Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 12 April 2016
இன்றைய புனிதர் 2016-04-13 புனித முதலாம் மார்ட்டின் திருத்தந்தை
மார்ட்டின் இத்தாலி நாட்டிலுள்ள உம்பிரியா மாவட்டத்தில் டோடி என்ற ஊரில் பிறந்தார். இவர் 649-653ஆண்டுகளில் உரோ மையில் திருத்தந்தையாக இருந்தார். இவர் மறைசாட்சியாக விண்ணகம் அடைந்த பாப்பரசர்களில் கடைசியானவர். கால ங்காலமாக பின்பற்றி வரும் கத்தோலிக்க விசுவாசத்தை உயி ரைக் கொடுத்து பாதுகாத்தவர். கான்ஸ்டாண்டிநொபிளுக்கு திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான பிறகு பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்தார். அந்நாட் களில் திருச்சபையில் ஒரு குழப்பம் உண்டானது. கிறிஸ்துவி டம் இரு தன்மையா? அல்லது ஒரு தன்மை உண்டா? என்ற வாதம் எழுந்தது. கிறிஸ்துவிடம் மனிதத் தன்மை மட்டுமே உண்டு என்ற தவறான கருத்துக்கு அடிமையாக இருந்த இரண் டாம் கான்ஸ்டான்ஸ் அரசன், இதையே அறிவிப்புச் செய்ய வேண்டுமென்று திருத்தந்தையைக் கேட்டுத் தொல்லை செய் தான். இதனால் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் 649-ல் உரோ மையில் விரைவாக லாத்தரன் பொதுச் சங்கத்தைக் கூட்டி னார். இச்சங்கத்தின் முடிவில் கிறிஸ்துவில் இரண்டு தன்மை கள் உண்டு என்ற மிகத்தெளிவான முடிவை லாத்ரன் பொது சங்கம் அறிவித்தது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment