Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 15 April 2016

இன்றைய புனிதர் 2016-04-16 புனித. லூர்து நகரின் பெர்னதெத்

          

                        
              இன்றைய புனிதர் 2016-04-16
             புனித. லூர்து நகரின் பெர்னதெத்

          பிறப்பு 7 ஜனவரி 1844பிரான்ஸ்
          இறப்பு  16 ஏப்ரல் 1879 பிரான்ஸ்

முத்திபேறுபட்டம்: 14 ஜூன் 1925 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
புனிதர் பட்டம்: 8 டிசம்பர் 1933 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்

1844 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் நாள் பிரான்சிலுள்ள ஹவுட்டஸ் பைர்னஸ் என்ற ஊரில் பிரான்ஸ் மில்லர், லூயிஸ் என்பவரின் முதல் மகளாக பிறந்தார். இவர் பிறந்த இரண்டாம் நாள் அங்கிருந்த உள்ளூர் ஆலய த்தில் பெர்னதெத் என்ற பெயர் வழங்கப்பட்டு திரு முழுக்கு கொடுக்கப்பட்டது. இவர் திருமுழுக்கு பெற்ற அந்த நாள் தன் பெற்றோரின் திருமண நாள். இவரின் ஞானத்தாய் தன் தாய் லூசியாவின் உடன்பிறந்த சகோ தரி. இவர் ஓர் விதவைப் பெண். ஆனால் அதிகம் பணம் படைத்தவராகவும், மிகுந்த பக்தியுள்ளவராகவும் இரு ந்தார். சிறுமி பெர்னதெத் பிறந்தபோது, இவரின் பெற் றோர் மிகவும் வறுமையில் இருந்தனர். தீவிர வறுமை யால் குழந்தை பெர்னதெத் நோயால் தாக்கப்பட்டார். இவர் வாழ்நாள் முழுவதும் குறுநடை போடும் குழந் தையாகவும், ஆஸ்துமா, காலரா போன்ற கடுமையான நோயாலும் பாதிக்கப்பட்டு வாழ்ந்தார்.


பெர்னதெத், நெவேர் என்ற ஊரில் Sisters of Charity என்ற ழைக்கப்படும் அருட்சகோதரிகளால் நடத்தப்பட்ட பள்ளியில் படித்தார். பெர்னதெத்தின் குடும்பம், வறு மையால் வாடியதால் தாய் லூயிசின் உறவினர், குகை யின் அருகிலிருந்த ஒரு சிறிய சிறை போன்ற அறை யை இலவசமாக தங்குவதற்கென கொடுத்தனர். பெர்னதெத் தன் குடும்பத்தின் வறுமையால், தன் ஊரிலிருந்த குகையின் அருகிலிருந்த காட்டுப்பகுதி க்கு சென்று விறகு சேகரித்து வருவார். அப்போது தன் 14 ஆம் வயதில் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி பதினோராம் நாள் தன் உறவினர் மற்றும் தன் சகோதரி மேரியுடன் விறகு சேகரிக்க மசபியேல் குகைக்கு அருகில் சென் றனர். விறகு சேகரித்து வீட்டிற்கு திரும்பும்போது ஆற் றை கடந்து செல்ல வேண்டியதாக இருந்தது. இதனால் பெர்னதெத் நடக்கமுடியாமல் மிகவும் மெதுவாக நட ந்து சென்றார். நண்பர் ஆண்ட்ரே மற்றும் சகோதரி மேரி இருவரும் சில அடிகள் தூரம் பெர்னதெத்துக்கு முன்னால் நடந்து சென்றனர். அப்போதுதான் பெர்ன தெத் முதல் காட்சி கண்டார். இதமான காற்று பெர்னதெத்தை சுற்றிவளைத்தது. மென்மையான மிகவும் அழகுவாய்ந்த ஒளிவந்து சென்றது. இயற்கையான ரோஜா மலர்கள் கொட்டியது. லேசான இருட்டாக இருந்த இடத்தில், வெண்மையான உருவம் வந்து சென்றது. இது போன்று 18 முறை மிகக் குறுகிய காலத்தில் காட்சி கண்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் மட்டுமே அம்மாபெரும் பேரொளியை கண்டார். நண்பர் ஆண்ட்ரோ மற்றும் மேரி எப்போதும் உடனிருந்தபோதும் இக்காட்சியை அவர்களால் காண முடியவில்லை.

1866 பிப்ரவரி 14 அன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடித்துவிட்டு, சகோதரி மேரி மற்றும் சில பெண்கள் குகைக்குச் சென்றனர். அப்போது பெர்னதெத் மீண்டும் அவ்வுருவத்தைப் பார்த்தார். உடனே முழந்தாள் படியி ட்டு வணங்கினார். அப்போது உடன் வந்த பெண்கள் கையில், ஆலயத்திலிருந்து தாங்கள் கொண்டுவந்த ஆசீர்வதிக்கப்பட்ட புனித நீரை ஒருவர் மேல் ஒருவர் தெளித்து விளையாடினர். புனித தண்ணீர் தரையில் பட்டவுடன் அவ்வுருவம் காணாமல் போனது. உடன் வந்த பெண்கள் தான், அவரை கொன்றுவிட்டனர் என் றெண்ணி, பெர்னதெத் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பிப்ரவரி 18 ஆம் நாள் மீண்டும் அதே உருவத்தை கண்டார். அப்போது அவ்வுருவம் பெர்னதெத்தை "தின மும் குகைக்கு வா" என்று கூறியது. அதன்பிறகு தினந் தோறும் குகையில் ஒரு காட்சியை கண்டார். மீண்டும் 1858 ல் பிப்ரவரி 11 மற்றும் ஜூலை 16 ஆம் தேதிகளில் காட்சி அளித்தார். பின்னர் மீண்டும் அன்னையின் மசபியேல் என்னும் குகையில் தோன்றி, "நானே அமல உற்பவம்" என்று கூறி, தனக்கு ஓர் ஆலயம் எழுப்பும்படி மரியன்னை சிறுமியிடம் கூறினார். மீண்டும் பிப்ரவரி 24 ஆம் நாள் 18 ஆவது முறையாக அன்னை காட்சிய ளித்து " உபவாசம் இருந்து செபம் செய்ய சொல்லிக் கூறினார். முதலில் பெர்னதெத் கூறியதை யாரும் நம்பவில்லை. ஆனால் நாளடைவில் இது வேகமாக பரவியது. பிறகு திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களால் அன்னைக்கென்று ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு, உலகின் முக்கிய கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றாக உள்ளது.

அதன்பிறகு தனது 35 ஆம் வயதில் கடும் நோயால் இறந்தார். அவரின் உடல் St.Gildard Convent -ல் அடக்கம் செய்யப்பட்டது. இவர் நோயாளிகளுக்கும், வறுமையில் வாடுவோர்க்கும், கால்நடை மேய்ப்போர்க்கும் பாதுகாவலியாக உள்ளார்.


செபம்:
அன்புத் தந்தையே இறைவா! புனித பெர்னதெத் அன்னையின் மேல் பாசமும், பக்தியும் கொண்டு வாழ்ந்தது போல, நாங்களும் அன்னையின் பக்தர்களாய் வாழ்ந்திட உமது வரம் தாரும்!

No comments:

Post a Comment