Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 19 April 2016

இன்றைய புனிதர் 2016-04-20 புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau)

                  
             இன்றைய புனிதர் 2016-04-20

        புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau)

பிறப்பு 1170 கொலோன் (Cologne)

இறப்பு 20 ஏப்ரல் 1188 ஷொய்னவ் (Schoenau)

ஹில்டேகுண்ட் 1170 ஆம் ஆண்டு கொலோன் மறைமாவ ட்டத்தில் பிறந்தார். இவருக்கு 12 வயது இருக்கும்போது, தன் தந்தையுடன் புண்ணிய பூமிக்கு(Holy Land) திருயாத் திரை சென்றார். கப்பலில் பயணம் செய்யும்போது இவ ரின் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டார். இதனால் ஹில்டேகுண்ட் புனித பயணத்தை நிறைவேற்ற முடி யாத நிலை ஏற்பட்டது. அப்போது அவரின் தந்தை ஹில் டேகுண்ட்-ஐ அழைத்து, தனக்கு நல்ல உடையுடு த்தி,  தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போக சொன் னார். அதோடு ஹில்டேகுண்ட்-இன் பெயரை யோசேப்பு என்று மாற்றச் சொன்னார். ஆனால் ஹில்டேகுண்டால் தன் தந்தையின் ஆசையை கப்பலில் நிறைவேற்ற முடியாமல் போனது. கப்பல் எருசலேமை அடைந்தது.

அப்போது ஹில்டேகுண்ட் தன் தந்தையின் விருப்ப த்தை நிறைவேற்ற எருசலேம் தேவாலயத்தில் செபவழி பாடு வைத்து செபித்தார். ஆலயத்தை விட்டு ஹில்டேகு ண்டும், அவரின் தந்தையும் வெளியே வந்தபோது யாரென்று அடையாளம் தெரியாத ஒருவர், இவர்களு க்கு ஆடையையும் இன்னும் அங்கு தங்குவதற்கு தேவை யான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, உடன் அழைத்துச் செல்ல காத்துக்கொண்டிருந்தார். பின்னர் தந்தையும், ஹில்டேகுண்ட்டும் அம்மனித ரோடு சென்றனர். முன்பின் தெரியாத அம்மனிதரின் உதவியால் தன் தந்தையின் நோய் குணமாக்கப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்பினர்.

அதன்பிறகு ஹில்டேகுண்ட் பல காரணங்களால் துறவி யாக வேண்டுமென்று விரும்பினார். தன் தந்தையின் அனுமதி பெற்று 1187 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டிலு ள்ள ஹைடல்பெர்க் –இல் (Heidelberg) இருந்த சிஸ்டர்சி யன் துறவற சபையில்(Cistercian) சேர்ந்தார். அவர் துறவி யாவதற்குமுன் பயிற்சி பெறுவதற்காக ஷொய்னவ் விலிருந்த பயிற்சி இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் நவதுறவகத்தில் இருக்கும்போது "யோசேப்பு" என்னும் பெயர்மாற்றம் பெற்று, புதிய துறவற உடையும் பெற்றுக்கொண்டார். யோசேப்பு நவதுறவகத்தில் இருக்கும்போது பல்வேறு சோதனை களுக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு நோய் முற்றி ப்போனதால், உயிரை காப்பாற்ற முடியாமல், நவதுற வகத்திலேயே 1188 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் இறந்தார்.

சிஸ்டர்சியன் துறவறசபையில் நவதுறவகத்தில் இறந் தவர்களில் இவரே முதலானவர். இவரின் ஆன்மீக வாழ்வு இன்று வரை சிஸ்டர்சியன் சபையில் பயிற்சியகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் முன்மாதிரி யாக உள்ளது.


செபம்:
குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா! துறவிகளாக தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, பயிற்சி இல்லத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு இளம் உள்ளங்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை பெற்று, உம் பாதையை தொடர உம் வரம் தாரும்!

No comments:

Post a Comment