Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 18 April 2016
இன்றைய புனிதர் 2016-04-19 புனித ஒன்பதாம் லியோ, திருத்தந்தை
திருத்தந்தை ஒன்பதாம் லியோ அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோர் இவருக்கு புரூனோ (Bruno) என்று பெயர் சூட்டினர். புரூனோ பிரான்சு நாட்டிலுள்ள தூல்(Toul) என்ற ஊரில் கல்வி பயின்றார். இவர் படிக் கும்போதிலிருந்தே இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். புரூனோ சிறு வயதிலிருக்கும் போதிலி ருந்தே பூசை உதவி செய்வதிலும் பாடல் குழுவோடு இணைந்து திருப்பலியில் பாடல் பாடுவதிலும், ஆடம் பர திருப்பலியில் பங்கெடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டிவந்தார். இறைவன் மீது அளவற்ற அன்பு கொண் டிருந்தார். தினமும் திருப்பலியில் பங்கெடுத்த புரூனோ தானும் குருவாக வேண்டுமென்று ஆசைப்ப ட்டு குருவானார். புரூனோ குருவான பிறகு ஜெர்மனி யிலிருந்த அரசர் இரண்டாம் கோன்ராட்(Konrad II) அவர்களின் குடும்பத்திற்கு ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் திருச்சபை யில் இருந்த அரசியலைப் பற்றியும் படித்தார். அதன் பிறகு பிரான்சு நாட்டிற்கு இறையியல் படிப்பதற்காக அனுப்பப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment