Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 1 April 2016
இன்றைய புனிதர் 2016-04-01 புனித.ஹியூகோ (Hugo) கிரனோபிள் ஆயர்
புனிதர் பட்டம் : 1134
கி.பி. 1053 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள வாலேன்சா (Valenza) என்ற ஊரில் ஹியூகோ பிறந்தார். ஆழ்ந்த இறைப்பற்று க்கொண்ட இவர் பெற்றோர், தன் மகனை ஞானத்திலும், அறிவி லும், பக்தியிலும், வளர்த்தெடுத்தார்கள். சிறுவயதிலிருந்தே இறைவனை நாடி செபிப்பதில் இவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இவரது இறைப்பற்றும், ஆன்மீக தாகமும் இவருடன் படித்த மற்ற மாணவர்களுக்கும் ஊரில் உடன் வாழ்ந்த சிறுவர் களுக்கும் எடுத்துக்காட்டாய் இருந்தது. தன்னை துன்புறுத்திய வர்களை மன்னித்து அன்பு செய்வதிலும், மகிழ்ச்சிப்படுத்து வதிலும் சிறந்தவராக இருந்தார். தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு, ஆலய பணிகளில் ஈடுபட்டு புதிய பாடல்களை உருவா க்கி, திருப்பலியில் பக்தியோடு பாடி தனது வாழ்வை ஆலயத் திலேயே செலவழித்தார். அன்றாட கல்வாரி பலியில் பங்கெடு த்த ஹியூகோ தானும், ஓர் குருவாக வேண்டும் என்று ஆசைப்ப ட்டு, இறைவனால் தூண்டப்பட்டு, தனது விருப்பத்தை அன் றைய நாளில் ஆயராக இருந்தவரிடம் தெரிவித்து, குருமடத் தில் சேர்ந்து குருவானார். குருவான நாளிலிருந்து இவரின் அற்புதமான மறையுரையால் பலரின் பாதைகளை மாற்றி இறைவன்பால் ஈர்த்தார். இதனையறிந்த மற்ற ஆயர்களும், குருக்களும் இவரை ஆயராக திருநிலைப்படுத்த தயார் செய்த னர். ஆனால் தான் ஓர் ஆயராக விருப்பமில்லை என்று தெரிவி த்தார். மீண்டும் பல ஆண்டுகள் சென்று தூய ஆவியானவரால் உந்தப்பட்டு, பலரின் விருப்பத்தை நிறைவேற்ற ஆயராக பொறு ப்பேற்க சம்மதித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment