Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 21 April 2016
இன்றைய புனிதர் 2016-04-22 இயேசு சபையின் அன்னை
இனிகோ (லயோலா இஞ்ஞாசியார்) ஸ்பெயின் நாட்டி ற்கும், பிரான்சு நாட்டிற்கும் இடையே நடந்த போரில், ஸ்பெயின் நாட்டுப் படைத்தளபதியாக பணிபுரிந்தார். அப்போது போரில் அவரின் காலில் குண்டு துளைத்தது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டார். அப்போது பொழுதுபோக்கிற் காக வாசிப்பதற்காக இரண்டு புத்தகங்களை பெற் றார். அந்நூல்களில் ஒன்று புனிதர்களின் வரலாறு. அதை வாசிக்கும்போது அவரை அறியாமல் மனமாறி னார். இச்சூழ்நிலையில் ஆகஸ்டு 1521-ல் ஒருநாள் மாலைப்பொழுதில், அவர் தனிமையில் அவரின் அறை யில் இருக்கும்போது மரியன்னை குழந்தை இயேசு வைக் கையில் தாங்கிக்கொண்டு வந்து காட்சியளித் தார். இக்காட்சியைக் கண்ட இனிகோ அளவில்லா ஆனந்தம் அடைந்தார். தனிப்பட்ட ஆறுதலை உணர்ந் தார். இந்த வேளையில்தான் இனிகோ மனமாற்றத்தின் ஆரம்பநிலையை அடைந்தார். தனது பாவ வாழ்க்கை யின் மீது வெறுப்பும், புனிதர்களின் பாதையில் நடை போட வேண்டுமென்ற ஆவலும் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment