
இன்றைய புனிதர் 2016-04-28
புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)
குரு, மறைசாட்சி
பிறப்பு 1803 குவேட்(Cuet), பிரான்ஸ்
இறப்பு 1841 புத்துனா தீவு(Island of Futuna)
புனிதர் பட்டம்: 13 ஜூன் 1954 திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்
பீட்டர் ஷானல் தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே புது நன்மை வாங்கினார். அன்றிலிருந்தே மறை பரப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னை யிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வி யைக் கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடு பட்டார். பின்னர் தம் 16 ஆம் வயதில் குருமடத்தில் சேர் ந்து குருவானார். அதன்பிறகு நான்காம் ஆண்டுகள் கழித்து "மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந் தார். பின்னர் 1837 ஆம் ஆண்டு தனது 34 ஆம் வயதில் தம் சபைத்தோழர் ஒருவருடன் ஒசினியாத் தீவுக்கு மறைப ரப்பு பணிக்காக புறப்பட்டுஸ் சென்றார். அப்போது பசி பிக் பெருங்கடலை ஒட்டிய புத்தினா தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட் டார். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணி யை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரை யேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த் தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்புக் கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளி கூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய் தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாச த்தை சுவைத்த புத்தினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும் போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரிய ன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப் பார்.
No comments:
Post a Comment