Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 13 April 2016

இன்றைய புனிதர் 2016-04-14 புனித லிட்வினா (Lidwina)


                       
                          இன்றைய புனிதர்
2016-04-14
புனித லிட்வினா (Lidwina)

பிறப்பு 1380 ரோட்டர்டாம், நெதர்லாந்து

இறப்ப 14 ஏப்ரல் 1433 ஷீடாம், நெதர்லாந்து

         புனிதர் பட்டம்: 1890

புனித லிட்வினா 1380 ஆம் ஆண்டு குருத்து ஞாயிறன்று, ஓர் ஏழை பெற்றோருக்கு மகளாக, நெதர்லாந்திலுள்ள ரோட்டர் டாமில் பிறந்தார். இவர் பிறக்கும்போதே மிகுந்த அழகுள்ளவ ளாக பிறந்தார். லிட்வினா தனது 15 ஆம் வயதில் பனிச்சறுக்கல் விளையாட்டில் பங்கேற்றபோது, கால் வழுக்கி கீழே விழுந்து விட்டார். இதில் இவரின் விலா எலும்புகள் முற்றிலும் நொறு ங்கி விட்டது. இதனால் மிகுந்த வலியால் துன்பப்பட்டார். தனது 38 ஆம் வயது வரை பெரும் வேதனையை அனுபவித்து படுக் கையிலேயே தன் காலத்தை கழித்தார். லிட்வினாவிற்கு ஏற்ப ட்ட இவ்விபத்தில் தன் வலது கண் பார்வையை இழந்தார். தன் தலையையும், இடது கையையும் மட்டுமே இவரால் அசைக்க முடிந்தது. பற்கள் வலியால் உணவு உட்கொள்ள முடியாமலும், தூங்க முடியாமலும் வேதனைப்பட்டார். உணவு உட்கொள்ள முடியாததால், வயிற்று பசியாலும், வயிற்று வலியாலும் துடித் தார். இதனால் அல்சர் நோயால் தாக்கப்பட்டார். இவரின் மூக்கி லிருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து கொண்டே இருந் தது. நோய்களின் வலியை தாங்கமுடியாமல் எப்போதும் அழுது கொண்டே இருந்தார். அன்னைமரியிடமும், இயேசுவிட மும் இடைவிடாது செபித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவின் பாடுகளை அனுபவித்தார்.

செபத்தின் வழியாக வலியைத் தாங்கக்கூடிய சக்தியையும், பொறுமையையும், குணம் பெறுவேன் என்ற நம்பிக்கையை யும் பெற்றார். தனது இருபதாம் வயதில் படுக்கையிலிருந் தபடியே புது நன்மை, உறுதிபூசுதலைப் பெற்றார். இதிலிருந்து நாள்தோறும் நற்கருணையைப் பெற்று வந்தார். ஒவ்வொரு நாளும் திவ்விய நற்கருணையை உட்கொண்டபிறகு, இயேசு வின் பாடுகளை, காட்சியாக கண்டார். அவ்வப்போது உயிர்த்த இயேசு, இவருக்கு மலர்களை கொடுத்தார் என்றும், அதன்பிறகு அவரிடமிருந்து புத்தொளியைப் பெற்றதாகவும் லிட்வினாவின் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். லிட்வினா இயேசுவோடு இணைந்து பாடுகளில் பங்குக்கொண்டார்.

திவ்விய நற்கருணையின் வழியாக, தன் உடலுக்கு தேவை யான் சக்தியைப் பெற்று, தம் 38 ஆம் வயதில் உடல் முழுவதும் இருந்த நோய்கள் குணமாக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றார். இவருக்கு உடல் அளவிலும், மன அளவிலும் இருந்த நோய் முற்றிலும் குணமானது. குணம்பெற்ற லிட்வினா, இயேசுவின் சாட்சியாக வாழ்ந்து, தம் வாழ்வின் வழியாக இறைவனின் சீடத்தியானாள்.

இவர் 1433 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் நெதர்லாந்திலுள்ள ஷீடாம் (Schiedam) என்ற ஊரில் தன் பெற்றோரின் இல்லத்தில் இறந்தார். இவரது உடல் ப்ரூசல் (Brussel) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் 1890 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்டார்.


செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! புனித லிட்வினா வைப் போல, உம்மீது நம்பிக்கை வைத்து வாழ வரம் தாரும். எங்களின் உடல் மன நோய்களை, உமக்காக ஏற்றுக் கொண்டு, உம்மை எம் வாழ்வில் பற்றிக்கொண்டு வாழ உமதருள் தாரும்

No comments:

Post a Comment