Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 3 December 2015

இன்றைய புனிதர் 2015-12-03 மறைப்பணியாளர் பிரான்சிஸ் சவேரியார் Francis Xavier SJ

                                     

பிறப்பு07 ஏப்ரல் 1506,நாவரா Navarra, ஸ்பெயின்

இறப்பு03 டிசம்பர் 1552,சான்சியான் தீவு Sancian, சீனா

முத்திபேறுபட்டம்: 1619, திருத்தந்தை 5 ஆம் பவுல் புனிதர் பட்டம்: 1622, திருத்தந்தை 15 ஆம் கிரகோரி இந்தியாவின் பாது காவலராக: 1904, திருத்தந்தை 10 ஆம் பயஸ் மறைப்போதக நாடுகளின்  பாதுகாவலராக: 1927, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: இந்தியா, கிழக்கு ஆசிய நாடுகள், மறைப்பணி யாளர்கள், கப்பலோட்டிகள், கொள்ளை நோயிலிருந்து

இவர் 1525 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் தனது கல்லூரிப்படிப்பை முடித்தார். அங்குதான் லயோலா நகர் புனிதர் இக்னேசியஸ் (Ignatius Loyola) அவர்களின் நட்பை பெற்றார். 1534 ஆம் ஆண்டு பிரான்சிஸ் சவேரியார் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து புனித மரியன்னையின் முன் தனது வார்த்தைப்பாடுகளை பெற்றனர். பின்னர் 24ஜூன் 1537 ஆம் ஆண்டு வெனிசில் (Venice) தனது குருப்பட்டம் பெற்றார். பிறகு 1538 ஆம் ஆண்டு இக்னேசியஸ் உரோம் நகரில் நிறுவிய இயேசு சபைக்கு உதவினார். அச்சபையானது 27 செப்டம்பர் 1540 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் பவுல் அவர்களின் அங்கீகாரம் பெற்றது. இதற்காக சவேரியார் பல பணிகளை செய்து உதவினார். அதன்பிறகு 1541 ஆம் ஆண்டு ஏபர்ல் 7ஆம் நாள் தனது 35 ஆம் வயதில் மறைபரப்பு பணிக்காக இந்தியாவை நோக்கி பயணம் செய்தார்.

இவர் 13 மாதங்கள் கப்பலில் பயணம் செய்து கோவாவை அடைந்தார். அங்கு அவர் 2 ஆண்டுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மக்களிடையே வேலை செய்து மறைப்பணியாற்றினார். 1544 ஆம் ஆண்டில் ஒரு சில மாதங்களில் ஏறக்குறைய 10,000 மீனவர்களை மனமாற்றி திருமுழுக்கு கொடுத்தார். 1545 ஆம் ஆண்டு சென்னையை நோக்கி பயணம் செய்து, பின்னர் மலாக்கா தீவை (Malakka) அடைந்தார். அவர் சென்ற இடமெல்லாம் மொழியை கற்றுக்கொண்டு, மறைப்பணியாற்றி திருமுழுக்கு கொடுத்து மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார். அச்சமயத்தில், தான் ஆற்றும் பணிகளை குறித்து ரோமிற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். இவர் ஏறக்குறைய 1500 மடல்கள் எழுதியுள்ளார்.

அதன்பிறகு 1547ஆம் ஆண்டில் மலாக்கா தீவிலிருந்து மறைப்பரப்புப்பணிக்காக ஜப்பான் நோக்கி பயணம் செய்தார். அங்கும் 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்குக்கொடுத்து திருமறையை பரப்பினார்.1550ஆம் ஆண்டு தன்னுடன் சில இயேசு சபை மறைப்பணியாளர்களை அழைத்து கொண்டு ஜப்பானில் மியாக்கோ (Miyako) என்ற இடத்திற்கு கால்நடையாகவே நடந்து சென்று மறைப்பணியாற்றினார். அங்கு அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மீண்டும் 1551ல் இந்தியாவை நோக்கி பயணமானார். அப்போது தான் இவர் இந்தியாவில் நிறுவிய சபைகளுக்குத் தலைவர் பொறுப்பை ஏற்கும் செய்தியை கேட்டார். இந்தியாவை அடைந்து சிலகாலம் பணியாற்றியபின் சீனாவிலும், மறைப்பணி ஆற்றவேண்டுமென்ற பேராவலில் தனது 46வது பிறந்தநாளை 1552 ஆம் ஆண்டு சிறப்பித்த பின் சீனாவை நோக்கி பயணம் செய்தார்.

அப்போது சான்சியான் தீவை அடைந்தார். அங்குதான் போர்த்துக்கீசியர்களும் சீன வியாபாரிகளும் சந்தித்தனர். அவர். அம்மக்களிடையே அவ்விடத்தில் மறைப்பணியாற்றினார். அங்கு சிலர் இவருக்கெதிராக செயல்பட்டனர். இதனால் அவர் அம்மக்களால் பிடிபட்டார். ஏராளமான இடங்களில் மறைப்பணியாற்றிய சவேரியார் உடல் நோயால் பாதிக்கப்பட்டு தன் சக்தியை இழந்தார். பணி செய்ய முடியாத நிலையில் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து நற்பணியாற்றினார். அனைவரும் இவரைக் கண்டு வியக்கும் விதத்தில் இறைவனடி சேர்ந்தார். இவரின் உடல் இயேசு சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டு கோவாவில் வைக்கப்பட்டது. இன்று வரை அழியாமல் உள்ள இவரின் உடலை உலகின் பல பகுதி மக்களுக்கும் கோவா சென்று அவரை தரிசித்து புதுமைகளை பெற்று வருகின்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனையால் விசுவாசத்தின்மீது இவர் கொண்டிருந்த அதே ஆர்வத்தை எங்களுக்கும் தந்தருளும். உம் திருச்சபை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவுவதைக் கண்டு மகிழ்கின்றோம். இந்திய நாட்டில் உம் விசுவாசம் ஓங்கி வளர்ந்து, உம் நம்பிக்கையை பரப்ப மேன்மேலும் எமக்கு உதவி செய்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இவர் 13 மாதங்கள் கப்பலில் பயணம் செய்து கோவாவை அடைந்தார். அங்கு அவர் 2 ஆண்டுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மக்களிடையே வேலை செய்து மறைப்பணியாற்றினார். 1544 ஆம் ஆண்டில் ஒரு சில மாதங்களில் ஏறக்குறைய 10,000 மீனவர்களை மனமாற்றி திருமுழுக்கு கொடுத்தார். 1545 ஆம் ஆண்டு சென்னையை நோக்கி பயணம் செய்து, பின்னர் மலாக்கா தீவை (Malakka) அடைந்தார். அவர் சென்ற இடமெல்லாம் மொழியை கற்றுக்கொண்டு, மறைப்பணியாற்றி திருமுழுக்கு கொடுத்து மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார். அச்சமயத்தில், தான் ஆற்றும் பணிகளை குறித்து ரோமிற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். இவர் ஏறக்குறைய 1500 மடல்கள் எழுதியுள்ளார்.

அதன்பிறகு 1547ஆம் ஆண்டில் மலாக்கா தீவிலிருந்து மறைப்பரப்புப்பணிக்காக ஜப்பான் நோக்கி பயணம் செய்தார். அங்கும் 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்குக்கொடுத்து திருமறையை பரப்பினார்.1550ஆம் ஆண்டு தன்னுடன் சில இயேசு சபை மறைப்பணியாளர்களை அழைத்து கொண்டு ஜப்பானில் மியாக்கோ (Miyako) என்ற இடத்திற்கு கால்நடையாகவே நடந்து சென்று மறைப்பணியாற்றினார். அங்கு அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மீண்டும் 1551ல் இந்தியாவை நோக்கி பயணமானார். அப்போது தான் இவர் இந்தியாவில் நிறுவிய சபைகளுக்குத் தலைவர் பொறுப்பை ஏற்கும் செய்தியை கேட்டார். இந்தியாவை அடைந்து சிலகாலம் பணியாற்றியபின் சீனாவிலும், மறைப்பணி ஆற்றவேண்டுமென்ற பேராவலில் தனது 46வது பிறந்தநாளை 1552 ஆம் ஆண்டு சிறப்பித்த பின் சீனாவை நோக்கி பயணம் செய்தார்.

அப்போது சான்சியான் தீவை அடைந்தார். அங்குதான் போர்த்துக்கீசியர்களும் சீன வியாபாரிகளும் சந்தித்தனர். அவர். அம்மக்களிடையே அவ்விடத்தில் மறைப்பணியாற்றினார். அங்கு சிலர் இவருக்கெதிராக செயல்பட்டனர். இதனால் அவர் அம்மக்களால் பிடிபட்டார். ஏராளமான இடங்களில் மறைப்பணியாற்றிய சவேரியார் உடல் நோயால் பாதிக்கப்பட்டு தன் சக்தியை இழந்தார். பணி செய்ய முடியாத நிலையில் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து நற்பணியாற்றினார். அனைவரும் இவரைக் கண்டு வியக்கும் விதத்தில் இறைவனடி சேர்ந்தார். இவரின் உடல் இயேசு சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டு கோவாவில் வைக்கப்பட்டது. இன்று வரை அழியாமல் உள்ள இவரின் உடலை உலகின் பல பகுதி மக்களுக்கும் கோவா சென்று அவரை தரிசித்து புதுமைகளை பெற்று வருகின்றனர்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனையால் விசுவாசத்தின்மீது இவர் கொண்டிருந்த அதே ஆர்வத்தை எங்களுக்கும் தந்தருளும். உம் திருச்சபை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவுவதைக் கண்டு மகிழ்கின்றோம். இந்திய நாட்டில் உம் விசுவாசம் ஓங்கி வளர்ந்து, உம் நம்பிக்கையை பரப்ப மேன்மேலும் எமக்கு உதவி செய்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment