Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 27 April 2016

இன்றைய புனிதர் 2016-04-28 புனித பீட்டர் ஷானல்(Peter Chanel) குரு, மறைசாட்சி

                                     
                                       இன்றைய புனிதர் 2016-04-28
                               புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)
                                         
குரு, மறைசாட்சி

பிறப்பு  1803 குவேட்(Cuet), பிரான்ஸ்

இறப்பு  1841 புத்துனா தீவு(Island of Futuna)
புனிதர் பட்டம்: 13 ஜூன் 1954 திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்

பீட்டர் ஷானல் தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே புது நன்மை வாங்கினார். அன்றிலிருந்தே மறை பரப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னை யிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வி யைக் கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடு பட்டார். பின்னர் தம் 16 ஆம் வயதில் குருமடத்தில் சேர் ந்து குருவானார். அதன்பிறகு நான்காம் ஆண்டுகள் கழித்து "மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந் தார். பின்னர் 1837 ஆம் ஆண்டு தனது 34 ஆம் வயதில் தம் சபைத்தோழர் ஒருவருடன் ஒசினியாத் தீவுக்கு மறைப ரப்பு பணிக்காக புறப்பட்டுஸ் சென்றார். அப்போது பசி பிக் பெருங்கடலை ஒட்டிய புத்தினா தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட் டார். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணி யை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரை யேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த் தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்புக் கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளி கூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய் தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாச த்தை சுவைத்த புத்தினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும் போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரிய ன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப் பார்.

அப்போது புத்துனாதீவை ஆட்சி செய்த அரசனின் மகன் அருட்தந்தையிடம் அதிகம் பாசமாக இருந்தான். இதனால் தானும் ஞானஸ்நானம் பெற விரும்பினான். இதனால் கோபமுற்ற தீவின் அரசன், தன் படையாட் களை அனுப்பி பீட்டர் ஷானலை கொடுமையாக கொல் லக்கூறினான். அதனால் அக்கொடிய மனிதமிருகங் கள் அருட்தந்தை பீட்டர் ஷானலை 1842 ஆம் ஆண்டு தடிகளால் அடித்தே கொன்றனர். இவரோடு சேர்ந்து புத்தினா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அர சன் கருதினான். ஆனால் இதற்கு எதிர்மாறாக அருட்த ந்தை இறந்த இரண்டே ஆண்டுகளில் புத்தினா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறை பரவியது. ஒசியானியாத் தீவுகள் (Ozeanien) முழுவதும் இன்றுவரை கிறித்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதி யில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரி ப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட் டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழி யாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உண ர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்க ளால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எம க்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.

No comments:

Post a Comment