Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 23 April 2016
இன்றைய புனிதர் 2016-04-23 புனித ஜார்ஜ்
பிறப்பு 280
இறப்பு 23 ஏப்ரல் 303
இவர் பாலஸ்தீன நாட்டில், விட்டா என்ற ஊரில் கொனிஸ்டாட்டின் அரசன் காலத்திற்கு முன்பு மறை சாட்சியாக இறந்தார். இவர் எப்படி இறந்தார் என்பதை ப்பற்றி தெளிவாக அறியமுடியவில்லை. இருப்பினும் சில வரலாறுகள் இவ்வாறு கூறுகின்றது. புனித ஜார்ஜ் முதலில் ஒரு படைவீரராக பணியாற்றினார். பின்னர் கிறிஸ்துவ படையில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அவர் முதலிலிருந்த படையில், தான் வகித்த பெரிய பதவியைக் கிறிஸ்துவுக்காக உதறி தள்ளிவிட்டு, தன் உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விட்டு வந்துள்ளார். பின்பு தமக்கென்று எதையும் வைத் துக்கொள்ளாமல், உலக கவலைகளுக்கு இடம் கொடுக் காமல், விசுவாசம் என்ற மார்பு கேடயத்தை அணிந்து கொண்டார். பிறகு கிறிஸ்துவுக்காக தன் உயிரை தியா கம் செய்யவும் துணிந்தார். கிறிஸ்துவின் துணிச்ச லான போர்வீரரான இவர், தூய ஆவியால் உந்தப்பட்டு, அன்பு என்னும் நெருப்பால் ஈர்க்கப்பட்டார். சிலுவை யின் வெற்றிக்கொடியை ஏந்தி இறுதிவரை விசுவாசத் திற்காக போராடினார். தீமையின் இருப்பிடமாகிய அலகையை வெற்றி கொண்டார். தன்னுடன் இருந்த தோழர்களையும் பாடுகளை துணிவுடன் ஏற்று போரிட ஊக்குவித்தார், அவர் உடல் எதிரிகளிடம் ஒப்படைத்த போது, அவரின் ஆன்மாவை மட்டும் இறைவன் பாதுகா த்தார் என்பதில் தான் இவர் கிறிஸ்துவின் மீது கொண் டிருந்த விசுவாசம் வெளிப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment