Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 4 April 2016
இன்றைய புனிதர் 2016-04-05 புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)
இவர் ஓர் பக்தியான, உன்னதமான குடும்பத்தில், ஆங்கிலேயர் வில்லியம் பெரர் (William Ferrer) மற்றும் ஸ்பானிஸ் பெண் கான்ஸ்டான்ஷியா(Canstantia) என்பவருக்கும் மகனாக பிறந்தார். பிறந்த நாளிலிருந்தே இவரது வாழ்வு ஆரம்பமானது. இவர் பிறந்த அதே நாளில் வாலென்சியாவில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் தம் ஐந்தாம் வயதில் தீவிர நோயால் பாதிக்கப் பட்டார். குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந் தார். இவரது பெற்றோர் இவரை, அன்னைமரியிடமும். ஏழை களிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவராக வளர் த்தனர். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைக ளில் விரதமிருந்து, தான் பெறும் இறைச்சி மற்றும் உயர்தர உணவுகளை தான் உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர் கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார். இதைப் பார்த்த இவர் பெற் றோர் தன் குழந்தையின் தர்ம செயல்களால் ஈர்க்கப்பட்டு, தங் களுக்கென்று இருந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழை களுக்கென்று ஒதுக்கி தன் குழந்தையுடன் சேர்ந்து தாங்களும் தர்மம் செய்தார்கள். வின்சென்ட் எட்டாம் வயதில் படிப்பைத் தொடங்கினார். பன்னிரண்டு வயதில் தத்துவயியலையும் (philosophy), பதினான்காம் வயதில் இறையியலையும்(theology) யாரும் எதிர்பார்க்காத விதமாக திறமையாக படித்து முடித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment