ஆம் செலஸ்டின், Pope Cholestin III
இவர் ஓர் உயர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலி ருந்தே ஆன்மீக காரியங்களில் அக்கறை காட்டி வள ர்க்கப்பட்டார். தான் ஓர் துறவியாக வேண்டுமென்று இளம் வயதிலிருந்தே ஆசைப்பட்டார். தன் உறவினர் ஒருவரின் துணைகொண்டு, ஆன்மீக வாழ்வில் முன்னேறினார். அவரின் உதவியினால் துறவற சபை க்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் உதவி செய்தவரை குடும்பத்தில் உள்ளவர்கள் கொன்று போட்டார்கள். அவரோடு சேர்த்து யோவானின் உடன்பிறந்த சகோதர ரையும் கொன்றார்கள். ஆனால் யோவான் கொலை க்காரர் யார் என்று கண்டுபிடித்தார். கொலை செய்த வர் யோவானிற்கு பயந்தார். ஆனால் அவரோ கொலை காரரை மன்னித்து, பாவமன்னிப்பு பெறச்செய்து, தின மும் திருப்பலியில் பங்குபெறுமாறு மனமாற்றினார். அதன்பிறகுதான் துறவியாகும் முடிவை கைவிடாமல் புனித பெனடிக்ட் துறவற இல்லம் சென்று 1013 ஆம் ஆண்டில் துறவியானார்.

யோவான் பல ஆண்டுகள் துறவறமடத்தில் வாழ்ந்த பிறகு 1080 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி, புதி தாக ஒரு துறவற சபையை ஆரம்பித்தார். புனித பெனடிக்ட் துறவற சபை ஒழுங்குகளையே, புதிய சபை யிலும் கைபிடித்தார். இப்புதிய சபைக்கு “Vallombrosanerorden” என்று பெயர் சூட்டினார். பெனடிக்ட் துறவற சபையிலிருந்து பிரிந்தாலும் கூட அந்த கடின மான வாழ்வை தானும் வாழ்ந்து, தன் சபையில் இருந்த வர்களையும் வாழவைத்தார். துறவற இல்லத்தைவிட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என்ற சட்டத்தையும், இவ்வுலக வாழ்வை துறவற வாழ்வில் துறவிகள் ஒரு போதும் வாழக்கூடாது என்ற ஒழுங்கையும் கடினமாக கடைபிடிக்கக்கூறினார். பல துறவற இல்லங்களை தொடங்கிய யோவான் அவ்வப்போது இல்லங்களை தவறாமல் சந்தித்து, உற்சாகத்துடன் இறைவனின் பணியில் பங்குபெற துறவிகளை ஊக்கமூட்டினார். அவ்வாறு பார்வையிட டோஸ்கானாவில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக இறந்தார். இவ ரின் உடல் டோஸ்கானாவிலுள்ள இவரால் தொடங்க ப்பட்ட துறவற இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! ஏழுமுறை அல்ல மாறாக ஏழு எழுபதுமுறை மன்னிக்க வேண்டுபவரே! கொலை க்காரனை மன்னித்து, அன்பு செய்து உம்பால் ஈர்த்த புனித யோவானைப்போல, நாங்களும் பிறரை மன தார மன்னித்து, அன்பு செய்து உம் மகிழ்ச்சியில் நிலை யான பங்கு வகிக்க, உம் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Saturday, 9 July 2016

இன்றைய புனிதர் 2016-07-10 டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden

                      

இன்றைய புனிதர் 2016-07-10

டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden

இறப்பு 29 ஜூலை 1030

இவர் 1015 ஆம் ஆண்டில் தனது 20 ஆம் வயதில் நார்வே நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1014 ஆம் ஆண்டில் தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ ரானார். இவர் அரசரான 15 ஆண்டுகள் கழித்து, மிகவும் செல்வம் இருந்ததால் ஏழைகளிடம் பகிர்ந்து கொடு த்தார். ஏராளமான ஏழை மக்களுக்கு வழிகாட்டினார். தன் முழு வாழ்வையும் ஏழை மக்களுக்காகவே அர்ப்ப ணித்தார். மிஷினரி வேலை செய்து, கிறிஸ்துவை பர ப்ப, பல நாடுகளிலிருந்து கிறிஸ்துவர்களையும், துற வற குழுமத்தினரையும் தன் நாட்டிற்கு அழைத்தார். பல ஆலயங்களை கட்டினார். பலரை மனந்திருப்பி ஞானஸ்நானம் பெற சொன்னார். இதனால் எதிர் திரு ச்சபை மக்களால் 1028 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இவரின் உரிமைகள் அனை த்தும் பறிக்கப்பட்டது. பின்னர் அணுவணுவாக துன்பு றுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரின் கல்ல றை நார்வே நாட்டில் உள்ளது. இவரின் பெயரால் அந்நா ட்டில் பெரிய பெரிய பேராலயங்கள் கட்டப்பட்டுள்ளது.

எரிக் (Erich), ஸ்வீடன்

இறப்பு: 18 மே 1160, உப்சலா(Uppsala), ஸ்வீடன்
பாதுகாவல்: ஸ்வீடன் நாட்டின் பாதுகாவலர்
இவரும் மறைசாட்சியாளர் குன்ட் போலவே, ஆலய த்தில் திருப்பலி நேரத்தில் கொலை செய்யப்பட்டார். இவரும் தன் நாட்டில் மறைபரப்பு பணியை செய்து, மக்களை ஆன்மீகத்தில் வளர்த்தெடுத்தார். 1150 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டின் அரசராக இருந்தார். மறை ப்பணி செய்ததின் காரணமாக இவரும் கொலை செ ய்யப்பட்டார். ஸ்வீடன் நாட்டில் உப்சலா என்ற ஊரில் உள்ள பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது.

குன்ட் (Kund), டென்மார்க்

இறப்பு: 10 ஜூலை 1086
புனிதர்பட்டம்: 1100, திருத்தந்தை 2ஆம் பாஸ்கலீஸ் (Pope Paschalis II) 1080 ஆம் ஆண்டு இவர் டென்மார்க் நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகுந்த விசு வாசம் கொண்டவர். கிறிஸ்துவை தன் நாடு முழுவதும் பரப்ப பெரும்பாடுபட்டவர். பல ஆலயங்களையும், துறவு மடங்களையும், பள்ளிகளையும் நாடு முழுவதும் கட்டினார். இவர் கிறிஸ்துவை பரப்பிய காரணத்தி ற்காகவே, இவரின் எதிரிகளால் திருப்பலியில் இருக்கும்போதே குத்திக் கொலை செய்யப்பட்டார்.



செபம்:
நிலை வாழ்வளிப்பவரே எம் இறைவா! உம்மீது கொண்ட தணியாத தாகத்தால் தங்கள் நாடுகளில் மறைபரப்பு பணியை செய்து கொலை செய்யப்பட்டா ர்கள். இன்றைய புனிதர்கள். இருப்பினும் இவர்களின் இறப்பினால் அந்நாடுகளில் கிறிஸ்தவம் பரவியது. உம் பெயரை அந்நாட்டு மக்களிடையே நிலைநாட்டி னார்கள். இன்று அந்நாடுகளில் மறைபரப்பு பணியை செய்யும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, பணியில் நிறைவு பெற உடனிருந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2016-07-09 புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong) மறைசாட்சி


         இன்றைய புனிதர்2016-07-09
            


புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

                         மறைசாட்சி

முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்

சீன நாட்டில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்நா ட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டி ருக்கிறது.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 618-907 வரை டாங் வம்சத்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செ ய்தி பரப்ப சென்ற ஜியோனித மோன்றோ கோர் வீனோ ( Gionitha Mondro Gor vino) போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக புரிந்து வைத்திரு ந்தார்கள். இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர் தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர் தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

பின்னர் 16 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வுசெய்யப்பட்டு சீனா சென்றடைந்த னர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சேசு சபைக் குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்த னர். அதோடு கணிதம், விஞ்ஞானம் போன்ற கலை களிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்க ளின் மனதில் இடம்பிடித்து அவர்களுக்கேற்ப நற்செ ய்தி பணியை பரப்பினர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திரு முழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவ ர்கள் மெய்மறை கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.

அப்போது சீன நாட்டு மன்னன் 1692 ல் நாடு தழுவிய மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூ லம் விரும்புபவர்கள் மெய்மறையில் சேரலாம். கிறி ஸ்துவை பின்பற்றலாம் என்றும் கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நா னம் பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவ ரின் பிரதிநிதி டூர்னோனின்(Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி" என்பதை அறிமுகப்படு த்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து கிறிஸ்து வர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தா ர்கள். 19 ஆம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.

1648 ல் "மஞ்ச் டார்டர்"(Manj Dardar) இனத்தை சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை கூறி செபமாலை செபிக்கும்போb து, அவரின் உடனிருந்த தோழர்களையும் கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.

மீண்டும் 1715-1747 வரை நற்செய்தி பரப்பிய ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும் கொன்றனர். 1796-1821 முடிய ஆட்சி செய்த மன்னன் கியா கின்(Kiya Kin)கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 1862 ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் முத்திபேறுபட்டம் பெற்றவர்கள்


செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மை இவ்வுலகில் பரப்புவதற்காக பாடுபட்ட பலர், உம் பெயரால் உயிரழந்தனர். இன்றும் எம் நாட்டில் மறைபணியாளர்களுக்கு பல கொடுமைகள் நேருகின்றது. உம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை நீர் கருணை கூர்ந்து காத்தருளும். அவர்கள் மனந்திரும்பி உம்மை ஏற்று, வாழ்வில் இன்பம் கண்டு, மற்றவர்களையும் வாழ வைக்க உம் அருள் தாரும்

Friday, 8 July 2016

இன்றைய புனிதர் 2016-07-09 புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

            

இன்றைய புனிதர்

2016-07-09

புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

      

                      
முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்
சீன நாட்டில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்நா ட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டிருக்கி றது.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கிறி ஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 618-907 வரை டாங் வம்ச த்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செய்தி பரப்ப சென்ற ஜியோனித மோன்றோ கோர் வீனோ ( Gionitha Mondro Gor vino) போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக புரிந்து வைத்திருந்தார்கள். இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர் தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர் தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

பின்னர் 16 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வுசெய்யப்பட்டு சீனா சென்றடைந்தனர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சேசு சபைக் குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அதோடு கணிதம், விஞ்ஞானம் போன்ற கலைகளிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்களின் மனதில் இடம்பிடித்து அவர்களுக்கேற்ப நற்செய்தி பணியை பரப்பினர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவர்கள் மெய்மறை கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.

அப்போது சீன நாட்டு மன்னன் 1692 ல் நாடு தழுவிய மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூலம் விரும்புபவர்கள் மெய்மறையில் சேரலாம். கிறிஸ்துவை பின்பற்றலாம் என்றும் கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நானம் பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவரின் பிரதிநிதி டூர்னோனின்(Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி" என்பதை அறிமுகப்படுத்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து கிறிஸ்துவர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.

1648 ல் "மஞ்ச் டார்டர்"(Manj Dardar) இனத்தை சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை கூறி செபமாலை செபிக்கும்போது, அவரின் உடனிருந்த தோழர்களையும் கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.

மீண்டும் 1715-1747 வரை நற்செய்தி பரப்பிய ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும் கொன்றனர். 1796-1821 முடிய ஆட்சி செய்த மன்னன் கியா கின்(Kiya Kin)கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 1862 ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் முத்திபேறுபட்டம் பெற்றவர்கள்


செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மை இவ்வுலகில் பரப்புவதற்காக பாடுபட்ட பலர், உம் பெயரால் உயிரழந்தனர். இன்றும் எம் நாட்டில் மறைபணியாளர்களுக்கு பல கொடுமைகள் நேருகின்றது. உம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை நீர் கருணை கூர்ந்து காத்தருளும். அவர்கள் மனந்திரும்பி உம்மை ஏற்று, வாழ்வில் இன்பம் கண்டு, மற்றவர்களையும் வாழ வைக்க உம் அருள் தாரும்

இன்றைய புனிதர் 2016-07-08 புனித. கிளியன் (St.Kilian) ஆயர், மறைசாட்சி

                     
                    இன்றைய புனிதர் 2016-07-08
                       புனித. கிளியன் (St.Kilian)
                           ஆயர், மறைசாட்சி

பிறப்பு640வூர்ட்ஸ்பூர்க் ( Wurzburg )

இறப்புஜூலை 8, 689வூர்ட்ஸ்பூர்க் (Würzburg)

முத்திபேறுபட்டம்: 788

இவர் பெயரில் வூர்ட்ஸ்பூர்க்கில் ஓர் ஆலயம் உள்ளது. பல வருடங்களாக இவ்வாலயம் புனித தலமாக இரு ந்தது. அங்குள்ள கிரிப்தா (Krypta)என்ற சிற்றாலய த்தில் உள்ள கல்லறையில் இப்புனிதரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஆயராக இருந்தபோது பய ன்படுத்திய, தலையில் வைக்கும் தொப்பியும்,கையில் பிடிக்கும் நீண்ட பெரிய சிலுவையும் பாதுகாக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டது. மற்றும் சில பொருட்க ளும், திருவிவிலியம் மைன்ஸ்(Mainz) என்ற மறைமாவ ட்டத்திற்கு சொந்தமான நூலகத்தில் வைத்து பாது காக்கப்படுகின்றது. இவரின் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட  அளவில் இருப்பதால் வரலாறாக வடிவமைக்கப்பட்டது.

இவர் 687 ஆம் ஆண்டில் மிக சிறந்த ஆயர் என்ற பெருமையை பெற்றார். வூர்ட்ஸ்பூர்க் மக்களிடையே இவரின் பெயரில் தனிப்பட்ட நம்பிக்கை வளர்ந்தது. 689 ஆம் ஆண்டு கெய்லானா (Gailana) என்ற நாட்டை சார்ந்த ஓர் அரசன், இனத்தின் பெயரால், ஆயர் கிளியன் கொலைசெய்ய திட்டமிட்டான். அவருடன் இணைந்து பணிபுரிந்த குருக்கள் கோலோண்ட்(Kolont) மற்றும் டோப்னான்(Tofnan) இருவரும் முதலில் கொல்லப்பட்டார்கள். நற்செய்திக்கு சான்று பகரும் விதமாக இருவரும் மறைசாட்சியானார்கள். பிறகு கிளியன் அவர்களின் செப வாழ்வினால் அரசர் குடும்பத்தினர் தூண்டப்பட்டு, வூர்ட்ஸ்பூர்க் வந்து ஆயரிடம் ஞானஸ்நானம் பெற்று மனந்திரும்பினர். பாவமன்னிப்பு பெற்று இறைவனை நம்பினர். ஆனால் அரசனின் படையை சேர்ந்தவர்கள், அரசருக்கு தெரியாமலேயே ஆயரை கொன்றார்கள். இவர்கள் மூவருக்குமே (கிளியன், கோலோண்ட், டோப்னான்) வூர்ட்ஸ்பூர்க் பேராலயத்தில் கல்லறைகள் உள்ளது. உலகப் போரில் இப்பேராலயமானது அழிவுக்குள்ளாக்கப்பட்டதால், 1910 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நொய்முன்ஸ்ரர் பேராலயம்(Neumünsterkirche) என்று இன்றும் அழைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பலியில் பங்கெடுக்கப்படுகின்றது.


செபம்:
புதுமைகள் செய்பவரே இறைவா! மறைசாட்சிகளாக மரித்த ஆயர்களையும், குருக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்களின் வழியாக உம் இறையாட்சியை இம்மண்ணில் பரப்பினர். இன்றும் திருச்சபைக்கு எதிராக, பல அநீதிகள் நடக்கின்றது. நீரே இவைகளை கண்ணோக்கி நல்லதோர் தீர்ப்பை வழங்கி உம் திருச்சபையை வழிநடத்தியருளும்.

Wednesday, 6 July 2016


இன்றைய புனிதர் 2016-07-07
             

புனித.வில்லிபால்டு (St.Willibald)

ஆயர்

பிறப்பு22 அக்டோபர் 700தென் இங்கிலாந்து

இறப்பு7 ஜூலை 787ஐஷ்டாட்(Eichstatt) , ஜெர்மனி

பாதுகாவல்: ஐஷ்டாட் நகரின் பாதுகாவலர்

வில்லிபால்டு தென் இங்கிலாந்து நாட்டில் ரிச்சர்டு எ ன்பவரின் மகனாக பிறந்தார். 720 ஆம் ஆண்டு தந்தை ரிச்சர்டு, உடன் பிறந்த சகோதரர் உன்னிபால்டும் (Wunibald) உரோம் நகரை நோக்கி திருப்பயணம் மே ற்கொண்டனர். அப்போதுதான் இவரின் தந்தை லக்கா(Lucca) என்னுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது வில்லிபால்டு உரோம் நகரிலேயே தங்கினார். இர ண்டரை ஆண்டுகள் கழித்து இவர் பாலஸ்தீன மற்றும் கொன்ஸ்டாண்டீனோபிள் நோக்கி பயணம் மேற்கொ ண்டார். 729 ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் இத்தாலி நாட்டிற்கு வந்தடைந்தார். அப்போதுதான் இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார்.

739 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் கிரகோரி அவர்க ளால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் தன்னுடன் குருப்பட்டம் பெற்ற போனிபாஸ் என்பவ ருடன் சேர்ந்து ஜெர்மனி நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அப்போஸ்தலர் பணியை சிறப்பாக செய்தபின் 741 ல் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயரான பிறகும் கூட தனது மிஷனரி பணியை பவேரியா மறைமாநிலம் முழுவதிலும் சிறப்பாக செய்தார். 741- 787 ஆம் ஆண்டு வரை ஐஷ்டாட் என்ற மறைமாநிலத்தில் ஆயராக பணியாற்றினார். இவர் ஐஷ்டாட் மறைமாநி லத்தின் முதல் ஆயர் என்ற பெருமையை பெற்றார். இவர் 8 ஆம் நூற்றாண்டில் இவரின் பெயரால் ஐஷ்டாட்டில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். இவ்வா லயத்தில்தான் வில்லிபால்டு அவர்களின் கால்கள் வைக்கப்பட்டுள்ளது. உரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1745 ஆம் ஆண்டு இவரின் 1000 ஆம் வருட ஜூபிலியை முன்னிட்டு, இவரது கல்லறையை பேதுரு பேராலயத்தி லிருந்து ஐஷ்டாட்டிற்கு மாற்றப்பட்டது. இவர் வாழு ம்போதே ஆலயத்தில் பாடப்படும் பாடற்குழுவிற்கென ஓர் அழகிய மேடையை அமைத்தார். அவர் திருப்பலி ஆற்றும் போதெல்லாம், ஐஷ்டாட்டில் வாழும் ஒவ்வொ ருவரும் புனிதர்களே" என்று தவறாமல் கூறிவருவார்.


செபம்:
திருச்சபையை வழிநடத்துபவரே எம் இறைவா! திரு ச்சபையின் மீது கொண்ட ஆர்வத்தால், நாடு விட்டு நாடு வந்து உம் பணியை ஆற்றினார் புனித வில்லிபால்டு. இன்றும் அவரை போல உம் பணியை ஆற்றிவரும். ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசீர்வதி யும். திறம்பட பணிபுரிய நல்ல உடல் உள்ள நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.

Tuesday, 5 July 2016

இன்றைய புனிதர் 2016-07-06 புனித மரிய கொரற்றி (St.Maria Goretti) மறைசாட்சி


இன்றைய புனிதர்  2016-07-06


புனித மரிய கொரற்றி (St.Maria Goretti) மறைசாட்சி

பிறப்பு1890அங்கோனா (Ankona), இத்தாலி

    இறப்பு 1902

புனிதர்பட்டம்: திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்

இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான்.

"இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். "மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். "மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். இவர் இறந்த 50ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார்.


.


செபம்:
இந்நாட்களில் கற்பு என்றால் என்ன என்று அக்கறையின்றி கேட்கும் போதும், திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும் ஆபாசக் காட்சிகளை தெய்வாக்கும் சூழலில், நாங்கள் தூய ஆவியின் ஆலயமாக திகழ்ந்து, எம்மையும் பிறரையும் மதிக்கும் வரம் தாரும் இறைவா.

Monday, 4 July 2016

இன்றைய புனிதர் 2016-07-05 புனித அந்தோனி மரிய சக்கரியா குரு

                      

                இன்றைய புனிதர்           2016-07-05

                     புனித அந்தோனி மரிய சக்கரியா      குரு

பிறப்பு 1503                இறப்பு 1539

மார்ட்டின் லூத்தர் ஓர் கத்தோலிக்க, துறவற சபை குருவாக இருக்கும்போது திருச்சபையில் நிலவிய பலவித தீமைகளை சுட்டிக்காட்டி திருச்சபையை விட்டு வெளியேறினார். புனித அந்தோனி மரிய சக்கரியா, திருச்சபைக்குள் இருந்துகொண்டே தம் ஈகை இரக்க செயல்களாலும், தமது புனித வாழ்க்கையாலும் பலரை மனந்திருப்பினார். அத்தோடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் துறவற சபைகளை நிறுவினார். அப்போது அச்சபையின் அவலங்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியும் கண்டார்.

இவரின் தாய் இவருக்கு 18 வயது நடக்கும்போது விதவையானார். அதிலிருந்து அவர், மகனின் ஆன்மீக வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். நோயினால் தாக்கப்பட்ட ஏழை எளியோரை குணப்படுத்தும் நோக்குடன் சக்கரியா, பதுவை பல்கலைகழகத்தில் மருத்துவக்கலை பயின்று பட்டம்பெற்றார். மக்களின் உடல்நிலையை மட்டுமல்லாது, உள்ளத்து நோய்களையும் குணமாக்க வேண்டுமென எண்ணி, வேத கலையையும் கற்றார். இவர் 1530 ஆம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். பிறகு "பர்ணபைட்ஸ்" (Barnabites)என்ற பெயர் கொண்ட ஒரு துறவற சபையை நிறுவினார். மிலான் நகரில் புனித பர்னபாஸ் ஆலயத்தில் இவர் தமது அலுவலகத்தை அமைத்துக் கொண்டதால் அப்பெயரை தமது சபைக்கு கொடுத்தார். இவரது தூண்டுதலின் பேரில், லூயிசா டொரெல்லா என்ற ஒரு செல்வந்தர் "ஏஞ்சலிக்கல்ஸ்"(Engelicals) என்ற பெயர் கொண்ட பெண்களுக்கான துறவற சபையை நிறுவினார். இச்சபையின் சிறப்பு நோக்கம், தவறிச் சென்று, பள்ளத்தில் விழுந்து கிடக்கும் பெண்களை மீட்பதும், அவர்களுக்கு புதிய சிந்தனைகளையும் உயரிய கண்ணோட்டங்களை கொடுப்பதுமாக இருந்தது. இத்தகைய அரும்பணி மக்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றபின், சக்கரியா தமது36 ஆம் வயதில் விண்ணக வாழ்வை அடைந்தார். அடிக்கடி திவ்விய நன்மை வாங்குவது, 40 மணி நேரம் திவ்விய நற்கருணை திருமணி ஆராதனை போன்ற ஆன்மீக முயற்சிகளையும் முதலில் இவரே தோற்றுவித்தார்.

"நமக்கு கிடைத்த தேவ அழைத்தலின் வழியாக இறைவன் எவ்வளவு நம்மிடம் எதிர்பார்க்கின்றார் பாருங்கள்; திருத்தூதர்களையும், மறைசாட்சிகளையும் பின்பற்ற நாம் முன்வந்துள்ளோம்; ஆனால் அவர்களுக்கும், நமக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள்; அவர்களடைந்த வேதனைகளை நாம் ஒதுக்கிவிட கூடாது" என்பதை இப்புனிதர் தம் சபையினருக்கு அறிவுரையாக தந்தார்.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! இன்று மருத்துவ துறையில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். உடல் அளவில் மட்டுமில்லாமல், மனதளவிலும் பங்குபெற்று, நோயாளிக்கு பணிபுரிய உம் ஆசீர் தாரும். நோய்களை குணமாக்கக்கூடிய வல்லமையை நீர் தந்து, எம் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றிட வரம் தாரும்.

Sunday, 3 July 2016

இன்றைய புனிதர் 2016-07-04 புனித எலிசபெத் (St. Elisabeth) குடும்பத் தலைவி

                                               

இறப்பு                                                                                             பிறப்பு

இவர் ஸ்பெயின் நாட்டு மன்னன் 3 ஆம் பீட்டரின் மகள். ஸ்பெயின் மொழியில் எலிசபெத்தின் பெயர் இசபெ ல்லா. ஹங்கேரி நாட்டு அரசி புனித எலிசபெத்தின் பேத்தி. இவர் இளமை முதல் ஆழமான பக்தியிலும் தவமுயற்சிகளிலும் வளர்ந்தார். 12 வயதில் போர்த்து க்கல் மன்னன் டென்னிசுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். மன்னன் தன் வாழ்வை கீழ்த்தரமாக வாழ்ந்ததால், இவனுக்குத் தவறாக பிறந்த ஒரு மகனும் இருந்தான். எலிசபெத் இத்தகைய சூழ்நிலையிலும் தன் ஆன்மீக வாழ்வில் மிகுந்த உறுதியும் ஆர்வமும் காட்டி னார். அதிகாலையில் தினந்தோறும் கட்டளை செப த்தில் உள்ள செபத்தை செபித்து வந்தார். உண்ணா நோன்பையும், ஒறுத்தல் முயற்சிகளையும் பெருக்கிக் கொண்டே போனார். தம்முடைய கணவர் முன்கோபியா கவும், முரடராகவும் நடந்துக்கொண்டாலும், தன்னுடைய விசுவாசம் நிறைந்த செபத்தின் மூலம் தன்னுடைய 40 ஆண்டு காலத் திருமண வாழ்வில் இவர் வெற்றிக்கண்டார். கணவனை முற்றிலும் இறைவன் பக்கம் மனம் மாறிட வழிவகுத்தார். மனமாறிய கணவர் 12 ஆண்டுகள் இறை விசுவாசத்தில் வாழ்ந்து இறந்தார்.

எலிசபெத் தன் கணவரின் இறப்பிற்குப்பின் கிளாரம்மாள் துறவு மடம் சென்று அசிசியாரின் 3 ஆம் சபை உறுப்பினராக வாழ்ந்தார். ஏழைகளை பேணுவதில் தன் நேரத்தையும், மிகுந்த பணத்தையும் செலவழித்தார். நோயுற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றினார். இவரின் கணவர் உயிருடன் வாழ்ந்தபோது, முரடாக இருந்தபோது ஒரு முறை வயிற்று பசியுடன் இருந்த ஏழை ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவருக்கு ரொட்டி கொடுக்க கூடை நிறைய எடுத்து சென்றார். இதைக் கண்ட முரட்டுக் கணவர், அவரை வழிமறித்து, கூடையை பார்த்தார். அப்போது கூடையிலிருந்த 2 ரொட்டித்துண்டுகள் ரோஜா மலர்களாக மாறி காட்சியளித்தது.

அனைத்திற்கும் மேலாக இவர் ஓர் "அமைதி விரும்பி" என்றே அழைக்கப்பட்டார். 5 முறை மிகக் கடுமையான சூழலில் அமைதியை நாட்டில் நிலைநாட்டினார். அமைதியை நிலைநாட்ட கருதி முறையாக எடுத்த நீண்ட அரிய பயணம், அவரது உயிரை வாங்கியது. 1323 ல் தன் மகன் அல்போன்சோ தன் தந்தையின் வப்பாட்டியின் மகனுடன் போர் தொடுத்தபோது, எலிசபெத்தின் குறுக்கீட்டால் அமைதி ஏற்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பின்னர், தாம் தங்கியிருந்த மடத்திலிருந்து வெளியேறி, ஸ்பெயினுக்கு பயணமாகி, அல்போன்சோவுக்கு அவரின் மைத்துனர் காஸ்டில் நாட்டு மன்னருக்கும் இடையே அமைதியை நிலைநாட்டினர். தம் உடன்பிறந்தவரும், ஆரம்கான் நாட்டு மன்னனுமான 2 ஆம் ஜேம்சுக்கும் தம் இன்னோரு உறவினரும் காஸ்டில் மன்னனுமான 4ஆம் பெர்னாண்டுக்கும் இடையிலும் அமைதியை உண்டு பண்ணினார்.

தன் கணவரை இறைவன் பக்கம் திருப்பியதும் இறைவனுடன் ஒப்புரவு செய்து வைத்ததும், எலிசபெத்தின் மிகப் பெரிய சாதனை. கணவர் சாவு படுக்கையிலிருக்கும் போதுதான். அவரை மனந்திருப்பினார். கடைசிவரை கணவரை அருமை பெருமையாக கவனித்துக் கொண்டார். "அமைதியை ஆண்டவனின் கட்டளையாக கருதி நிலைநாட்ட வேண்டும். நான் அமைதியை விட்டு செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றார் நம் ஆண்டவர். அதாவது நான் உங்களைவிட்டு பிரியும்போது அமைதியில்தான் உங்களைக் காணவேண்டும் என்பது பொருள். ஆண்டவர் வரும்போது விரும்பி எதிர்பார்ப்பேன் என்று சொல்லி சென்றதும் அமைதியே, அமைதி விரும்பியாக இரு; அப்போது எங்கும் அமைதி மயமாக திகழும், கடவுளின் திருச்சபை அமைதியில்தான் நிறுவப்பட்டது" என்ற புனித கிளிசொலொகு அருளப்பரின்(Chrisologu John) வார்த்தையை தன் வாழ்வாக வாழ்ந்தார்.


செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! ஏழைகளின் மேல் பாசம் வைத்து, தன் வாழ்வையே அவர்களுக்காக கொடுத்து, உம்மில் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு வாழ்ந்து, பலரின் வாழ்வில் ஒளியேற்றிய புனித எலிசபெத்தைபோல, நாங்களும் ஏழைகளின் நண்பர்களாக வாழ வரம் தாரும்

Saturday, 2 July 2016

இன்றைய புனிதர் 2016-07-03 புனித தோமையார் (Apostle Thomas) இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி

          
                இன்றைய புனிதர் 2016-07-03

புனித தோமையார் (Apostle Thomas)

இந்தியாவின் திருத்தூதர், மறைசாட்சி


பாவம் தோமா! உயிர்த்த ஆண்டவரைக் காண்பதற்கு அவர் போட்ட நிபந்தனை அவருக்கு ஒரு பட்டப் பெயர் சூட்டப்படக் காரணமாயிற்று. "ஐயப் பேர்வழி" என்றே இன்றுவரை உலகம் அழைக்கின்றது. ஆனால், " அவர் நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" என்று விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கையிடவில்லை. இவர் நமக்கு ஓர் உருக்கமான, விசுவாசம் நிறைந்த செபத்தை அமைத்து கொடுத்து, இச்செபத்தை நாம் பொருள் உணர்ந்து சொல்லும் போதெல்லாம் நமது பற்றுறுதி மெருகேற்ற ப்படுகிறது. "காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்" என்று கூறிய உயிர்த்த ஆண்டவர், உலகமுடியும் வரை தம்மில் விசுவாசம் கொள்வோர் பேறு பெற்றோர் என்று தெளிவுபடுத்துகிறார். நாம் இந்த விசுவாசக் குடும்ப  த்தை சேர்ந்தவர்கள் என்பது ஆறுதல் அளிக்க வேண்டும்.

தோமா ஆண்டவரிடம் ஒரு தனிப்பற்றுதல் கொண்டி ருந்தார். நாமும் ஆண்டவருடன் சென்று அவரோடு சாக வேண்டியிருந்தாலும் தயாராய் இருப்போம் என்று கூறியவர். தோமா ஆண்டவரின் விண்ணேற்பிற்கு பிறகு சென்று போதியுங்கள் என்ற அவரின் கட்ட ளையை நிறைவேற்ற புறப்படுகிறார். யுசிபியுஸ் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். "அப்போஸ்தலர் யூதா ததேயுவை எடெஸ்ஸாவிலிருந்த அப்கர் என்ற அரசனுக்கு திருமுழுக்கு கொடுக்க அனுப்பியபின் தமக்கென பார்த்தியா மீட்ஸ், பெர்ஷியா இன்னும் பல அண்டை நாடுகளை தெரிந்துகொண்டு மறைபரப்பு பணியாற்றினார். தோமா. அப்போதுதான் இந்தியா வந்தார். "தோமாவின் பணிகள்" என்ற ஒரு நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியிலேயே மக்களிடம் இருந்ததாக ஆதாரம் இருக்கிறது.

கொண்டோபெர்னஸ்(Condoberns) அல்லது குடுப்பாரா(Cudupara) என்ற மன்னரது ஆட்சி 46 ல் பெஷாவர் வரை பரவிக்கிடந்தது. பஞ்சாபிலிருந்து கொச்சின், திருவிதாங்கூர் சிற்றரசு வரைக்கும் பரவியிருந்தது. அதிலிருந்து " புனித தோமாவின் கிறிஸ்தவர்கள்" என்றே இப்பகுதியினர் அழைக்கப்பட்டு வந்தனர். தங்களுடைய திருவழிபாட்டுக்கு "சீரியக்" என்ற மொழியையே அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தியதோடல்லாமல் இன்று வரை "சீரியன் கிறிஸ்தவர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். சீரியக் மொழி உறுதியாக பெர்ஷியா, மெசப்பொத்தேமியா பகுதிகளிலுருந்து இறக்குமதியானது. தோமா முதன் முதலில் கிராங்கனூர் கடற்கரையை வந்தடைந்தார் எனவும், மலபாரில் மட்டும் 7 ஆலயங்கள் எழுப்பினார் எனவும், பின்னர் குமரி கடற்கரை வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய பின் "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது. அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும் உள்ளது.

1522 ஆம் ஆண்டு போர்த்துகீசியர் சென்னை வந்தபோது, அவரது கல்லறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த பொருட்கள் மைலாப்பூரில் சாந்தோம் பேராலயத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இவரின் திருப்பண்டங்கள் பலவும் 4 ஆம் நூற்றாண்டில் எடெஸ்ஸாவுக்கு(Edesta) கொண்டு செல்லப்பட்டதாக "தோமாவின் பணிகள்" என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மெசப்பொட்டேமியாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் எடெஸ்ஸாவிலிருந்து பின்னர் அப்ரூஸ்ஸியில் உள்ள ஓர்டோனாவிற்கு(Ordon) எடுத்து செல்லப்பட்டு இன்றுவரை புனிதமாக காப்பாற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! புனித தோமா நீரே என் ஆண்டவர் என்று ஏற்றுக்கொண்டதுபோல, நாங்களும் உம்மை எம் வாழ்வில் ஏற்று, பாதுகாவலாக கொண்டு, உம்மில் எம் வாழ்வை பயணமாக்க வரம் தாரும்.

Friday, 1 July 2016

இன்றைய புனிதர் 2016-07-02 புனித பெர்னார்டின் ரியலினோ (St.Bernardin Riyalyno) இயேசு சபை குரு

                         
               இன்றைய புனிதர் 2016-07-02

புனித பெர்னார்டின் ரியலினோ (St.Bernardin Riyalyno)

                        இயேசு சபை குரு

பிறப்பு 1530 கார்ப்பி, இத்தாலி

இறப்பு 2 ஜூலை 1616

இவர் லெச்சே (Letche) என்ற ஊரில் படித்தார். இதே நக ரில் 42 ஆண்டுகள் இயேசு சபைக் குருவாக பணிபுரி ந்தார். இரு நகரத்தாரும் "எங்கள் புனிதர்" என்றே இவரை அழைக்கின்றார். பொலோஞ்ஞா பல்கலை க்கழகத்தில் படிப்புகளை முடித்தார். வெளியுலகில் பெரிய காத்திருந்தன. இவர்தன் இளம் வயதில் துலிண்ட்ரா என்ற அழகி ஒருத்தியை விரும்பினார். ஆனால் அவள் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டாள். இவர் ஓர் முன்கோபியாக இருந்தார்.

ஒருநாள் நேம்பினஸ் (Nepinas) வீதி வழியாக இரு துறவி கள் நடந்து செல்வதை இவர் பார்த்தார். புதிதாக தோ ன்றிய இயேசு சபையை சேர்ந்தவர்கள் இவர்கள் எ ன்பதை அறிந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் பலிபூசையிலும், சிறப்பாக மறையுரையிலும் பங்குபெற்றார். இவை களே இவரது தேவ அழைத்தலுக்கு நல்லவித்தாக திக ழ்ந்தன. அந்நாட்களில் இவரின் மனதில் பெரிய குழ ப்பம் ஏற்பட்டது. தம் அறையில் தனிமையில் செபமா லை ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது மரிய ன்னை குழந்தை இயேசுவுடன் வந்து காட்சி தந்தார். அவரின் குழப்பம் நீங்கியது. அவருக்குள் பேரமைதி நிலவியது. பின்னர் இயேசு சபையில் சேர உறுதி பூண்டார். 1541 ஆம் ஆண்டு அச்சபையில் சேர்ந்தார். 52 ஆண்டுகள் அச்சபையில் வாழ்ந்தார். உயர்ந்த படிப்புகள் படித்து பெரிய பட்டங்கள் பெற்றிருந்தும், தாழ்ச்சியின் பொருட்டு துணை சகோதரராகவே இருக்க விரும்பினார். ஆனால் இவரை குருத்துவத்தி ற்கு சபை தெரிந்து கொண்டது. குருவாக ஆனபின் லெச்சே என்ற இடத்திற்கு வந்தார். இங்கு "எல்லாரு க்கும் எல்லாமாக" நடந்து அனைவரின் மதிப்பையும் அடைந்தார். இவர் ஏழைகளை பேணுவதில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் மரணப்படுக்கையில் இருந்ததை கேட்ட மக்கள் கல்லூரிக்கு படையெடுத்து சென்றனர். கல்லூரியின் நுழைவாயிலையே அடைக்க வேண்டியதாயிற்று. நகரின் தலைவரே தந்தையின் இறுதி ஆசி பெற வந்துவிட்டார். இவர் "ஓ மிகுந்த வணக்கத்துக்குரிய ஆண்டவளே" என்று மரியின் பெயரை உச்சரித்தவாறு தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.


செபம்:
தாழ்ச்சியின் மறு உருவே எம் இறைவா! உம் சாவிலும் கூட நீர் உம்மையே தாழ்த்தினீர். உமக்கு சான்று பகரும்விதமாக புனித பெர்னார்டினும், தம்மையே தாழ்த்தி, உமக்குரியவராக வாழ்ந்தார். பல திறமைகள் இருந்தபோதும், ஒன்றுமில்லாமைபோல், உம்மோடு ஒன்றித்திருந்தார். அவரை முன்மாதிரியாக கொண்டு நாங்களும் வாழ்ந்திட உம் அருள் தந்து, எம்மை ஆசீர்வதித்து வழிநடத்தும்.

Thursday, 30 June 2016

இன்றைய புனிதர் 2016-07-01 புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon) திருத்தொண்டர்

                                  

                     இன்றைய புனிதர்2016-07-01

புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon)

                                              திருத்தொண்டர்

பிறப்பு 1813 மால்டா

இறப்பு01 ஜூலை 1875            

 புனிதர்பட்டம்: 1905, திருத்தந்தை 10ஆம் பயஸ்

இவர் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் பக்தியா னவராக வளர்ந்தார். தினமும் ஜெபமாலை செபிப்ப தில் வல்லவராக திகழ்ந்தார். இவர் தனது உயர் கல்வி யை முடித்தபின் குருமடத்திற்கு சென்றார். ஆனால் குருவாவதற்கான வயதையும், தகுதியும் இவரிடம் இல்லாமல் இருந்தது. இதனால் தன் வாழ்நாள் முழுவ தும் இவர் ஓர் ஆன்ம வழிகாட்டியாக பணிபுரிந்தார். இவர் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுக்கொடுப்பதிலும், அடிக்கடி மால்டா தீவிற்கு சென்று, அங்கிருந்து ஆங்கிலேயே படைவீரர்க ளுக்கு திருவருட்சாதனங்களைப் பற்றி கற்றுக்கொடு ப்பதிலும் தன் நாட்களை கழித்தார். போர் வீரர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, விசுவாச த்தில் வளர வழிகாட்டினார். இவர்களின் உதவியினா லும், 600 படைவீரர்களைக்கொண்டு, வாலெட்டாவில் ஓர் சபையை தொடங்கினார்.

காலைமுதல் மாலைவரை உழைத்து முடித்துபின், நாளுக்கு நன்றி கூறியும், அந்நாளில் செய்த பாவத்தி ற்கு பாவமன்னிப்பும் வேண்டி ஒவ்வொரு நாள் மாலை யும் வழிபாடு நடத்தப்பட்டது. உலகின் பாவங்களு க்காக அனைவரும் சேர்ந்து செபித்துக்கொண்டிரு க்கும்போது, தன் கைகளைவிரித்து, கண்களை மேலே உயர்த்தியவாறு, தன் ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.


செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குருத்துவ வாழ்வில் தன்னை அர்ப்பணிக்க விரும்பி, தகுதியின்மையால் குருவாகாமல், வாழ்நாள் முழுவதும் திருத்தொண்ட ரைப் போலவே வாழ்ந்த இக்னேசியசை நினைத்து நன்றி கூறுகின்றோம். அவரைப்போல வாழும் இளைஞர்களை நீர் ஆசீர்வதியும். இவர்களின் வழியாக உம் மக்களுக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுக்க, நீர் வரம் தர வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம்

இன்றைய புனிதர் 2016-06-30 உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் (The first Martyrs of the See of the Rome)


                 

             இன்றைய புனிதர் 2016-06-30

உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள்
(The first Martyrs of the See of the Rome)

கி.பி. 64 ஆம் ஆண்டில் உரோமையில் நிகழ்ந்த பெருந்தீ விபத்தின் அழிவுக்குப்பின் மாமன்னன் நீரோ முத ன்முறையாக திருச்சபையை வாட்டி வதைத்தபோது, மெய்யடியார்கள் பலரும் மிகக் கொடிய வேதனைக ளுக்கு ஆளாகி கொல்லப்பட்டார்கள். ஏற்பட்ட தீ விப த்தானது 6 நாள் பகலும், 7 நாள் இரவும் அதற்கு மேலும் கொழுந்து விட்டெரிந்தது. அப்போது மன்னன் நீரோ வெகுளித்தனமாக உடைகள் அணிந்துகொண்டு, ஒரு கோபுர உச்சிக்கு சென்று தீப்பிழம்புகளை கண்டுகளி த்தான். அவன் வெகுளித்தனமாக இவ்வாறு கண்டுகளி த்ததை பார்த்த பலரும், நீரோவே தீயை வளர்க்க ஆணை பிறப்பித்திருப்பானோ என்று ஐயமுற்றனர். எப்படியும் தீயை அணைக்க அவன் எந்தக் கட்டளை யும் பிறப்பிக்கவில்லை. இதனால் நீரோவே தீ தொட ர்ந்து எரிய வழிவகுத்திருக்கலாம் என்ற ஐயம் வலுப்ப ட்டது. இதையறிந்த நீரோ மன்னன், கிறிஸ்தவர்களே இதற்கு காரணம் என்று திசைதிருப்பிவிட்டான். டாசிற்றஸ்(Dasitras) என்ற வரலாற்று ஆசிரியர் அப்போது இந்த குற்றச்சாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் கிறிஸ்தவ ர்களை ஒன்றாக சேர்க்க ஆணையிட்டான். தனது பெரிய நந்தவனத்திலேயே அவர்களை கூட்டிக் கிறி ஸ்தவர்கள் மீது தார் எண்ணெய் ஊற்றி அவர்களை ஓர் இரவு முழுவதும் சுட்டெரித்தான். இதனை கண்ட மக்க ள் ஆத்திரமும், பயமும் கொண்டு வெளியேறினார்கள்

செபம்:
அன்பான ஆண்டவரே உரோமைத் திருச்சபையின் தொடக்கத்தை மறைசாட்சியரின் இரத்தத்தால் புனித ப்படுத்தினீர். கடுமையான மரணப் போராட்டத்தில் அவர்களிடம் விளங்கிய உறுதியான ஆற்றலை வெளிப்படுத்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக மறைசாட்சிகளாக மரிக்கும் ஒவ்வொருவரையும் நீர் நினைவு கூர்ந்து, உமது திருச்சபையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 29 June 2016

இன்றைய புனிதர் 2016-06-29

                                    

புனித பேதுரு, புனித பவுல் (St.Peter and St.Paul)

                                                  புனித பவுல்:

இறைவன் மட்டுமே வீழ்ச்சியுற்ற மனிதனை மீட்க இயலும். மனி தனின் முயற்சி எத்தகையதாக இருந்தாலும், சட்டங்களை மிகக் கண்ணுங்கருத்துமாக கடைபிடித்தாலும் பாவத்தினின்றும், அலகையினின்றும், சாவினின்றும் விடுதலை அடைய மனிதன் தன்னை முழுவதும் இயேசுவின் அருள் ஆற்றலுக்கு ஒப்படை த்தாக வேண்டும் என்ற அசையாத நம்பிக்கை இவரிடம் வேரூ ன்றியிருந்தது.

தமஸ்கு நகருக்கருகே பவுல் கண்ட காட்சியில் உயிர்த்த இயேசு வுடன் கலந்துரையாடியது, அவரது வாழ்வில் ஒரு பெரும் மா ற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு, அவர் கிறிஸ்துவுக்காக உழைத்து, உயிர்த்த கிறிஸ்துவின் திரு த்தூதர் ஆனார். பலவிதமான எதிர்ப்புகள், அவமானங்கள், சாட்டையடிகள், கல்லடிகள், ஒடுக்கப்பட்ட நிலை, சிறைவாசம் இவை போன்ற இன்னும் பல கொடுமைகள் இவரை மேலும் மேலும் திருச்சபையின் அசையாத தூணாக்கியது. இவருடைய கடிதங்களில் காணப்படும் சில அரிய தொடர்கள், கிறிஸ்துவி ன்மீது இவர் கொண்டிருந்த பற்றுறுதியை காட்டுகின்றது. இவர் எழுதிய திருமுகங்களில் "கிறிஸ்துவில்" என்ற சொல் ஏறக்கு றைய 50 முறை வருகின்றது. இது அவரின் ஆன்மீகத்தையும், அப்போஸ்தலிக்க வாழ்வையும், வேத கலாபனையையும், பணி வாழ்வையும் வெளிப்படையாக காட்டுகின்றது. "எல்லோர்க்கும் எல்லாம் ஆனேன்" என்று இவர் குறிப்பிடுவது, நற்செய்திக்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் எவரிடமும் கனிவுடனும், பாச த்துடனும் நடந்து, நான் கிறிஸ்துவை மாதிரியாக தேர்ந்து கொ ண்டதுபோல, என்னையும் உங்கல் மாதிரியாக எடுத்துகொள்ளு ங்கள் என்று குறிப்பிடுகின்றார்.


செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! திருத்தூதரான புனித பேதுரு, பவுல் இவர்களை மேம்படுத்த இந்நாளை தந்ததற்காக நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உம் மகன் வழியாக உம்மை வழிபட எங்களுக்கு முதன்முறையாக கற்றுத்தந்தனர். உமது திருச்சபை அவர்களது போதனையின்படி வாழ வரமரு ள்வீராக.

Tuesday, 28 June 2016

ன்றைய புனிதர் 2016-06-28 28 புனித இரேனியுஸ் (St. Irenaeus) ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி

                           

                இன்றைய புனிதர் 2016-06-28

                          28 புனித இரேனியுஸ் (St. Irenaeus)

                            ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி

இறப்பு 28 ஜூன் 200                  பிறப்பு 130

இரேனியுஸ் என்ற சொல்லுக்கு "அமைதி விரும்பி" எ ன்பது பொருள். இவர் தம் பெயருக்கேற்ப அமைதியின் மூலம் பல அருஞ்செயல்களை நிலைநாட்டி திருச்ச பைக்கு பேரும் புகழும் தேடித்தந்தார். இவர் 2 ஆம் நூற்றாண்டின் சிறப்பான மறைவல்லுநர். புனித போலிக்கார்ப்பின் சீடர் லயன்ஸ்(Lions) நகர்புறத்துக் கிறிஸ்தவர்களின் ஆயராயிருந்தார். இவர்களின் பொருட்டு ஒருமுறை உரோமை சென்றார். பிறகு ஒரு முறை சிறிய ஆசியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக பரிந்துரைக்கவும் திருத்தந்தையை சந்திக்க சென்றார்.

இவர் ஆற்றிய திறமைமிக்க பெரும்பணி நாஸ்டிக் (Gnostic) என்று சொல்லப்பட்ட தப்பறையை தம் பெயரு க்கே உரிய அமைதியான முறையில் எடுத்துரைத்த தாகும். தொடக்கத்தில் உருவமற்ற பொருள் ஒன்று இருந்தது. இதிலிருந்தே தெய்வ தன்மையுடனிருந்த ஒருவரின் குறுக்கீட்டால் இவ்வுலகம் தோன்றியது என்பது இந்த தப்பறையின் சாரமாகும். 177 ஆம் ஆண்டு கொடுங்கோல் மன்னனும் மெய்மறை பகைவனுமான மார்க் அவுரேலியஸ்(Aurelias) ஆட்சியில் பயங்கரமான வேதகலாபனை தோன்றியது. இச்சூழலில்தான், சிறை யில் அகப்பட்ட குருக்கள் சிலர், சிறையில் அகப்படாத இவரை உரோமை நகருக்கு அனுப்பினார்கள். பிறகு இருவரும் பாப்பரசரிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறினர். இவர் உரோமையிலிருந்து வருவதற்குள் ஆயரான புனித போட்டினுசும்,(Botinus) அவரோடு குரு க்கள் பலரும் வேதத்திற்காக தங்கள் இரத்தத்தை சிந்தி சாட்சி பகர்ந்து, இவ்வுலகை விட்டு பிரிந்தனர். இச்சூ ழலில் இவர் திரும்பி வரவே ஆயராக நியமிக்கப்ப ட்டார். 24 ஆண்டுகள் ஆயராக பணியாற்றி பலரை மனந்திருப்பினார். பல மெய்மறை நூல்களை எழுதினார். இதன் வழியாகவும் பலரை இறைவன் பால் ஈர்த்தார்.


செபம்:
வழிகாட்டும் தெய்வமே எம் இறைவா! திருச்சபையையும், கிறிஸ்துவத்தையும் இவ்வுலகில் நிலைநாட்ட புனித இரேனியுஸ் அரும்பாடுபட்டுள்ளார். நீர் அவரோடு இருந்து, அவரை வழிநடத்தியுள்ளீர். இன்றைய எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்த ந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையி னரையும் நீர் ஆசீர்வதியும். உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த தேவையான அருள் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Sunday, 26 June 2016

இன்றைய புனிதர் 2016-06-27 அலெக்சாண்டிரியா நகர் புனித சிரில் (St.Cyril of Alexandria ) ஆயர், மறைவல்லுநர்( Bishop & Doctor of the Church)

                 
                இன்றைய புனிதர் 2016-06-27

அலெக்சாண்டிரியா நகர் புனித சிரில் (St.Cyril of Alexandria )

                   ஆயர், மறைவல்லுநர்( Bishop & Doctor of the Church)

                       இறப்பு 444   பிறப்பு 370

புனிதர்கள் என்று கூறினால் குறையே இல்லாதவர்கள் என்று பொருளில்லை என்பதற்கு இவர் ஓர் எடுத்து க்காட்டு. இவர் கோபக்காரர். பொறுமையில்லாதவர். சற்று விவேகம் அற்றவர். இவர் நொவேஷியன்(Novesien) என்று பெயர் கொண்ட ஆலயங்களை இழுத்து மூடி னார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் மீது பழி சுமத்தி னார். யூதர்களின் செல்வங்களை பறித்தார். அவ ர்களை அலெக்சாண்டிரியா நகரினின்று வெளியேற்றி னார். எபேசு நகரில் கூடிய பொது சங்கத்தில் அந்தி யோக்கியா நகரின் பிதாப்பிதா, அரசு ஆணைப்படி தலைமை தாங்குமுன்னரே, ஆத்திரப்பட்டு நெஸ்டோ ரியசை வெளியேற்றினார்.

428 ஆம் ஆண்டில் அந்தியோக்கியாவை சார்ந்த துறவி நெஸ்டோரியஸ் கொன்ஸ்டாண்டினோபிளின் பேரா யராக நியமனம் பெற்றார். இவர் கிறிஸ்து இயேசுவிடம் 2 ஆட்கள் உண்டு என்ற தப்பறையை போதித்து வ ந்தார். சிரில் இவரது தப்பறையை சுட்டிக் காட்டினார். நெஸ்டோரியஸ் திருந்தவில்லை. இருவரும் திருத்தந்தை முதல் செலஸ்டீனிடம்(Celestine I) இந்த விவாதத்தை முன் வைத்தனர். உரோமை ஆயர் குழு இதனை ஆராய்ந்தது. "நெஸ்டோரியஸ் கூறுவது தவறு. இதனை 10 நாட்களுக்குள் அவர் நீக்கி கொள்ளவேண்டும்" என்று பணித்தது. நெஸ்டோரியஸ் அடம் பிடித்தார்.

இதன் விளைவாக தோன்றியதுதான் 341 ல் கூடிய எபேசு பொதுச்சங்கம். இதில் சிரில் தலைமை தாங்க, 200ஆயர்கள் கலந்துகொண்டனர். சிரில் தான் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் நியமனம் பெற்றிருந்தார், நெஸ்டோரியஸ் இதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதனால் நெஸ்டோரியஸ்ஸின் தவறு சுட்டிக்காட்டப்பட்டு, அவரும் திருச்சபைக்கு புறம்பாக்கப்பட்டார். இந்த பொதுச்சங்கத்தில் தான் முதன்முறையாக மரியன்னைக்குTheotokos என்ற சொல் பயன்படுத்தப்பட்டு, "இறைவனின் தாய்" என்பதே மரியன்னைக்கு பொருத்தமான அடைமொழி. நெஸ்டோரியஸ் கூறியதுபோல் "கிறிஸ்துவின் தாய்" என்பது மரியன்னைக்கு பொருந்தாது. தவறான பொருளை கொடுப்பதனால் அது தவறு என்று அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்து இறைத்தந்தையுடன் ஒரே பொருளாயிருந்து அதே வேளையில் மனிதனோடும் ஒன்றாக கலந்த ஆளாக இருந்தால் மட்டுமே, மனிதனை மீட்க இயலும். காரணம், இறைவனும், மனிதனும் சந்திப்பது. கிறிஸ்துவின் மனிதவதாரத்தில்தான். இது மனுவுறுவெடுத்த கடவுளின் தசையாக இருந்தால் மட்டுமே (மீட்பு பெறவேண்டிய) மனிதன் அவரது மனித இயல்பின் வழியாக கிறிஸ்துவின் தெய்வீகத்தை வந்தடைய முடியும்.


செபம்:
பாவிகளையே அழைக்கவந்த எம் இறைவா! பெரியவர், சிறியவர், திறமையானவர், திறமையற்றவர் என்று பாராமல் அனைவரையும் சமமாக நீர் அன்பு செய்கின்றீர். தவறும் நேரத்தில் உடனிருந்து வழிநடத்துகின்றீர். உம் வழியை பின்பற்றி வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற நிலையை நாங்கள் அடைய எம்மை வழிநடத்தியருளும்.

இன்றைய புனிதர் 2016-06-26 புனித.விஜிலியஸ் ஆயர், மறைசாட்சி

                           

                  இன்றைய புனிதர் 2016-06-26

              புனித.விஜிலியஸ் ஆயர், மறைசாட்சி

இறப்பு 405                                       பிறப்பு385

இவர் தனது இளம் வயது கல்வியை உரோம் நகரில் பயி ன்றார். பின்பு தனது 20 ஆம் வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து ஏதென்ஸ்(Athen) நகருக்கு சென்றார். அங்கு மிக கடுமையான, ஏழ்மையான வாழ்வை வா ழ்ந்தார். இவரின் வாழ்வு, பார்த்தவர்களை பரவசம டைய செய்தது. இவர் ஏழ்மையின் இளைஞர் என்று பெயர் பெற்றார். பிறகு குருமடத்தில் சேர்ந்து குருவா னார். அப்போது 384 ஆம் ஆண்டு டிரிண்டைன்(Trient) ஆயர் இறந்து போகவே விஜிலியஸ் டிரிண்டைன் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பில் இருக்கும்போது, தன் மறைமாவட்டத்தில் எண்ணிலடங்கா ஆலயங்களை எழுப்பினார். பின்னர் அவ்வாலயங்களில் விசுவாசிகளை நிரப்ப, மறைமாவ ட்டம் முழுவதும் கால்நடையாகவே சென்று நற்செய்தி யை பறைசாற்றினார். அவ்வாறு மலைப்பகுதியில் சென்று நற்செய்தி போதிக்க சென்றபோது, மலை யிலிருந்து ஒரு பெரிய கல் அவரின் மீது விழவே, அதே இடத்திலேயே உயிர் துறந்தார்.

செபம்:
நற்செய்திக்கு சான்று பகரவே வந்தேன் என்று மொழிந்த இறைவா! நற்செய்தியின் மீது கொண்ட தாகத்தாலும், உம்மீது கொண்ட அன்பாலும் புனித விஜிலியஸ் தன் உயிரை நீத்தார். நாங்களும் நற்செய்தி யின் மீது ஆர்வம் கொண்டு, வார்த்தைகளை வாழ்வா க்கி வாழ்ந்திட இறைவா உம் வரம் தாரும்.

Friday, 24 June 2016

இன்றைய புனிதர் 2016-06-25 புனித.டோரட்டீ (St.Dorothea of Montau)

                                     


                    இன்றைய புனிதர் 2016-06-25
          புனித.டோரட்டீ (St.Dorothea of Montau)
                  
பிறப்பு  6 பிப்ரவரி 1347 ஒஸ்ட்புராய்சன், Germany

இறப்பு 25 ஜூன் 1394 மரியன்வேர்டர், Marienwerder

இவர் ஓர் விவசாய குடும்பத்தில் மகளாக பிறந்தார். தனது 16 வயதில் திருமணம் செய்தார். திருமண வா ழ்வில் ஓர் எடுத்துக்காட்டான வாழ்வு வந்தார். கணவ ருக்கு நல்ல மனைவியாகவும், குழந்தைகளுக்கு அ ன்பான, பண்பான தாயாக திகழ்ந்தார். தனது 44 ஆம் வயதிலேயே தன் கணவர் இறந்ததால், தான் பிறந்த ஊரில் இருந்த ஆலய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி க்கொண்டார். மரியன்வேர்டர்(Marienwerder) என்ற ஊரி லிருந்து பேராலயத்தில் Reklusin பணியையும், ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். உதவி கேட்டு வந்த எல்லா தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற உத வியை செய்து, ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளியே ற்றினார். இவர் இறைவனிடமிருந்து பலமுறை தரிச னம் பெற்றதாக இவரின் பாவசங்கீர்த்தன ஆன்ம குரு கூறுகிறார். மனதாலும், உடலாலும் துன்பப்படுகிறவ ர்களும், தேர்வில் வெற்றி பெறுவதற்கும் இவர் துணை யாக இருந்து இறைவனிடம் பரிந்து பேசினார். இவை களில் எப்போதும் நற்பலன்களையும் பெற்றார். இவர் பொறுமையின் சிகரம் என்றழைக்கப்பட்டார்.

செபம்:
அன்பான இறைவா! இன்றைய குடும்பவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் உம் பதம் அர்ப்ப ணிக்கின்றோம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அன்பு செய்து, மன்னித்து, ஏற்றுக்கொண்டு வாழ நீர் அருள்புரியும், திருக்குடும்பத்தைபோல எமது குடும்பங்களும் திகழ நீர் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2016-06-24 திருமுழுக்கு யோவானின் பிறப்பு (The birthday of John the Baptist)

                     

               இன்றைய புனிதர்  2016-06-24

                      திருமுழுக்கு யோவானின் பிறப்பு

                              (The birthday of John the Baptist)

இவரது பிறப்பை லூக்கா நற்செய்தியாளர் முன்னறி வித்தார். யோவானின் தாய் எலிசபெத் கருவுற இயலா தவர். இவரும் செக்கரியாவும் வயது முதிர்ந்தவர்கள். வானதூதர் யோவானின் பிறப்பை செக்கரியாவிடம் அறிவித்தார்கள். ஆனால் அவர் ஆண்டவரின் செயலை நம்பவில்லை. அது நிறைவேறும் வரை அவர் பேச இய லாதவராக தண்டனை பெற்றார். கருவுற்றிருந்த எலிச பெத்தை அவரின் உறவினரும் தெய்வ வல்லமையால் கருவுற்றருந்தவருமான மரியா சந்தித்தார். மலை நாடு களை கடந்து முதன்முறையாக மறைபரப்பு பணியாள ராக எலிசபெத்திடம் நற்செய்தி அறிவித்தார். எலிச பெத் மரியாவின் வாழ்த்துரையை கேட்ட நேரத்தில், அவள் வயிற்றினுள் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளிற்று. (லூக். 1:42-44). மறைவல்லுநர்கள் இந்நிகழ்ச்சி யின் மூலம் மீட்பர் இயேசுவின் வருகையினால் தாயின் வயிற்றிலிருந்த யோவான் பாவ மீட்பு பெற்று புனிதரா க்கப்பட்டார் என்பார்கள். திருமுழுக்கு யோவான் பிற ந்தபின் இறைவனால் குறிக்கப்பட்ட நாட்களில் பாலை நிலத்தை நாடி மீட்பரின் வழியை ஆயத்தம் செய்யவும், பாவ மன்னிப்பு அடைய மனம் மாறி திருமுழுக்கு பெறவும், மக்களை ஆயத்தம் செய்கிறார். (மாற்கு 1:2-43)

திருமுழுக்கு பெற வந்த கூட்டத்தினரில் ஒருவராக மீட்பர் இயேசுவும் வருகிறார். தாமும் திருமுழுக்கு பெற வேண்டும் என்று இயேசு கேட்கும்போது யோவான் பதறி போகின்றார். இவரின் ஆழமான தாழ்ச்சியும் இறை இயேசுவிடம் கொண்டிருந்த வணக்கமும் இவரது சொற்களில் மிளிர்கின்றன. அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க கூட எனக்கு தகுதியில்லை (மாற்கு 1:7). யோவான் நற்செய்தியாளரும் இதே மனப்பான்மையை வெளிக்கொணருகின்றார். எனக்கு பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரை பற்றியே சொன்னேன் என உரத்த குரலில் சான்று பகிர்ந்தார். (யோவான்1:5)

யோவானின் சீடர்கள் ரபி, யோர்தான் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே, நீரும் அவரை குறித்து சான்று பகர்ந்தீரே, இப்போது அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடம் செல்கின்றனர் என்றார்கள் அப்போதும் யோவானின் பதில் அவரது ஆழமான ஆன்மீகத்தை காட்டுகின்றது. "நான் மெசியா அல்லேன், மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு மறைய வேண்டும் (யோவான் 3:25-30). இவருடைய சீடர் இவருக்கு மிகப்பெரிய இறைவாக்கினருக்குரிய மதிப்பு கொடுத்து நடந்து வந்தபோது, நான் மறையவேண்டும், அவர் வளரவேண்டும் என்ற பதில் அவரது ஆழமான தாழ்ச்சியை வெளிக்கொணர்கிறது.

இவ்வாறு எந்த அளவுக்கு தம்மையே அவர் தாழ்த்தினாரோ அந்த அளவுக்கு அவரை எல்லார் முன்னிலையிலும் இயேசு வானளாவ உயர்த்திவிட்டார். இறைவனின் பணியை செய்யும்போது இவரிடத்தில் வெளிப்பட்ட மனத்துணிவையும், முகத்தாட்சண்யம் இன்மையும் நாம் நினைவு கூர்வோம். இவர்தம் உயிரை நீதிக்காக தியாகம் செய்கின்றார். யோவான் ஏரோதிடம், நீர் அவளை (பிலிப்பின் மனைவியை) வைத்திருப்பது முறையன்று என்று சொல்லி வந்தார். இதன் விளைவாக, யோவான் சிறையிலடைக்கப்பட்டார். அவரது தலை கொய்யப்பட்டது. (மத். 14: 1-12)

புனித அகஸ்டின் இத்திருநாளுக்குரிய கட்டளை செபத்தில் இவ்வாறு விளக்கம் தருகின்றார். செக்கரியா, யோவானின் பிறப்புக்குப்பிறகு மீண்டும் பேசும் ஆற்றல் பெற்றார். இதனையும், கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்டபொழுது ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்ததையும் அகஸ்டின் இணைத்து பார்க்கிறார். திருமுழுக்கு யோவான் தமது வருகை பற்றியே அறிவித்திருந்தால், செக்கரியாவுக்கு மீண்டும் பேச நாவன்மை கிடைத்திருக்காது. நா கட்டவிழ்க்கப்பட்டதனால் குரலுக்கு வழிபிறந்தது. "நீர் யார்" என்று யோவானை கேட்டபோது " பாலைவனத்தில் எழும் குரலொளி நான்" என்றே விடையளிக்கின்றனர். யோவானின் குரல் சிறிது காலத்திற்கே நீடித்தது. வார்த்தையாம் கிறிஸ்து என்றென்றும் உள்ளவர்.


செபம்:
இரக்கத்தின் இறைவா! உண்மையை உரைத்ததற்காக யோவான் தன் உயிரை ஈந்தார். இவரை போல இன்று ஏராளமான இறைப்பணியாளர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். இவர்களின் பாவங்களை மன்னித்து, உம் வான் வீட்டில் சேர்த்தருளும்.

Thursday, 23 June 2016

இன்றைய புனிதர் 2016-06-23 புனித. எத்தல்டிரேடா (St.Etheldreda) இங்கிலாந்து நாட்டு பாதுகாவலர், துறவி


இன்றைய புனிதர் 2016-06-23

புனித. எத்தல்டிரேடா (St.Etheldreda)

                 இங்கிலாந்து நாட்டு பாதுகாவலர், துறவி                            

                       பிறப்பு 635

                         இறப்பு 23 ஜூன் 679

இவர் ஓர் அரசர் குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவ ரின் தாய் ஒஸ்டான்கிளியன்(Ostanglion) என்ற நாட்டின் அரசி அன்னா. இவரின் தந்தை ஸ்காட்லாந்து நாட்டி ன் அரசர் டோண்ட்பெர்த்(Tondberth). இவரின் இளம் வய திலேயே இவர் தந்தை இறந்துவிட்டார். இதனால் இவ ரும், தாயும் "ஏலி"(Ely) என்ற தீவுக்கு சென்றார்கள். தனது 25 ஆம் வயதில் அரசியல் வாழ்வில் தன்னை ஈடுபடுத்த வற்புறுத்தப்பட்டார். இதனால் 15 ஆண்டு கள் அரசியலில் வாழ்ந்த இவர் வட உம்பிரியன்(North Umbrien) நாட்டை சேர்ந்த அரசருக்கு திருமணம் செ ய்துவைக்கப்பட்டார். திருமண வாழ்வில் ஈடுபாடு இ ல்லாத எத்தல்டிரேடா தன் கணவரை விட்டு பிரிந்தார். 12 ஆண்டுகள் தன் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர், துறவற வாழ்வில் ஈடுபட விரும்பி, ஓர் துறவற இல்லம் நோக்கி சென்றார். உம்பிரியன் நாட்டு ஆயர் வில்பரட் (Wilfried) அவர்களின் உதவியுடன் ஓர் துறவற இல்ல த்தில் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து தான் வா ழ்ந்த ஏலி தீவின்மேல் அளவுக்கு அதிகமான நினைவு வரவே, தீவிற்கு திரும்பி சென்றார். அப்போது அவ ரின் கணவர் இறந்துவிடவே, தன் நாட்களை அத்தீவி லேயே கழித்தார். 673 ஆம் ஆண்டு ஏலி தீவில் இரண்டு துறவற இல்லங்களை கட்டினார். இதுவே சில ஆண்டு கள் கழித்து பெண்களுக்கென்று தொடங்கப்பட்ட முதல் துறவற இல்லமானது. இவரே அத்துறவற இ ல்லத்தின் முதல் துறவி என்ற பெயரையும் பெற்றார். தன்னைமுழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்த எத்தல்டிரேடா, தான் தொடங்கிய இல்லத்திலேயே இறந்தார். இவர் இறந்தபிறகு இவரின் கணவர் புதை க்கப்பட்ட கல்லறையிலேயே அடக்கம் செய்யப்ப ட்டார். இறந்த 16 ஆண்டுகள் கழித்து இவரின் கல்ல றையின் மேல் அத்துறவற இல்லத்தின் ஆலயம் கட்ட ப்பட்டது.

செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்து, மனிதர்களாக வாழ்ந்து, தங்களின் வாழ்க்கையால் புனிதராக வாழ்ந்தவர்க ளைப்போல், நாங்களும் உம்மீது நம்பிக்கை, விசுவாசம் கொண்டு, உம்மை எம் வாழ்வில் பிரதிபலிக்க உம் அருள் தாரும்.

Wednesday, 22 June 2016

இன்றைய புனிதர் 2016-06-22 புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus) ஆயர்

                   
                  இன்றைய புனிதர் 2016-06-22
புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus)
                                           ஆயர்

பிறப்பு 355 போர்தோ(Portho), பிரான்ஸ்

இறப்பு 22 ஜூன் 431

இவர் பிரான்ஸ் நாட்டில் ஓர் உயர்குடியில் தோன்றிய வர். இவர் தமது 25 ஆம் வயதிலேயே திறமைமிக்க பே ச்சாளராகவும், கவிஞராகவும் விளங்கினார். அரச அவைக்கு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்ப ட்டார். வலண்டீனியன் என்ற அரசன் இவரை கம்பா ஞ்ஞா(Companiya) மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தார். இவர் மெய்மறையில் சேர்வதற்கு முன்னரே, திரேசியா என்ற ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர் 385 ஆம் ஆண்டு திருமுழுக்கு பெற்றார். அந்த ஆ ண்டில் அவரது ஒரே மகன் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டான். இதனால் நோலா பவுலீனுசும், அவரது மனைவி திரேசாவும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர். அங்கே பார்சலோனா நாட்டு மக்கள் அவருடைய ப க்தியை அறிந்து, குருத்துவத்தை தேர்ந்து கொள்ள தூ ண்டினர். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரி வித்தார். இருவரும் தங்களது உடைமைகள் அனை த்தையும் விற்றுவிட்டு, ஏழைகளுக்கு பகிர்ந்துகொடு த்தனர்.

பின்னர் பவுலீனூஸ் குருத்துவத்தை தெரிந்து கொ ண்டார். இதனால் அவரின் மனைவி மிலான் நாட்டிற்கு சென்று, அங்கு ஆயர் அம்புரோசை சந்தித்து, அவரின் அறிவுரைப்படி திரேசியாவும் ஓர் துறவற மடத்திற்கு சென்றார். துறவறத்தில் 20 ஆண்டுகள் திருப்பணியை திறம்பட செய்தார். பவுலீனுஸ் பேய்களை ஓட்டும் வ ல்லமை பெற்றிருந்தார். இவரை போல ஒரு புனிதத்துவ வாழ்வை எவராலும் வாழ முடியாது என்று புனித அகஸ்டின், புனித ஜெரோம், புனித அம்புரோஸ் ஆகி யோர் தங்களின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். புனித மார்ட்டின் இவரை, இயேசுவின் நல்லாயன் இவரே என்று குறிப்பிட்டுள்ளார்.


செபம்:
அதிசயமானவரே எம் இறைவா! நீர் புனித பவுலீனுசை திருமண வாழ்வில் ஈடுபடுத்தியபின், உம் குருத்துவ வாழ்விற்கு தேர்ந்தெடுத்துள்ளீர். உமது புனிதத்துவ வாழ்வை அவரின் வழியாக இவ்வுலகிற்கு வெளிப்படு த்தியுள்ளீர். இதோ இன்றைய நாளில் திருமணம் செய்த ஒவ்வொருவரையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். குடும்ப வாழ்வில் ஒருவரையொருவர் புரிந்து, சந்தோச த்துடனும், சமாதானத்துடனும் வாழ, நீர் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 20 June 2016

இன்றைய புனிதர் 2016-06-21 புனித அலோசியஸ் கொன்சாகா(St. Aloysius Gonzaga) இளைஞர்களுக்கு பாதுகாவலர் , துறவி

                     

             இன்றைய புனிதர் 2016-06-21

புனித அலோசியஸ் கொன்சாகா(St. Aloysius Gonzaga)

இளைஞர்களுக்கு பாதுகாவலர் , துறவி

பிறப்பு 1568மாந்துவா, இத்தாலி

இறப்பு1591மாந்துவா, இத்தாலி

புனிதர்பட்டம்: 1726, திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட்

இவர் ஓர் அரச குலத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, இவர் பேரும் புகழும் உள்ளவராக பிற்காலத்தில் திகழ வேண்டுமென விரும்பி, போர் வீரர்களின் தலைவரா கும் பயிற்சியை அலோசியசிற்கு கொடுத்தார். ஆனால் இவரின் தாய் ஊட்டிய சத்துள்ள ஞானப்பாலின் விளை வாக பிளாரன்ஸ் நகரில் ஒன்பது வயதிலேயே மரிய ன்னையின் பேராலயத்தில் கற்பு என்னும் வார்த்தை ப்பாட்டை இவர் எடுத்துக்கொண்டார். வாரத்தில் 3நா ட்கள் கடுந்தவம் மேற்கொண்டார். பல கடுமையான ஆன்மீக தவ முயற்சிகளையும் செய்து வந்தார். 13வய தில் இவர் தம் பெற்றோருடன் ஸ்பெயின் நாட்டிற்கு செ ன்றார். அங்கே 2ஆம் பிலிப்புவின் அரச அவையிலேயே முழு நேரம் தங்கினார், அரச குல மக்களில் ஒருவரா கவே நடத்தப்பட்டார். அங்கே நிலவிய சீர்கேடுகளில் சிக்காமல் இருக்க கடுமையான முயற்சிகளை மே  ற்கொண்டார். இவ்வேளையில் இயேசு சபையினர் இந்தியாவிற்கு சென்று நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபாடு பற்றிய நூல் ஒன்று கிடைத்தது. அதை வாசித்த அவர் இயேசு சபையில் சேர எண்ணினார். இதனிடயே தன் தந்தையுடன் 4 ஆண்டுகள் பனிப்போராட்டம் நடத்தினார். இருப்பினும் மகனின் முடிவை தந்தை ஏற்க மறுத்தார். ஆனால் அலோசியஸ் இப்போரில் வெற்றி பெற்று, தனக்கு வரவேண்டிய சொத்தையெல்லாம் தன் தம்பியின் பெயரில் எழுதிவைத்தார்.
1587 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். பின்னர் குரு மாணவராக படிக்கும்போது, பிளேக் நோயாளிக்கு உதவி செய்து, தானும் அந்நோயால் பாதிக்கப்பட்டார். அச்சூழலில்தான் அக்கொடிய நோயால் தாக்கப்பட்டு இறந்தார். அப்போது அவரின் வயது 23. இளம் வயதிலேயே ஏராளமான புண்ணியங்களை செய்து வான்வீட்டிற்கு தயார் நிலையில் தன்னை ஆக்கிக்கொண்டார்.

இயேசு சபையில் புனிதராகவும், மறைவல்லுநராகவும் வாழ்ந்த புனித இராபர்ட் பெல்லார்மின் தான் இவரின் ஆன்ம குருவாய் இருந்தார். ஒருமுறை அலோசியசிடம் இவர் ஓர் ஆன்மா, உத்தரிக்கும் வேதனை அடையாமலேயே நேராக பேரின்பம் பெறமுடியும் என்று கூறினார். இதை கேட்ட அலோசியஸ் பரவசமடைந்தார். அந்நேரத்தில் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு பின்னர் தான் இறக்க போவதாக உணர்ந்தாராம். அவ்வாறே "தெ தேயும்" என்ற நன்றி பாடலை இசைத்துக்கொண்டே தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார். அலொசியஸ் தனது 23 ஆண்டுகால வாழ்வில் ஒருமுறை கூட சாவான பாவத்தில் விழவில்லை என்று அவரின் ஆன்ம குரு கூறியுள்ளார்.


செபம்:
குணப்பளிப்பவரே இறைவா! இதோ எம் சமுதாயத்தில் பிளேக் நோயால் பாதிக்கப்படும் மக்களை உம் பாதம் சமர்ப்பின்றோம். அவர்களின் நோயை நீரே குணமாக்கியருள வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம். இவர்களை பராமரிக்கும் அனைவருக்கும் நல்ல உடல் உள்ள நலன் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Sunday, 19 June 2016

இன்றைய புனிதர் 2016-06-20 புனித.மர்கரீத் எப்னர்(St.Margarete Ebner)

                  
               இன்றைய புனிதர் 2016-06-20
  புனித.மர்கரீத் எப்னர்(St.Margarete Ebner)

பிறப்பு1291டோனவ்வோர்த்(Donauworth), அவுக்ஸ்பூர்க்(Augsburg)

இறப்பு 20 ஜூன் 1351

தில்லிங்கன் என்ற ஊரில் இவருக்கென்று ஓர் ஆலயம் உள்ளது. அங்குதான் இவர்தான் இறுதி நாட்களை கழி த்துள்ளார். பலவித கலாசாரத்தை கொண்ட மக்களிட த்தில் இவர் பணியாற்றினார். இவர் தனது 15 ஆம் வய தில் புனித டொமினிக்கன் சபையில் சேர்ந்து துறவியா னார். அவர் அச்சபையில் வாழ்ந்தபோது 1312 ஆம் ஆ ண்டிலிருந்து தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆண்டவரின் காட்சிகளை பலமுறை கண்டார். இவர் மிகவும் கடு மையான நோயால் தாக்கப்பட்டு, படுக்கையிலேயே தன் வாழ்நாட்களை கழித்தார். நோயால் மிகவும் வேத னைக்குள்ளானார். இதனால் இறைவனின்மீது தன் முழு நம்பிக்கையையும் வைத்து, இடைவிடாது செபி த்தார். ஆண்டவரின் பாடுகளில் அவ்வப்போது பங்கெ டுத்தார். இவரின் ஆன்ம வழிகாட்டி தந்தை ஹென்றி அவர்களின் அறிவுரைப்படி, தொடர்ந்து ஆண்டவரின் பாடுகளில் பங்கெடுத்தார். ஒருநாள் ஆண்டவர் கொடு த்த காட்சியை கண்டுகொண்டிருக்கும்போதே, தன் கண்களை மூடியபடியே உயிர் நீத்தார். இவர் இறந்த பிறகு இவரின் கல்லறையை எண்ணிலடங்கா மக்கள் சந்திக்க வந்தனர். அங்கு வந்த அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் புதுமைகளை செய்தார். இவர் இறந்த சில ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறைமேல் இயேசு கிறிஸ்துவின் உருவம் கொண்ட ஒரு சுரூபம் தானாகவே வளர்ந்தது. 1751 ல் சாதாரணமாக இருந்த இவரின் கல்லறைமேல் 1751-1755 வரை ஓர் ஆலயம் கட்ட ப்பட்டு, இன்றும் அவ்வாலயத்தில் அவரின் பெயரால் வழிபாடுகள் நடக்கின்றது.

செபம்:
குணமளிப்பவரே எம் தந்தையே இறைவா! இவ்வுலகில் நோயினால் வாடும் மக்களை நீர் கண்ணோக்கியரு ளும். தங்களின் நோய்களை தாங்கும் உடல் பலத்தை யும், மனபலத்தையும் தந்து, வாழ்வில் மீண்டும் புத்து யிர் பெற்று வாழ நீர் வரம் தந்து வாழ்வை அளிக்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Saturday, 18 June 2016

இன்றைய புனிதர் 2016-06-19 புனித ரோமுவால்ட் (St.Romuald ) ஆதீனத் தலைவர்



இன்றைய புனிதர்
2016-06-19

புனித ரோமுவால்ட் (St.Romuald )
ஆதீனத் தலைவர்

பிறப்பு19 நூற்றாண்டு இறுதி
ராவென்னா(Ravena), இத்தாலி

இறப்பு19 ஜூன் 1027

இவர் ஓர் அரச குலத்தில் தோன்றியவர். இவர் தம் 20 ஆம் வயது வரை மனம் போன போக்கில் வாழ்ந்தார். ஒருமுறை இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரில் கொன்று போட்டார். இதற்கு பரிகாரமாக புனித ஆசீ ர்வாதப்பர் சபை ஒன்றில் சேர்ந்து, கடும் தவம் புரி ந்தார். அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது. இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி , முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் பிரன்னீஸ்(Franis) மலைப்ப குதியிலும் ஜெப, தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் வட இத்தாலி, தென் பிரான்சு, தென் ஸ்பெயின் பகுதிகளிலும் துறவு மடங்க ளில் ஒழுங்குமுறைகளை பற்றுறுதியுடன் கடைபிடிக்க வழிகாட்டியாக திகழ்ந்தார்.

தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்துகொடு த்தார். அவற்றில் ஒரு மடம் மட்டுமே கமல்டொலி (Kamaldoli)என்ற இடத்தில், அப்பினைன்(Apinain) என்ற மலையுச்சியில் 1012 ஆம் ஆண்டு 5 குடிசைகள் கொண்ட தாக அமைந்தது. புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபை யை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் கமல்டொலில் நிறுவப்பட்ட மடம்தான், கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவற சபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலை திருச்சபையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றை பெ  ற்றுக்கொண்டு அங்கே மௌனம் , தனிமை, இவற்று க்கிடையே இறை பணிபுரிந்தார். வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்தார். இவர் உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும், ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார். அமை தியும், கடுந்தவ முயற்சியும்தான் இச்சபையின் சிறப்பு க் கூற்றுகளாக அமைந்திருந்தது. 1086 ஆம் ஆண்டிலிரு ந்து, பெண்களுக்கும் அவரவர்களின் நிலைக்கேற்ப "கமல்டொலிஸ்" மடங்கள் தொடங்கப்பட்டது. இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையில் பல புதுமைகள் நடந்தவண்ணமாய் இருந்தது. இதனால் இவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இவர் கல்லறையின்மேல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது.


செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! புனித ரோமுவால்ட் அரசர் குலத்தில் பிறந்தபோதும், ஆடம்பர வாழ்வில், தன் வாழ்வை வாழாமல், கடுமையான செப, தவ வாழ்வை வாழ்ந்து உமக்குரிய நல்ல சீடனாக திகழ்ந்தார். நாங்களும் எங்களின் அன்றாட வாழ்வில் ஏழையாக வாழ்ந்து உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள உம் வரம் தாரும்.

இன்றைய புனிதர் 2016-06-18 ஸ்ஷோனவின் புனித எலிசபெத் (Elisabeth of Schönau) துறவி


                 

                இன்றைய புனிதர் 2016-06-18

         ஸ்ஷோனவின் புனித எலிசபெத்

                 (Elisabeth of Schönau) துறவி

பிறப்பு 1128 பிங்கன், ரைன்

இறப்பு 18 ஜூன் 1164 ஸ்ஷோனவ்

சிறுவயதிலிருந்தே இறைவனிடத்தில் மிகவும் பக்தி கொண்ட இவர், தம் 12ஆம் வயதிலேயே ஸ்ஷோனவ் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். தனது 18 ஆம் வயதில் வார்த்தைப்பாடுகளை கொடுத்து துறவியானார். குழந்தை பருவத்திலிருந்தே தன்னை இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்ந்தார். இவர் பிறந்த ஊரிலிருந்த அனைவரிடத்திலும், மிகவும் அன்பாகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.

இளம் வயதிலேயே துறவியான இவர் மன நோய்க்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மிகவும் பயத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வந்தார். 1152 ஆம் ஆண்டிலிருந்து எலிசபெத், இறைவன் தரும் அருளை காட்சியாக பெற்றார். அவ்வாறு பலமுறை இறைவனின் காட்சியை பெறும்போது, ஒருநாள் மிகுந்த அச்சம் இவரை ஆட்கொண்டது, அன்று அவரை சுற்றி பேரோளி ஒன்று வீசியது. அப்போது அவர் மிகச் சரளமாக, தடுமாற்றம் இல்லாமல் அன்னிய மொழியான இத்தாலி மொழியை பேசினார். இம்மொழியை அவர் எப்போதும் கற்றுக்கொண்டதே இல்லை. எலிசபெத்தின் உடன்பிறந்த அண்ணன் ஏக்பர்ட்(Egbert Schönau) துறவியாக இருந்தார். இவர் எலிசபெத் கடவுளிடமிருந்து பெற்ற ஒவ்வொரு தரிசனத்தையும் தன் கைப்பட எழுதி வைத்துள்ளார். தான் இறைவனிடம் இருந்து பெற்ற தரிசனங்களின் வழியாக இவர் ஏராளமான மக்களுக்கு நன்மை செய்து, வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.


செபம்:
அதிசயம் செய்பவரே எம் தந்தையே! நீர் பல அதிசயங்களை உம் மக்களுக்கு செய்து, உம் மக்களை குணமாக்கினீர். வழிநடத்தினீர். எங்களின் வாழ்வில் நீர் செய்கின்ற அற்புதங்களை நாங்கள் உணர எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்தருளும்.

Friday, 17 June 2016

இன்றைய புனிதர் 2016-06-17 புனித ராம்வோல்டு (St.Ramwold) துறவி

               

           இன்றைய புனிதர் 2016-06-17

           புனித ராம்வோல்டு (St.Ramwold)

                                        துறவி

பிறப்பு 901செயிண்ட் எம்மரெம்(St.Emmeram), ட்ரியர்(Trier), ஜெர்மனி

இறப்பு17 ஜூன் 1000 செயிண்ட் எம்மரெம், ட்ரியர்

இவர் செயிண்ட் எம்மரெம் என்ற தான் பிறந்த ஊரிலி லேயே தன்னை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய முதல் துறவி என்ற பெயர் பெற்றார். துறவியான 25 ஆண்டுகளில் தன் இரத்தத்தை ஈந்து, பல துறவிகளை உருவாக்கினார். துறவிகளுக்கென்று செயிண்ட் எம்ம ரெமில் ஓர் இல்லத்தையும் தொடங்கினார். பின்னர் பல துறவறமடங்களையும், பல ஆன்மீக வழிகாட்டும் இல்ல ங்களையும் தொடங்கினார். பின்னர் 739 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க்கில்(Regensburg) ஆயராக இருந்த வோ ல்ப்காங்க்(Wolfgang) அவர்களால் ராம்வோல்டு அவர்கள் தொடங்கிய துறவற இல்லம் "புனித பெனடிக்ட் துறவற சபை" என்ற பெயர் வழங்கப்பட்டது. அதன்பிறகு 975ல் ரேகன்ஸ்பூர்க்கிலும் புனித ராம்வோல்டு புனித பெனடி க்ட் சபையை தொடங்கினார்.

பல ஆண்டுகள் ராம்வோல்டு ரேகன்ஸ்பூர்க்கிலிருந்த துறவற இல்லத்தில் தன் இறுதி நாட்களை கழித்து காலமானார். இவரின் கல்லறை அத்துறவற இல்லத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. சில வருடங்கள் கழித்து அவரின் கல்லறைமேல் ரிங் வடிவத்தில் ஒரு கெபி கட்டப்பட்டுள்ளது. இவருக்கென்று செயிண்ட் எம்மரெமில் ஓர் பேராலயமும் கட்டப்பட்டுள்ளது. செயிண்ட் எம்மரெம்மில் இவரின் வழியாகத்தான் துறவிகளும், துறவற சபைகளும் தோன்றியது.


செபம்:
"அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு" என்று மொழிந்த எம் இறைவா! அன்று நீர் துறவறத்தை இன்றைய நாள் புனிதரின் வழியாக அறிமுகப்படுத்தினீர். இன்று துறவற வாழ்வுக்கென்று தங்களை அர்ப்பணிக்க பல இளைய பெண்களும், ஆண்களும் முன்வருவதில்லை, இந்நிலையை நீர்தாமே அகற்றி, உம் பணியை தொடர்ந்து இவ்வுலகில் ஆற்ற தேவையான வேலையாட்களை தந்தருளுமாய் உம்மை வேண்டுகிறோம்.

Wednesday, 15 June 2016

இன்றைய புனிதர் 2016-06-16 புனித.பெனோ(St.Benno) ஆயர்(Bishop)


இன்றைய புனிதர் 2016-06-16
புனித.பெனோ(St.Benno)
ஆயர்(Bishop)

பிறப்பு1010ஹில்டஸ்ஹைம் Hildesheim, Germany)

இறப்பு 16 ஜூன் 1106 பாதுகாவல்: பவேரியா(Bayern) & டிரேஸ்டன்(Dresden) மறைமாநிலத்தின் பாதுகாவலர்

இவர் ஷேக்கிசிஸ்(Sächsische) நாட்டு தம்பதிகளின் மக னாக பிறந்தார். 1040 ஆம் ஆண்டு குருவாக திருநிலை ப்படுத்தப்பட்டார். பின்னர் ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கிருந்து மீண்டும் கோஸ்லர்(Goslar) என்ற ஊருக்கு பணிக்கு மறைபரப்பு பணிக்காக சென்று, 17 ஆண்டுகள் அப்ப ணியை செய்தார். அங்கு பணிபுரியும்போது, ஜெர்மனி யிலுள்ள டிரேஸ்டன் மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயரானபிறகு அம்மறைமாவ ட்டத்தில் பல ஆலயங்களையும், துறவறமடங்களையும் தொடங்கினார். ஏராளமான மக்களை இறைவன்பால் மனமாற்றி ஈர்த்தார். அப்போது சாக்சன் (Sachsen) நாட்டு அரசர் நான்காம் ஹென்றி ஆயருக்கு எதிராக போ ர்தொடுத்தான். இப்போரில் 1075-76 ஆம் ஆண்டு வரை ஆயரை அரசன் சிறைபிடித்து சென்று, தன் விருப்ப ப்படி அம்மறைமாநிலத்திற்கு வேறு ஒரு புதிய ஆயரை தேர்ந்தெடுத்தான். ஆனால் புதிய ஆயர் நீண்ட நாள் அப்பதவியில் நீடிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் பெனோ அவர்களே மீண்டும் தனது ஆயர் பொறுப்பை ஏற்றார். அப்போது அவர் பேராலய த்திற்கென்று ஓர் திறவுகோலை தயாரித்து, அத்திறவுகோலை எல்பே (Elbe) என்ற மாவட்டத்திலுள்ள ஓர் பேராலயத்தில் வைத்துவிட்டு, தன் ஆயர் பதவியிலிருந்து விலகினார். அத்திறவுகோலில் ஓர் மீனின் வயிற்றில் நதி ஓடுவதை போல செய்யப்பட்டிருந்தது. இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து புனிதர்பட்டம் பெற்றபிறகு அரசர் ஐந்தாம் ஆல்பிரட்(Albrecht V) அவர்கள் இப்புனிதரின் கல்லறையை பவேரியா மறைமாவட்டத்திற்கு மாற்றினார். இன்றும் பவேரியாவில் இவர் பெயரால் புதுமைகள் நடந்துக்கொண்டிருக்கின்றது.

செபம்:
தியாகத்தின் மறு உருவே எம் இறைவா! கிறிஸ்துவத்தை ஜெர்மனி மண்ணில் பரப்பி, உமக்காக பல சிலுவைகளை சுமந்த புனித பெனோவிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம், அவர் காட்டிய வழியில் சென்ற எம் முன்னோர்களை பின்பற்றி நாங்கள் என்றென்றும், உம்மை எம் வாழ்வில் பிரதிபலிக்க உம் அருள் தந்து எம்மை காத்தருளும்.

இன்றைய புனிதர் 2016-06-15 புனித.பெர்னார்டு (Bernhard of Aosta) பாதுகாவல்: மலை ஏறுபவர்களுக்கும், ஆல்ப்ஸ் மலைவாழ் மக்களுக்கும்

                    

              இன்றைய புனிதர் 2016-06-15

                      புனித.பெர்னார்டு (Bernhard of Aosta)

பாதுகாவல்: மலை ஏறுபவர்களுக்கும், ஆல்ப்ஸ் மலைவாழ் மக்களுக்கும்
இறப்பு  15 ஜூன் 1008 நோவரா(Novara)
புனிதர்பட்டம்: 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் ஓர் சாதாரண குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் இறையியலையும், மெய்யியலையும், திருச்சபை சட்டங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரது பெற்றோர் இவரின் கல்லூரி படிப்பை முடித்தபின், பணக்கார பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க எண்ணி னார். ஆனால் பெர்னார்டு இதை வெறுத்தார். இவரின் மனம் எப்போதும் ஆன்மீக வாழ்வையே நோக்கி செ  ன்றது. இதனால் தன்னுடைய மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சேர்ந்து பணியாளராக செயல்பட்டார். இவரின் பணியால் அம்மறைமாவட்ட மக்கள் ஏரா ளமான பயனை பெற்றனர். இவர் இறக்கும் வரை மறைமாவட்ட குருக்களின் கல்லூரியில் பணியாற்றி னார். இவர் 1008 ல் அல்லது 1009 ல் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவர் நோவரா என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, அவர் கல்லறையின் மேல் பேராலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பின்னர் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் இவர் நோயாளிகளை பராமரிப்பதற்கென ஓர் இல்லம் தொட ங்கினார். நாளடைவில் இவ்வில்லத்தை புனித அகுஸ்தி னார் சபையை சார்ந்தவர்கள் கைப்பற்றினர். இப்போது அந்நாடுகளுக்கு சுற்றுலாவிற்கு வரும் மக்கள் அவ்வில்லத்தில் இலவசமாக தங்கி, தங்களின் சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.

செபம்:
அன்பான இறைவா! புனித பெர்னார்டு இறைவன் மேல் தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். நாங்களும் எங்களின் சொல், செயல், சிந்தனைகளில் உம்மை பற்றிக்கொண்டு, என்றும் உமக்குரியவர்களாக வாழ வரம் தாரும்.

Monday, 13 June 2016

இன்றைய புனிதர் 2016-06-14 புனித.ஹாட்விக் ஆயர்

          

                   இன்றைய புனிதர் 2016-06-14

                             புனித.ஹாட்விக்

                                                              ஆயர்

பிறப்பு 955

இறப்பு14 ஜூன் 1023

இவர் ஜெர்மனி நாட்டிலுள்ள சால்ஸ்பூர்க் என்ற மறை மாநிலத்திற்கு ஆர்ச் பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டா ர். இவர் அரசர் 3ஆம் ஓட்டோ (Otto III) அவர்களுடன் நெரு ங்கிய நண்பராக இருந்தார். இதனால் தனது மறைமா நிலத்திற்கு தேவையான அனைத்து பொருளுதவிக ளையும் அரசரிடமிருந்து பெற்று, தன் மறைமாநில ம க்களின் வாழ்வில் ஒளியேற்றினார். 993 ஆம் ஆண்டில் சால்ஸ்பூர்க்கில், மறைமாநில பேராலயத்தை எழு ப்பி னார். பல பள்ளிகளையும், மறைமாநிலத்திற்கென்று சில நிறுவனங்களையும் கட்டினார். புனித பெனடிக்ட் சபைக்கென்று துறவற இல்லத்தையும் கட்டினார். இவர் காலரா போன்ற தொற்று நோய் உள்ள மக்களிடத்தில் பணியாற்றினார். அம்மக்களின் ஆன்ம வழிகாட்டி யாக திகழ்ந்தார். இவரின் எளிமையான பணியாலும், வாழ்வாலும் பல நோயாளிகளின் மனிதர் என்னும் ஒளி யேற்றி வாழ்வளித்தார். தொற்றுநோய் உள்ள மக்க ளிடையே பணியாற்றும் போது, அந்நோயால் தாக்க ப்பட்டு இருந்தார். அவரால் கட்டப்பட்ட சால்ஸ்பூர்க் பேராலயத்தில் அவரின் உடல் அடக்கம் செய்ய ப்ப ட்டது. 1598இப்பேராலயமானது தீப்பிடித்து எரிந்ததால் அவரின் உடலை கண்டெடுக்க முடியாமல் போனது.

செபம்:
ஏழைகளின் தோழனே இறைவா! புனித ஹாட்விக் ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். ஏழைகளின் தோழனாய் இருந்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்தார். தான் செய்த பணியின் வழியாக, தன் வாழ்வையே தியாகம் செய்து உயிர்நீத்தார். நாங்கள் எங்களால் இயன்றவரை, ஏழைகளோடு இருக்க, அவர்களுக்கு உதவிசெய்த எமக்கு வழிகாட்டி, உதவிசெய்தருளும்.

Sunday, 12 June 2016

இன்றைய புனிதர் 2016-06-13 புனித பதுவை அந்தோணியார்(St. Antony of Padua) மறைவல்லுநர்(Priest, Doctor of the Church)

                              

                    இன்றைய புனிதர் 2016-06-13

புனித பதுவை அந்தோணியார்(St. Antony of Padua)
மறைவல்லுநர்(Priest, Doctor of the Church)

பிறப்பு 1195லிஸ்பன், போர்த்துக்கல் (Lisbon, Portugal)

இறப்பு13 ஜூன் 1231

புனிதர்பட்டம்: 1232 மறைவல்லுநர்பட்டம்: 1946, திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்.

இவர் திருமுழுக்கு பெயர் பெர்டினாண்ட். இவர் கப்பு ச்சின் சபையில் சேர்ந்தபோது இவருக்கு முன்னோ டியாக விளங்கிய வனத்து அந்தோணியார் பெயராக தமது பெயரை மாற்றிக்கொண்டார். பிரபு குலத்தில் தோன்றிய இவர் 15 வயதில் அகஸ்டினியன் துறவியா னார். 8 ஆண்டுகள் கொயிம்பராவில் தவ முயற்சிகளி லும் வேதக்கல்வி கற்றுக்கொள்வதிலும் செலவழி த்தார். 1220 ஆம் ஆண்டில் மொரோக்கோவில் கிறிஸ்து வுக்காக குருதி சிந்தி உயிர் துறந்த பிரான்சிஸ்கன் துறவிகளின் உடல்களை டான்பேட்ரோ கொண்டு வந்த தை புனிதர் பார்த்தார். பார்த்தபிறகு அவருக்குள் தா மும் போய் இயேசுவுக்க்காக குருதி சிந்த வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்படவே, தற்செயலாக அவரது துறவு மடத்திற்கு வந்த கப்புச்சின் சபையாரிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினார். இதனால் 1221 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மொரோக்கோவுக்கு புறப்பட தம்மை தயாரித்து கொ ண்டார். புறப்படுமுன் கொடிய நோயினால் தாக்கப்ப ட்டு ஐரோப்பாவுக்கு திரும்பிவிட முயன்றார். ஆனால் அதற்கு மாறாக சிசிலியில் மெசினா நகருக்கு கப்பல் போய் சேர்ந்தது. நேரே அசிசி நகரை அடைந்தார். அ ப்போது போர்லி என்ற இடத்தில் ஒரு குருப்பட்டம் நிக ழவிருந்தது. அப்போது விழாவில் மறையுரை ஆற்ற ஒப்புகொண்டிருந்த டொமினிக்கன் சபைத் துறவி வர இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் மறையுரை ஆ ற்றும்படி நம் புனிதரை கேட்டுக்கொண்டனர். ஆனால் தன்னம்பிக்கையில்லாமலே அதற்கு ஒப்புக்கொ ண்டார், அவர் பேசத் தொடங்கியதும் அவரது திறமை, ஆழமான மறை நூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலே எழுப்பும் ஆற்றல் இவை அனை த்தையும் கேட்டவர் அனைவரையும் வியப்பில் ஆ ழ்த்தியது.

இதை நேரில் பார்த்த சபைத் தலைவர், லாம்பர்டி பகுதி முழுவதிலும் மறையுரை ஆற்றும் பணிப் பொறுப்பை அவரிடம் அளித்தார். அப்போது மறைக்கல்வியும் துறவிகளுக்கு அவர் கற்றுக்கொடுக்க வேண்டிய தாயிற்று. பாவிகள் நூற்றுக்கணக்கில் வந்து அவரிடம் அடைக்கலம் அடைந்தனர். பாறை மனம் கொண்ட பாவிகள், ஞான வாழ்வில் அக்கறை காட்டாதவர்கள், அவரை அணுகிய வண்ணம் இருந்தனர். இதனால் புனித அசிசியாரின் இறப்பிற்குப்பின் அந்தோணியார் இத்தாலிக்கு வரவழைக்கப்பட்டார். அதுமுதல் இறுதி  நாள் வரை பதுவையிலேயே அவர் தங்கினார். 1231 ஆம் ஆண்டு ஒரு காட்டுப்பகுதியில் தங்கி மறையுரை ஆற்றி வந்தார். அப்போது அவர் முற்றிலும் உடல் வலி மையிழந்து, சக்தியற்று காணப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு பதுவை நகருக்கு எடுத்து செல்ல ப்படும் வழியில் இறைவனடி சேர்ந்தார். தம் இறுதி நாட்களை இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் செல வழித்ததாலும், இவரின் கல்லறையானது இங்கே இருப்பதாலும், இவர் பதுவை அந்தோணியார் என்று அழைக்கப்படுகின்றார். இன்று திருச்சபையில் இவரை நினைவு கூறுவதற்கு முக்கிய காரணம், இவர் ஏழை களின் மேல் அளவற்ற அன்பும், இரக்கமும் கொண்டிரு ந்தார். இவர் பெயரால் இன்றும் ஏழைகளுக்கு பதுவை நகரில் உதவி செய்யப்படுகின்றது. இவர் இயேசுவின் மேல் கொண்ட அன்பால், குழந்தை இயேசுவே இவர் கைகளில் வந்து விளையாடியதாக கூறப்படுகின்றது. காணாமல் போன பொருட்களை கண்டுபிடிப்பதில் இவர் வல்லவர். இதனால் இன்றும் பல புதுமைகள் நடந்துக்கொண்டிருந்தது.


செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! மறைபரப்புப் பணியில் வல்லவராக திகழ்ந்து, ஏழைகளின் ந ண்பராக வாழ்ந்தார். புனித அந்தோனியார். நாங்களும் எம் சமுதாயத்தில் ஏழைகளை இனங்கண்டு, அன்பு செய்து, எங்களிடம் உள்ளதை பகிர்ந்து வாழ உம் அருள் தாரும். ஆமென்.

Saturday, 11 June 2016

இன்றைய புனிதர் 2016-06-12 புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni) சீன நாட்டின் விசுவாசத்தின் பாதுகாவலர்

                             

                 இன்றைய புனிதர் 2016-06-12

                 புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni)

                        சீன நாட்டின் விசுவாசத்தின் பாதுகாவலர்

பிறப்பு 1777 வெரோனா, இத்தாலி

இறப்பு 12 ஜூன் 1853 வெரோனா

முத்திபேறுபட்டம்: 1975, ஆறாம் பவுல்

கஸ்பார் ஏழைகளின் ஆன்ம வழிகாட்டியாகவும், க த்தோலிக்க பணியகம் ஒன்றில் திருச்சபையின் வர லாற்றை பற்றி எடுத்துரைப்பவராகவும் இருந்தார். பி ன்னர் கனானிய துறவற சபையில் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். அச்சபைக்கு தேவையான எல்லாவித உதவிகளையும் செய்தார். பின்னர் "கிறி ஸ்துவின் திருக்காயம்" என்றழைக்கப்படும் சபையை தோற்றுவித்தார். பல ஆயர்களின் உதவி கொண்டு அ ச்சபையை வளர்த்தெடுத்தார். இவர் தன் மறைமாவட்ட த்தில் மிஷினரியாக வேலை செய்து, பல மாவட்டங்க ளில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்து, பலரை தன் சபையில் சேர்த்து பணியாற்றினார்.

1855 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால் இவரின் சபை பாப்பரசரின் அங்கீகாரம் பெற்ற சபை யாக அறிவிக்கப்பட்ட பரிந்துரை செய்யப்பட்டு திரு த்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால், 1925 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் பாப்புவின் அங்கீகாரம் பெற்ற சபை யாக அறிவிக்கப்பட்டது. இவர் இறக்கும் வரை பல ஆ ன்மாக்களுக்கு ஆன்ம வழிகாட்டியாகவே திகழ்ந்தார். இவர் சீன நாட்டில் மறைபரப்பு பணியை வளர்க்க பெரு ம்பாடுபட்டார்.


செபம்:
இரக்கத்தின் இறைவா! உம்மீது கொண்ட நம்பிக்கை யால், பலரின் மனக்காயங்களை போக்கி, வழிகாட்டி யாக திகழ்ந்தார் புனித கஸ்பார். எம்மையும் உமது கருவியாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக நாங்கள் வாழ வரம் வாரும்

Friday, 10 June 2016

இன்றைய புனிதர் 2016-06-11 புனித பர்னபா(St. Barnabas ) திருத்தூதர், மறைசாட்சி(Apostle, Martyr)

 

பிறப்பு  --     இறப்பு கி.பி. 61

இவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்லர். தொடக்க த் திருச்சபையின் தந்தையரும், லூக்கா நற்செய்தியா ளரும் இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு, அப்போஸ்தலர் என இவரை அழைத்தார்கள். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்" என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயர் கொடுத்தார்க ள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார் ( தி.ப. 4: 36-37)

பின்பு 3 ஆண்டுகள் கழித்து, மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வந்தார். சீடர்கள் அவர் மனந்திரும்பி யவர் என ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இவ்வே ளையில்தான் "பர்னபா" அவருக்குத் துணை நின்று அவரை திருத்தூதர்களிடம் அழைத்து சென்றார். (தி.ப. 9:27). பின்னர் அந்தியோக்கியா நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால், யெருசலேம் நகரிலிருந்து , இந்த புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்ப தீர்மானித்தார். தூய ஆவியால் நிரம்ப பெற்றவர், ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்குப்போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும், மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சீஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

பின்னர் யூதாவிலும், யெருசலேம் முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பர்னபா அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று, அதை சவுல் வழியாக எருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திரா என்ற ஊரில் கால் ஊனமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் குணமாக்கினார். இதைக் கண்ட அவ்வூரினர் இவர்களை தெய்வங்களாக மதித்து, பலியிட முயன்றனர். அப்போது யூதர்கள் அம்மனிதர்களை தூண்டிவிட்டு பர்னபா மற்றும் பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்து , அவர்களை கல்லால் எறிந்தார்கள் (தி.ப. 14: 18-20).

பின்பு நற்செய்தியாளர் ஜான் மார்க்கை அழைத்து கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின், பம்பிலியா நோக்கிப் புறப்படும்போது, ஜான் மார்க் அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. இதனால் பவுல் வருத்தமுற்றார். இதன்பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றி கடுமையாக கருத்து மோதல் எழுந்தது. இதை தீர்த்து வைக்க யெருசலேமில் முதல் பொதுச்சங்கம் கூடியது. யூதர்கள் விரித்த வலையில் பர்னபா விழுந்ததை எண்ணி பவுல் மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு பர்னபாவுக்கும், பவுலுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று, அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டியபொழுது, ஜான் மார்க்கையும் அழைத்து செல்வோம் என்று பர்னபா கூறியபோது, இதனை பவுல் ஏற்கவில்லை. இதனால் பவுல் தனியாக விடப்பட்டார். அப்போது பர்னபா ஜான் மார்க்குடன் சைப்ரஸ் சென்றார். கி.பி. 61 ல் பவுல் உரோமையில் சிறையிலடைக்கப்பட்டார். அப்போது ஜான் மார்க்கைத் தம்மிடம் அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டார். அவ்வேளையில்தான் பர்னபா கல்லால் எரிந்து கொல்லப்பட்டார். அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில், சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும், அக்கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகின்றது.

செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் தலைவா! நற்செய்தியை பறைசாற்றி, பலவித துன்பங்களை ஏற்று கல்லால் எரிந்து கொல்லப்பட்ட திருத்தூதர் பர்னபாவை நினைவுகூர்ந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்களின் அன்றாட வாழ்வில் நற்செய்தியை வாசிக்காமல் நிற்பதோடு இறைவார்த்தைகளை எமதாக்கி, உமது நற்செய்தியின்படி வாழ்ந்திட உமதருள் தாரும்.

இன்றைய புனிதர் 2016-06-10 புனித.பார்டோ (St.Bardo) மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz)

                            

இன்றைய புனிதர்

2016-06-10

புனித.பார்டோ (St.Bardo)

மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz)


பிறப்பு980ஒப்பர்ஹோப்பன்(Oppershofen), ஹெஸன்(Hessen), ஜெர்மனி

இறப்பு10 ஜூன் 1051பாடர்போர்ன்(Paderborn), ஜெர்மனி

பார்டோ மிகவும் அமைதியானவராகவும் பக்தியானவ ராகவும் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். சிறுவய திலிருந்தே தான் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்திற்கு சென்று, ஆலய பணிகளில் ஈடுபட்டு வந்தார். பார்டோ புல்டாவில்(Fulda) இருந்த ஆசீர்வாதப்பர் சபையில்  சேர்ந்து  குருவானார். குருவானபிறகு ஹெர்ஸ்பெல்டு (Herzfeld) என்ற ஊரிலிருந்த துறவற மடத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அ த்துறவற இல்ல தலைவர் இறந்துவிட்டார். இதனால் அவரை தொடர்ந்து, பார்டோ தலைவர் பொறுப்பேற்று, ஆலயப்பணிகளிலும் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மைன்ஸ் என்ற மறைமாநிலத்திற்கு 1031 ஆம் ஆண்டு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மற்ற வர்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்வையே தியாக மாக்கினார். போதுமான அளவு உணவுகூட உண்ணா மல் வாழ்ந்தார். தன்னுடைய உணவையும், தனக்கு சொந்தமான அனைத்தையுமே ஏழைகளுக்கு கொடு த்துவிட்டு, மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இதனால் திருத்தந்தை 9 ஆம் லியோ அவர்களால் கண்டிக்கப்பட்டார். பணியாற்ற உடலுக்கு சக்தி வேண்டுமென்று திருத்தந்தை அறிவுரை கூறினார். திருத்தந்தையின் ஆசீரையும் அறிவுரையும் பெற்ற பார்டோ, பாடர்போன் என்ற ஊருக்கு இறைபணிக்காக பயணம் செய்யும்போது காலமானார். அவரது கல்லறை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறையை ஏராளமானோர் பார்வையிட சென்றனர். அவர்கள் இவரிடம் மன்றாடும்போது, கேட்டவைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டனர். இன்றுவரை இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்த வண்ணமாக உள்ளது.


செபம்:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று மொழிந்த இறைவா! ஏழைகளின் நல்வாழ்விற்காக, தன்னிடம் இருந்த அனைத்தையுமே புனித பார்டோ தியாகம் செய்தார். நாங்கள் அவரைப்போல எல்லாவற்றையுமே தியாகம் செய்யாவிட்டாலும், ஒருசிலவற்றையாவது பிறருடன் பகிர்ந்து வாழ, எங்களுக்கு நல்ல மனதை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.