Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 12 April 2016

இன்றைய புனிதர் 2016-04-13 புனித முதலாம் மார்ட்டின் திருத்தந்தை

                   
                  இன்றைய புனிதர் 2016-04-13

    புனித முதலாம் மார்ட்டின் திருத்தந்தை


பிறப்பு டோடி(Todi), உம்பிரியா மாவட்டம்(Umbria), இத்தாலி

இறப்பு 16 செப்டம்பர், 655 கெர்சொன் (Cherson)

மார்ட்டின் இத்தாலி நாட்டிலுள்ள உம்பிரியா மாவட்டத்தில் டோடி என்ற ஊரில் பிறந்தார். இவர் 649-653ஆண்டுகளில் உரோ மையில் திருத்தந்தையாக இருந்தார். இவர் மறைசாட்சியாக விண்ணகம் அடைந்த பாப்பரசர்களில் கடைசியானவர். கால ங்காலமாக பின்பற்றி வரும் கத்தோலிக்க விசுவாசத்தை உயி ரைக் கொடுத்து பாதுகாத்தவர். கான்ஸ்டாண்டிநொபிளுக்கு திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான பிறகு பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்தார். அந்நாட் களில் திருச்சபையில் ஒரு குழப்பம் உண்டானது. கிறிஸ்துவி டம் இரு தன்மையா? அல்லது ஒரு தன்மை உண்டா? என்ற வாதம் எழுந்தது. கிறிஸ்துவிடம் மனிதத் தன்மை மட்டுமே உண்டு என்ற தவறான கருத்துக்கு அடிமையாக இருந்த இரண் டாம் கான்ஸ்டான்ஸ் அரசன், இதையே அறிவிப்புச் செய்ய வேண்டுமென்று திருத்தந்தையைக் கேட்டுத் தொல்லை செய் தான். இதனால் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் 649-ல் உரோ மையில் விரைவாக லாத்தரன் பொதுச் சங்கத்தைக் கூட்டி னார். இச்சங்கத்தின் முடிவில் கிறிஸ்துவில் இரண்டு தன்மை கள் உண்டு என்ற மிகத்தெளிவான முடிவை லாத்ரன் பொது சங்கம் அறிவித்தது.

இதன் விளைவாக மார்ட்டின் கான்ஸ்டைன்ஸ் மன்னரால் 653-ல் கைதியாக கெர்சோன் என்ற இடத்தில் சிறைப்படுத்தப்ப ட்டார். திருத்தந்தைக்குரிய அடையாளங்கள் அனைத்தையும் அரசன் வெளிப்படையாகவே பறித்துக் கொண்டான். திருத்தந் தை பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, பட்டினி யாக விடப்பட்டார். "எனக்கு அறிமுகமானவர்கள் கூட எனது இடுக்கண் வேளையில் என்னை மறந்துவிட்டனர். நான் இன் னும் உயிரோடிருக்கிறேனா, செத்து மடிந்துவிட்டேனா என்று பார்க்கக்கூட யாருமில்லை. இருப்பினும் எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்று விரும்பும் எல்லாம் வல்ல கடவுள், புனித பேதுருவின் வேண்டுதலால் அனைவரும் கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க அருள்புரிவாராக" என்று திருத்தந்தை மார்ட்டின் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார். இறுதியாக, கிரிமியாத் தீவில் உள்ள கெர்சொனுக்கு நாடுகடத்தப்பட்டு655-ல் செப்டம்பர் 16 -ல் இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! திருத்தந்தையும், மறைசாட்சியுமான புனித முதலாம் மார்ட்டினைப் போல, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவோ, தோல்வியுறவோ விடாமல் எதிர்ப்புகளை மனதார ஏற்று, உமக்கு சான்று பகர்ந்து வாழ, எம் ஆயர்களுக்கும், திருத்தந்தைக்கும் உமதருள் தாரும். ஆமென்.

No comments:

Post a Comment