
இன்றைய புனிதர் 2016-04-17
புனித.காதேரி டேக்காக்விதா (Kateri Tekakwitha)
பிறப்பு 1657 நியூயார்க்
இறப்பு 17 ஏப்ரல் 1680
கானாவெக்(Kahnawake), கியூபெக் (Quebec), கனடா முத்திபேறுபட்டம்:22 ஜூன்,1980 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதர் பட்டம்: 21அக்டோபர் 2012, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
சுற்றுசூழல், கைவிடப்பட்டோர், வெளிநாட்டில் வாழ்வோரின் பாதுகாவலர்
காதேரி டேக்காக்விதா 1657 -ல் நியூயார்க்கில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெரியம்மை என்ற நோயால் தாக் கப்பட்டு முகம், உடல் முழுவதிலும் பெரிய வடுக்கள் ஏற்பட்டு மிகவும் அழகு குறைந்தவளாக இருந்தார். இத னால் இவர் தன் பெற்றோரால் கைவிடப்பட்டுஅனாதை குழந்தையாக விடப்பட்டார். இவர் நியூயார்க்கில் கிறி ஸ்துவ ஆலயத்தில் கேத்ரின் டேக்காக்விதா என்று பெயர் மாற்றி ஞானஸ்நானம் பெற்றார். இவர் மோகாக் (Mohawk) மக்களின் "லில்லி" என்றழைக்கப்பட்டார். இவர் மிகவும் பொறுமையானவராக திகழ்ந்தார். இவர் ஓர் உலகப் பெண்ணாக இருந்தாலும், கற்பு என்னும் துற வற வார்த்தைப்பாட்டை, தன் உயிருள்ளவரை ஒழுக்க மாய் கடைபிடித்து வாழ்ந்தார். இவர் தனது 24 ஆம் வய தில் கனடாவிலுள்ள கியூபெக் மாவட்டத்தில், மாண்ட்ர லின் அருகிலுள்ள கானாவெக் என்ற இடத்தில் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் இறந்தார். இவர் இறந்தபின் அண்டிவந்து செபித்தோர்க்கு ஏராளமான நன்மை களை செய்தார். 1980 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் முத்திப்பேறு பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னர்2012 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கானாவெக்(Kahnawake), கியூபெக் (Quebec), கனடா முத்திபேறுபட்டம்:22 ஜூன்,1980 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதர் பட்டம்: 21அக்டோபர் 2012, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
சுற்றுசூழல், கைவிடப்பட்டோர், வெளிநாட்டில் வாழ்வோரின் பாதுகாவலர்
No comments:
Post a Comment