
இன்றைய புனிதர் 2016-04-26
ட்ரூட்பெர்ட் (Trutpert) மறைசாட்சி
பிறப்பு அயர்லாந்து அல்லது ஜெர்மனி
இறப்பு 607 அல்லது 644
ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் ஜெர்மனியில் ஒரு மதபோதகராக இருந்தார். இவர் அயர்லாந்தில் செல் டிக் துறவி (Celtic monk) என்றழைக்கப்பட்டார். இவர் மறை பரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர ப்ரெய்ஸ்கவ்(Breisgau) நாட்டிலு ள்ள ஆலமனி (Alamanni) வழியாக நாடு திரும்பினார். அப் போது ரைனில்(Rhein) பயணம் செய்யும்போது, ப்ரை பூர்க் ( Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத் தில், சுமார் 25 கிலோமீட்டர், மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.
அப்போது ட்ரூட்பெர்ட் அந்நிலத்திலிருந்த மரங்களை அழித்துவிட்டு புனித பீட்டர் மற்றும் பவுல் தேவாலய த்தை கட்டினார். அங்கு ஓர் வேலையாள் போலவே, துறவி ட்ரூட்பெர்ட் உழைத்தார். ஒரு நாள் வேலை முடி த்துவிட்டு களைப்பாக தூங்கும்போது, தெரியாத நபர் ஒருவர் வந்து அவரை கொன்ற்விட்டான். பின்னர் ஓட் பெர்க்(Otbert) என்பவரால், ட்ரூட்பெர்ட் புதைக்கப்பட்ட இடத்தில், அவர் பெயரில் ஒரு பேராலயத்தை கட்டி னார். இவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே எண்ணிலடங்கா, வேலையை செய் துள்ளார். அவர் 640 - 643 வரை ப்ரெய்ஸ்கவ்-இல் வாழ்ந் தார் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இவ்வாண்டு களில் அங்கே வாழ்ந்த பவர் (Baur) என்பவர் ட்ரூட்பெர்ட் 607 - ல் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு 815 ஆம் ஆண்டு அவரின் எலும்புகள் கண் டுபிடிக்கப்பட்டது. அவர் வாழும் போது எழுதிய அவ ரின் வாழ்க்கை வரலாற்றை 10 மற்றும் 13 ஆம் நூற்றா ண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சரிசெய்து பாதுகாக்கப்படுகின்றது. முன்ஸ்டரில் (Münster) உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் இவரது எலும்புகளும், வரலா ற்று ஆவணங்களும் வைக்கப்பட்டது. அங்கு இப்புனி தருக்கென்று பேராலயமும் உள்ளது
செபம்:
அன்பின் உருவமே எம் இறைவா! உமது சாட்சியாக மரித்த ட்ரூட்பெர்ட்டைப்போல, நாங்களும் எங்கள் வாழ்வின் வழியாக உமக்கு சான்று பகிர்ந்திட உம் அருள் தந்து எம்மை வழிநடத்தும்.
No comments:
Post a Comment