Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 14 April 2016
இன்றைய புனிதர் 2016-04-15 முத்திபேறுபெற்ற. சீசர் பஸ் (Caesar by bus) சபை நிறுவுனர்
சீசர் 1544 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி பிரான்சு நாட்டிலுள்ள கவைலன் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல ஆண்டுகள் ஓர் அரசனின் படையில் சேர்ந்து, படை வீரராக பணியாற்றினார். போர் முடிந்து வீடு திரும்பிய விடுமுறை நாட்களில், கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் தன் நேரத்தை செலவழித்தார். பின்னர் பிரான்சு நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியை முற்றுகையிட பிரெஞ்சு இராணுவத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது சீசர் பஸ் தானும், கடற்படை இராணுவத்தில் சேரவேண்டுமென்று முடிவு செய்தார். ஆனால் இவர் ஒவிங்ஸ்(Owings) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இம்முயற்சியை கைவிட்டார். மூன்று ஆண்டுகள் வரை, போரில் பங்கேற்க கூடாது என்றும், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் இராணுவ படை அதிகாரி உத்தரவிட்டார். இந்த மூன்று ஆண்டுகளில் போரில் மக்களை கொன்று குவித்ததை நினைத்த சீசர் பஸ் மிகவும் மன வேதனைப்பட்டார். இப்பாவங்களுக்கு பரிகாரம் செய்ய, பல பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். தன் வாழ்வின் பாதையை மாற்றி அமைத்தார். தான் வைத்திருந்த பணத்தைக் கொண்டு, ஏழைகள் பலருக்கு உதவினார். பலரின் நோய்களை குணமாக்க பணம் செலவழித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment